உங்கள் கருத்து...!!
உங்கள் கருத்து...!!

1. குடியரசு தலைவர்= 1.5 லட்சம்

2. துணை குடியரசு தலைவர்= 1.25 லட்சம்


3. லோக்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்

4. ராஜ்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்

5. மாநில ஆளுனர்= 1.10 லட்சம்

6. இந்திய தலைமை நீதிபதி= 1 லட்சம்

7. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி= 90 ஆயிரம்

8. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி= 90 ஆயிரம்

9. தலைமை தணிக்கைத்துறை அதிகாரி= 90 ஆயிரம்

10. தலைமை தேர்தல் ஆணையர்= 90 ஆயிரம்

11. மற்ற தேர்தல் ஆணையர்கள்= 80 ஆயிரம்

12. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி= 80 ஆயிரம்

13. பாராளுமன்ற உறுப்பினர்= 50 ஆயிரம்

14. சட்டமன்ற உறுப்பினர்= 55 ஆயிரம்
இவ்வளவு  சம்பளம் வாங்கும் இவர்களால் எப்படி கோடிகளில் புரளமுடிகிறதுQUESTION

1
உங்கள் கருத்து...!!
உங்கள் கருத்து...!!


1 மாதம் = 30 நாள்


1 வ௫டம் = 365 நாள்

5 வ௫டம் = 1825 நாள்


1 ஓட்டு =500 ௫பாய்


: 500 ÷1825 = 0.2740 பைசா ஒ௫ நாள்.


இந்த 27 பைசாவிற்க நம் நாட்டை அடமானம் வைக்கபோறிங்க.  QUESTION



(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று

அந்த தளத்திற்கு செல்ல Click Here


உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.


இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.


பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும்  உபயோகிக்க‌ முடியும்..

health-tips


நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கைதோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

comedy


வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்கள் வாங்க சிரிக்கலாம்-5 நகைச்சுவை படங்கள் ...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் !!நீங்கள் சிரித்து மகிழ சிலநகைச்சுவை துணுக்குகளை வாங்க சிரிக்கலாம் பகுதியுள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

௧.இதுக்கு பெயர் தான் Bluetooth .....

ப்ளுடூத்
ப்ளுடூத் 

௨.வைரஸ் கிளீன்(Cleaning Virus...... )பன்னுராணம் ...

Cleaning Virus......
Cleaning Virus......


௩.இவனுக தொல்லை தாங்கள 

Engineer rokzs.......
Engineer rokzs.......

எத்தனை முறை பார்த்தும் சலிக்காத காமெடி படங்கள் 

New Cool Pad For Laptop.How is it
New Cool Pad For Laptop.How is it


காமெடி

காமெடி





                           




இன்று நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை கொடுத்த நம் வீர இந்தியர்கள் ராஜ்குரு,பகத் சிங்க்,சுக்ஹ்தேவ் இவர்களை இவர்களது நினைவு நாளாகிய இன்று (மார்ச் 23) வணங்குவோம்.....

ஜெய்ஹிந்த் !!

ஜெய்ஹிந்த் !!

ஜெய்ஹிந்த் !!

இய‌ற்கை வைத்தியம்

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

இய‌ற்கை வைத்தியம்

3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.


6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.


7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.


8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.


9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.


10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.


11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

7
குஜாராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி

பிறந்தநாள் : செப்டம்பர் 17, 1950

பிறந்த இடம் : வட்நகர், மேஹ்சானா மாவட்டம், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: அரசியல்

நாட்டுரிமை: இந்தியன்

நரேந்திர மோடி அவர்கள், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள “வட்நகர்” என்ற இடத்தில் ‘தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.
கல்வி 

தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார். 

தன்னுடைய எட்டு வயதிலேயெ, இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட ‘ஆர்.எஸ்.எஸ்’ என அழைக்கப்படும் ‘தேசிய தொண்டர் அணியில்’ உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 

இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

குடும்ப வாழ்கை 

மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லை இவர் வீடு. யாரும் இவர் வீட்டிற்கு வரமாட்டார்கள். இவரும் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிப்பதில்லை. 

அரசாங்கம் இவருக்கு கொடுத்த பங்களாவில் ஒரு சமையல்காரர், இரண்டு சிப்பந்திகள் அவ்வளவுதான்.

 ஒரு அரசாங்க பிரதிநிதியின் வீடு அது என்றால் அனைவரும் ஆச்சர்யப்படுவார்கள். சமையல்காரர் வரவில்லை என்றால் சிப்பந்தி ஒருவரே சமையல் வேலையை பார்த்துக்கொள்வார். 

திருமணம் செய்துகொள்ளவில்லை (பால்ய விவாகம் நடந்ததாக எதிர் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்). 

குடும்பத்தினரையும் கூட சேர்த்துக்கொள்ளவில்லை. 95 வயதான தாய் தன்னுடைய மூத்த சகோதரரின் வீட்டில் தங்கியிருக்கிறார். 

மூத்த சகோதரர் அரசு சுகாதாரத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். 

இரண்டாவது சகோதரர் நகரத்தின் ஒரு பகுதியில் நியாயவிலைக் கடை வைத்திருக்கிறார். 

மூன்றாவது சகோதரர் அரசாங்க பணியில் குமாஸ்தாவாக பணிபுரிகிறார். 

பலபேருக்கு இந்த குமாஸ்தாவின் அண்ணன்தான் மாநிலத்தின் முதல்வர் என்று தெரியாது.

 முதல் அமைச்சருடன் அவருடைய மூன்று சகோதர்களையோ அல்லது இரண்டு சகோதரிகளையோ யாரும் பார்த்ததில்லை.

அரசியல் வாழ்க்கை

சிறுவயதிலேயே ‘ஆர்.எஸ்.எஸ்–இல்’ தன்னை இணைத்துக்கொண்ட மோடி அவர்கள், ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். 

இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடி அவர்களுக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. 

மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிற கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ‘ஆர்.எஸ்.எஸ்-இன்’ தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ஆம் ஆண்டு ‘குஜராத்’ மற்றும் ‘இமாசலப் பிரதேச’ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில், ‘இமாசலப் பிரதேசம்’, ‘பஞ்சாப்’, ‘ஹரியானா’, ‘சண்டிகர்’, மற்றும் ‘ஜம்மு காஷ்மீர்’ போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 

1998 ஆம் ஆண்டு ‘அடல் பிகாரி வாஜ்பாய்’ பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவி வழங்கப்பட்டது.

குஜராத் முதல்வராக மோடி

தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். 

பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடந்த “கோத்ரா ரயில் எரிப்புச்” சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 

இருந்தாலும், அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

 பின்னர், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை அலங்கரித்தார். 

இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்று விடாமல், நரேந்த மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார்.

மோடி பணிகள் 

தினமும் காலையில் சுமார் 4:30 மணிக்கு எழுந்துவிடுவார். 

ஒரு மணி நேரம் யோகா செய்வதற்கு ஒதுக்கிவிடுவார். 

பின்னர் ஈமெயில்களை பார்வையிட்டு அலசத் தொடங்கிவிடுவார். 

இணையத்தில் குறிப்பாக கூகுள் அலர்ட்ஸை பார்வையிடுவார். 

அன்றைய தினசரிகள் அனைத்தும் முதல்வரின் வீட்டிற்கு காலையில் வந்துவிடும். 

காலை சுமார் 7:30 மணிக்கு முதல்வர் தன்னுடைய அலுவல் பணிகளை ஆரம்பித்துவிடுவார்.

 இவருக்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மீது அலாதி ஈடுபாடு. 

அரசுப் பணியை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.பம்பரம் போல் வேலை செய்வார்

15 நிமிடங்களுக்கு அதிகமாக நான் ஓய்வெடுத்ததில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் உரையாடும் போது தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய அலுவல் முடிந்து தூங்கச்செல்லும்போது நள்ளிரவாகிவிடும். 

அவர் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிருபர் இவரை பேட்டி எடுக்க மூன்று நாட்கள் இவருடன் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களில் இவருடைய வேலை பளுவை பார்த்த அந்த நிருபர் அசந்தே போய்விட்டார். 

இப்படி வேலை செய்ய தங்களால் எப்படி முடிகிறது? என்று அந்த நிருபர் கேட்க, அதற்கு அவர் “சரணாகதி. நான் செய்யும் பணிக்கு என்னை முழுமையாக அர்பணித்துவிட்டேன் அதனால் அந்த பணி எனக்கு பளுவாகத் தெரியவில்லை’ என்று பதிலளித்தார்.

மோடியின் குணம் 

 அபார நியாபக சக்தி. 

எந்த வேலையை யாரிடம் கொடுத்தால் வேலை வெற்றிகரமாக முடியும் என்று நன்கு அறிந்தவர். 

ஒரு பிரச்சனையின் முழு பரிமாணத்தை தெரிந்துகொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார். 

ஒரு பிரச்சனையை நன்கு புரிந்து கொண்டாலே அதை பாதி சரி செய்தமாதிரி என்று அடிக்கடி கூறுவார். 

தற்காலிகமான தீர்வெல்லாம் அவருக்கு பிடிக்காது. 

முழு தீர்வுதான் அவரைப் பொருத்தவரை சரியான தீர்வு. 

ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்பேற்பட்டாவது முடிக்காமல் ஓயமாட்டார். 

பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்தாயிற்றே, இனிமேல் நமக்கென்ன என்று சும்மா இருந்துவிடமாட்டார்.

 பொறுப்பை ஒப்படைத்தவரிடம் விசாரிப்பார். மேற்பார்வை இடுவார். 

யாரிடமிருந்து நல்ல யோசனை வந்தாலும் அதை எடுத்துக்கொள்வார். 

மற்றவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்பார்.

 மேலாண்மை நிர்வாகத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஐஐM ல் பாட வகுப்புக்குச் செல்வார். கூடவே தன்னுடைய மந்திரி பிராதினிகளையும் கூட்டிச் செல்வார். 

அவருக்கு எதிலும் தாமதம் பிடிக்காது. 

வேலையை செய்வது மட்டுமல்லாது அதை சரியாக செய்தாகவேண்டும். 

தான் இட்ட பணி சரியாக நடைபெறவில்லை என்றால் பொறுமை இழந்துவிடுவார். 


முதல்வராக மோடியின் சாதனைகள்

பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். 

இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். 

மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். 

மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

விருதுகளும், மரியாதைகளும்

2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.

2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.

நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

‘ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை பொருளாதார சுதந்திரம்தான், இது இல்லாவிட்டால், பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது’ என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சிக் கண்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியில் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். 

மேலும், அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

மோடியின் வாழ்கை குறிப்புக்கள் :


நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் 

நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும்

மேலும் ,ஹாலிவுட்டில்  நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் தயார் செய்து வருகின்றனர் இதில் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் பற்றி சிறு குறிப்பு.

அமெரிக்காவில் வாழும் குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளார். இதற்காக அவர் முறைப்படி மோடியிடம் அனுமதியும் பெற்றுவிட்டார். 

நரேந்திரமோடி கேரக்டரில் விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சாதாரண டீக்கடை நடத்திவந்த நரேந்திரமோடி குஜராத்தின் முதல்வராகி, தற்போது இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்ள மோடியின் கதையை திரைப்படமாக எடுக்க அமெரிக்காவில் வசிக்கும் குஜராத் இயக்குனர் மிதேஷ் பட்டேல் முடிவு செய்துள்ளார். 

இதற்கு அனுமதி கொடுத்துள்ள மோடி, தனது வாழ்வில் நடந்த பல திருப்புமுனை சம்பவங்களையும் அவரோடு பகிர்ந்துள்ளாராம்.  இந்த படத்திற்கு "Tea master to Prime Minsiter" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படத்தில் நரேந்திரமோடியாக நடிக்க விவேக் ஓபராய் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. 

ஆங்கிலத்தில் தயாராகும் இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது

நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?


பிறந்த குழந்தை முதல்,  முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பதும் , அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

ஒவ்வொரு நாடும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

நுகர்வோர் பிரச்சினைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக, அதிக செலவில்லாமல் தீர்வும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

சரியான வரையறையின்படி, நுகர்வோர் என்பவர் யார்? அதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  


நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அதற்குரிய முழுத்தொகையைக் கொடுத்துப் பெறுபவர், அதற்குரிய விலையில் ஒரு பகுதியை செலுத்தி, மற்றொரு பகுதியை பின்னர் தருவதாகக் கூறிப் பெறுபவர், பணம் தருவதாகச் சொல்லியோ அல்லது தவணை முறையில் செலுத்தியோ பெறுபவர் எவரும் நுகர்வோர் ஆவார். மேலும் பொருளையோ அல்லது சேவையையோ தான் பணம் கொடுத்து வாங்காமல், அதை மேற்கூறிய முறையில் வாங்கியவரின் முறையான அனுமதியோடு பயன்படுத்தும் நபரும் நுகர்வோர் ஆவார்.

சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும்.

 உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நோக்கத்துடன் கொள் முதல் செய்யும் வியாபாரிகள், சேவை அளிப்போர் நுகர்வோர் ஆகமாட்டார்கள். ஆனால் சுயவேலைவாய்ப்புக்காக, தமது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக பொருட்களை வாங்கும் நபர்கள் நுகர்வோர் ஆவார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண் தனது சுயதொழிலுக்காக தையல் எந்திரம் வாங்குவது.

சரி, நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

* உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரநிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

* பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

* நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

* நுகர்வோருக்கான விழிப்புணர்வைப் பெறும் உரிமை.

* நுகர்வோர், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


RTI

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

This week, we’ll begin rolling out a streamlined look for Pages on desktop that will make it easier for people to find the information they want and help Page admins find the tools they use most. Here are the key features of the update:

Updated Page timeline design
The right-side column of your timeline now displays all your Page’s posts. This one-column display means that all of your posts will appear consistently on your Page and in News Feed.
The left-side column of your timeline features information about your business, including a map, your hours of business, phone number and website URL, as well as photos and videos.
Easier access to key admin tools
No matter where you are on your Page, you can now view information about the ads you’re running and new likes on your Page, as well unread notifications and messages. You can click on any section in the This Week section for more detail.
We’ve also added new navigation options to the top of the Page, making it easier to access your activity, insights and settings. The Build Audience menu at the top of the Page offers direct access to your Ads Manager account.
Pages to Watch
As we roll out the new design of Pages, we’re also opening up our new Pages to Watch feature in the Page Insights tool to all admins. Pages to Watch allows admins to create a list of Pages similar to their own and compare the performance of their Page with that of the businesses they care about.
On the “Overview” tab of Page Insights admins will see some key stats about the Pages they are watching. The “Posts” tab of Page Insights includes a feature to view the past week’s most engaging posts from the Pages you’re watching.

English Version available for this post

A Streamlined Look for Pages

ஆமாங்க Facebook பக்கங்களை புதிய வடிவில் இந்த வாரத்துக்குள் மாற்ற Facebook நிறுவனம் ...

மக்கள் எளிதாக பக்கம் நிர்வாகிகளளிடம் இருந்து உதவிகளை பெரும் வகையுலும் பக்கங்களை மென்படுத்தும் வகையுலும்  வடிவமைத்துள்ளது இதன் சிறப்பாகும் .

A Streamlined Look for Pages



A Streamlined Look for Pages

புதுப்பிக்கப்பட்டது பக்கம் காலக்கெடு(timeline) வடிவமைப்பு

A Streamlined Look for Pages

பக்கங்களை பார்ப்பதற்கு

A Streamlined Look for Pages




1. Grid-Style Layouts

2. Crafty Image Captions
3. Extended Form Elements
4. Deeply-Focused Landing Pages
5. HTML5 Video Players
6. 3D Transition Effects
7. Flat Design Elements
8. Personal Portraits
9. SVG Images & Icons
10. Unique Web Copy
11. Lazy-Loading Animations
12. Customized Image Galleries
13. Mega-Navigation Menus
14. Expanding Search Bars
15. Featured Detail Lists
16. Mobile-First Design
17. HTML5 Canvas
18. Pixel Sprites & Browser Games
19. Quick User Registration
20. CSS3 Animated Keyframes







வாழ்கை கதை

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொருபலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

English Version

Once a group of 500 people were attending a seminar. Suddenly the speaker stopped and decided to do a group activity. He started giving each person a balloon. Each person was then asked to write their name on it using a marker pen. Then all the balloons were collected and put in another room.
The people were then let into that room and asked to find the balloon which had their name written on it within 5 minutes. Everyone was frantically searching for their name, colliding with each other, pushing around others and there was utter chaos.
At the end of 5 minutes no one could find their own balloon.
Then, the speaker asked each person to randomly collect a balloon and give it to the person whose name was written on it. Within minutes everyone had their own balloon.
The speaker then began, "This is happening in our lives. Everyone is frantically looking for happiness all around, not knowing where it is.
Our happiness lies in the happiness of other people. Give them their happiness; you will get your own happiness. And this is the purpose of human life...the pursuit of happiness."

facebook

உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக  ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுக்க உள்ள தனது பயனாளிகளுக்கு இலவச இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்திருப்பதாக Mark Zuckerberg நேற்று பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு ....

இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்றும், இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.