உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,

நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,

உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,

1.)Google Account

2.)Wipe data(format,factory reset)

...

Google Account

(பலர் இதற்கு internet connection தேவை என்று

நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)


STEP 1


உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்...


STEP 2

கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,

பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து

Sign in கொடுங்கள் ...

STEP 3


இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து

கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!

WIPE DATA


1.)உங்கள் போனை switch off செய்யுங்கள


2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ...

((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))

3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ...


4.)recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்...


5.)இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்....


அவ்வளவுதான் !!!! எளிமையாக இருந்ததா?

இதுபோல் தகவலுக்கு இணைந்திருங்கள் ...இதை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்..

சிதம்பரம் ‎நடராஜர்‬ கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் !!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

(11)மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொங்கதேச தங்கம் கொண்டு (கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே) பொன் ஓடு அமைத்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொங்கதேச தங்கம் கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே பொன் ஓடு அமைத்துள்ளனர்.


கீழ்கரைப் பூந்துறை நாட்டின் இணைநாடு பருத்திப் பள்ளிநாடு ஆம். அந்நாட்டில் உள்ள கஞ்சமலையில் ஒரு சிறு வாரி உற்பத்தியாகி வருகிறது. அத மகடஞ்சாவடி ரைல்வே ஸ்டேஷன் ஓரமாகத் தெற்கு நோக்கிச் செல்கின்றது. அதனைப் பொன்னி ஆறு என்பர். அதிலுள்ள மணலைக் கரைத்துப் பொன் சன்னமெடுக்கிறார்கள். எட்டரை மாற்றுண்டு.

 இது போற் கொங்கு மண்டலத்தும் பொற்கனி உள்ள இடங்களிருக்கின்றன. ஆதித்த சோழன் தில்லையை கனக சபையாக்கப் பிரயத்தனப்பட்ட சமயத்தில் கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே பொன் ஓடு பாவினன். (இக்காலத்தில் ஆய்வாளர்கள் தங்கம் இல்லை என்றும் பொன்னி ஆறு கால மாற்றத்தால் இயற்கையால் அழிந்துவிட்டதேன்றும் கூறிவிட்டனர்)


சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வமெ னப்பறைபோக்
கெட்கட் கிறைவ னிருக்கும் வேளூர்மன் னிடங்கழியே
                         (நம்பியாண்டார்நம்பி திருவந்தாதி)
கொங்கு மண்டல சதகப்பாடல்
பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே.


இந்த செய்தியை சிதம்பர கோவில் கல்வெட்டுகளும் நம்பியாண்டார் நம்பியின் திருவந்தாதியும், சேக்கிழார வாக்கும் உறுதி செய்கிறது.

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..‪
#‎Centre‬ Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..?


திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே கூறிவிட்டது.

வாழ்க தமிழ்...

வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

தயிரை  என்ன வெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா..?


1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.

ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்

111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க‌ப்பா..

#A
Ambarella ------ அம்பிரலங்காய்
Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ------ சருக்கரை பாதாமி
Annona ------ சீத்தாப்பழம்
Annona muricata ------ முற்சீத்தாப்பழம்
Avocado ------ வெண்ணைப்பழம்

#B

Banana ------ வாழைப்பழம்
Batoko Plum ------ 'லொவிப்'பழம்
Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
Bilberry ------ அவுரிநெல்லி
Bitter Watermelon ------ கெச்சி
Blackberry ------ நாகப்பழம்
Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry ------ அவுரிநெல்லி
Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter fruit ------ ஆனைக்கொய்யா

#C

Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit ------ முந்திரிப்பழம்
Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
Cherry ------ சேலா(ப்பழம்)
Cherimoya ------ சீத்தாப்பழம்
Chickoo ------ சீமையிலுப்பை
Citron ------ கடாரநாரத்தை
Citrus Aurantifolia ------ நாரத்தை
Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்
Citrus medica ------ கடரநாரத்தை
Citrus sinensis ------ சாத்துக்கொடி
Citrus reticulata ------ கமலாப்பழம்
Clementine ------ நாரந்தை
Cocoa fruit ------ கோக்கோ பழம்
Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்
Cranberry ------ குருதிநெல்லி
Cucumus trigonus ------ கெச்சி
Cucumber ------ வெள்ளரிப்பழம்
Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்

#D

Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ------ பேரீச்சம் பழம்
Devilfig ------ பேயத்தி
Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
Duku ------ 'டுக்கு'
Durian ------ முள்நாரிப்பழம்,

#E

Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்
Emblica ------ நெல்லி

#F

Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா
Fig ------ அத்திப்பழம்

#G

Gooseberry ------ நெல்லிக்காய்
Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Guava ------ கொய்யாப்பழம்

#H

Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie ------ அரைநெல்லி
Honeydew melon ------ தேன் முழாம்பழம்
Huckle berry ------ (ஒரு வித) நெல்லி

#I.......

#J

Jack fruit ------ பலாப்பழம்
jambu fruit ------ நாவல்பழம்
Jamun fruit ------ நாகப்பழம்
Jumbu fruit ------ சம்புப் பழம்

#K
Kiwi fruit ------ பசலிப்பழம்
Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்

#L
Lychee ------ 'லைச்சி'
Lansium ------ அத்திப்பழம்
Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை
Lime ------ தேசிக்காய்
Loganberry ------ 'லோகன் பெறி'
Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Louvi fruit ------ 'லொவிப்பழம்'

#M
Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை
Mango ------ மாம்பழம்
Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்
Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Mulberry ------ முசுக்கட்டைப் பழம்
Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி
Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்

#N..........

#O
Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்

#P
Pair ------ பேரிக்காய்
Papaya ------ பப்பாளிப் பழம்
Passionfruit ------ கொடித்தோடைப்பழம்
Peach ------ குழிப்பேரி
Persimmon ------ சீமைப் பனிச்சை
Phyllanthus Distichus ------ அரைநெல்லி
Plum ------ 'ஆல்பக்கோடா'
Pomelo ------ பம்பரமாசு
Prune ------ உலர்த்தியப் பழம்
Palm fruit ------ பனம் பழம்
Passion fruit ------ கொடித்தோடை
Pear ------ பேரி
Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை
Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'

#Q

#Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

#R
Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rasberry ------ புற்றுப்பழம்
Red banana ------ செவ்வாழைப்பழம்
Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
Rambutan ------ 'றம்புட்டான்'

#S
Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
Star fruit ------ விளிம்பிப்பழம்
Satsuma ------ நாரத்தை
Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்
Strawberry ------ செம்புற்றுப்பழம்
Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்

#T
Tamarillo ------ குறுந்தக்காளி
Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
Tamarind ------ புளியம்பழம்
Tomato ------ தக்காளிப்பழம்

#U
Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)

#V.............

#W
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
Wood Apple ------ விளாம்பழம்
Wax jambu ------ நீர்குமளிப்பழம்

2
வாழைப்பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1. செவ்வாழைப்பழம் :- 

கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :-

 குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- 

கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- 

வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- 

கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் :-

இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7. ஆப்பிள் பழம் :-

 வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

8. நாவல் பழம் :- 

நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

9. திரட்சை :-

1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

10. மஞ்சள் வழைப்பழம் :- 

மலச்சிக்கலைப் போக்கும்.

புரத சத்துக்கள் கொண்ட வழைப்பழத்தை நெஞ்சுக்கரிக்கும் போது சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான்,

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,

"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.

அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."
"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"

" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"

"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"

நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.

இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...

"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.

அங்கே,

நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..

நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
"உன் விருப்பம்", எமன்.

இரண்டு வாரங்களுக்குப்பின்,

பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.

பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
எமன் சொன்னான்,

"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"

நீங்கள் இந்தியன் வங்கி(INDIAN BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  இந்தியன் வங்கி(INDIAN BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ்(SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...



சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி


நீங்கள் கனரவங்கி (ICICI BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள் ஐசிஐசி வங்கி(ICICI BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 022 30256767 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ்(SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...



சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.