வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது சிறுகதை

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்.

" ஒரு கட்டு கீரை என்ன விலை....?" "

ஓரணாம்மா" "

ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.

அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா". " அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு "மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்

முடியவே முடியாது.

 கட்டுக்கு அரையணாதான் தருவேன் ... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க

"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும் எங்க  உடனே அந்த தாய் :சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க அதற்கு அந்த தாய்,

வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா  என்று கூறினாள்...!!!

வியாபாரத்தில் தர்மம் பார்த்தல் நாம் சிறந்த வியாபாரி  இல்லை..

தர்மத்தில் வியாபாரம் பார்த்தல் அவன் செய்வது தர்மமே இல்லை ...


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.