Advertise on www.tagavalthalam.com
Post Your Ads For Free...

வணக்கம் நண்பர்களே ....

நம்ம தகவல்தளம் இணையதளத்தில் நீங்கள் விளம்பரம் செய்யலாம்..

நம்ம தகவல்தளம் இணையதளத்தில் விளம்பரம் செய்ய tagavalthalam1@gmail.com என்ற மினஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்..

Advertise on www.tagavalthalam.com

Now promote your business here on www.tagavalthalam.com and get traffic on your website & increase your revenue.



என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.


தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோவிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...

அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.

இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';

மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';

ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.

மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,

அத்துப்படியான ஆங்கிலம்,

இதமான காலநிலை,

சுவையான சிறுவாணி,

அதிரடியில்லாத அரசியல்...

இவற்றையெல்லாம் தாண்டி,

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....

அந்த பெருமையுடன் எல்லோரும் இறுமாப்பாய் சொல்வோம்...

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு தற்போது சக்கர நாற்காலியில் அவர்களது வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எமது பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே "உயிரிழை"
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!



இவ் அமைப்பில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளை கொண்ட இவ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற பயனாளிகளின் நலன் கருதி செயற்பாடுகளை முன்னெடுத்து  வருகின்றது. அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து அவ் அமைப்பின் சிறுதுளி எனும் செயற்த்திட்டத்தின்கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று இடுப்பின் கீழாகவும் கழுத்தின் கீழாகவும் இயக்கம் இல்லாமல் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழும் பயனாளிகளுக்கான மாதாந்த உதவி தொககையினை பாதிப்பின் அடிப்படையிலும் பயனாளிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வழங்கி வருகின்றோம். 
பயனாளிகளில் இன்று  வரைக்கும் 41 பயனாளிகளிற்க்கு  மட்டுமே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது 
ஆயினும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் சாதாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் மருத்துவம்  மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதற்கான அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் தேவைப்படுகின்றது. 
எனினும் எமது  பயனாளிகள் எதிர்நோக்கின்ற பிரதானமான பிரச்சினை அழுத்தப்புண் ஆகும் தொடர்ச்சியாக சக்கர நாற்காலியினை பாவிப்பது குடும்ப சூழ் நிலை காரணமாக கவனிக்காமல் இருப்பது கட்டாயம் வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலையில் தொடச்சியான சக்கர நாற்காலி பாவனை போன்ற காரணங்களினால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
எமது பயனாளிகள் சிலர் அழுத்தப்புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறு  பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அழுத்தப்புண்கள் சில
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

எமது பயனாளிகள்  மருத்துவதேவைகளையும் அவர்களின் அன்றாட வாழ்கை செலவுகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள் இவர்களின்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரப்படுகின்றார்கள் இவர்களில் சிலர்  தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாதவர்களாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இதனால், அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களின் தேவைகளை  ஓரளவேனும் பூர்த்தி செய்து கொள்வதற்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை இவர்களுக்கு  உதவலாம்.


இவர்களின் வாழ்க்கையை மாற்ற உங்களாலும் முடியும் .....



இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
வெளிநாடுகளில் வாழும் எமது சொந்தங்கள் எம்முடன் தொடர்புகொண்டு நேரடியாகவும் உங்கள் பக்களிப்பினை வழங்கலாம் அல்லது ஏற்கனவே உயிரிழையோடு இணைந்து பக்களிப்பினை வழங்கிகொண்டிருக்கும்  இங்கிலாந்தில் உள்ள மனிதாபிமான பணிகளுக்கான ஜக்கிய அறக்கட்டளை ( UNITED TRUST FOR HUMANITARIAN AID (UTHA) ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து உங்களுடைய பங்களிப்பினையும் மேற்கொள்ளலாம் 
உயிரிழை அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இணைந்து கொள்ளுங்கள் https://www.facebook.com/Uyirilai இதன் முலம் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் 
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
Uyirilai
ஊதா அமைப்பின் இணையதள முகவரி :- http://www.utha.org.uk/

இத் தகவலினை முழுமையா படித்தமைக்கு மிக்க நன்றி 
நண்பர்களே உங்களால் இவர்களுக்கு உதவ முடியவில்லையாயின் இவர்களுக்கு உதவுவதற்கு எங்களாலும் முடியும் என்று முன்வரக்கூடிய நல்லுள்ளம் படைத்த எங்களுடைய சொந்தங்களுக்கு இத் தகவல் சென்றடைவதற்கு நீங்கள் இத்தகவலை  பகிர்வதன் (share) செய்வதன்மூலம் நீங்களும் ஒரு உதவியாளராக மாறலாம்.

நன்றி 

Neminathan Paramananthan paramananthan22@gmail.com



Please Avoid using  Mobile Phones on driving
Don't use Mobile Phones on driving

இன்று, உலகையே உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிட்டது, மொபைல் போன். இதன் வரவால் பல சாதக அம்சங்கள் உள்ளன; பாதக அம்சமும் இருக்கத்தான் செய்கிறது. வளர்ச்சிக்கும், பணி எளிமைக்கும், விரைவான தகவல் தொடர்புக்கும் உதவும் மொபைல் போன், சில நேரங்களில் சிலரின் வாழ்க்கைக்கு எமனாக மாறி வருகிறது.தினமும் பல இடங்களில், மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டும் பலரை பார்க்க முடிகிறது. இவர்கள், கவனக்குறைவால் விபத்துகளை சந்திக்கின்றனர். இதில் உயிரிழப்போர், உடல் உறுப்புகளை இழப்போர் என பலர், தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கும் அவலம் தொடர்கிறது.அதனால், மொபைல் போனில் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்கவும்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.