comedy
சிரிக்கலாம்

1.கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
நண்பன்-தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
கோபு-இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

2.மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

3.ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

4.நோயாளி-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்." 
டாக்டர்-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

5.வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

உங்கள் கருத்து...!!
உங்கள் கருத்து...!!

செய்தி:
மானிய காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: மத்திய  அரசு..

இது அரசியல் உள்நோக்கம் கொண்டதா QUESTION
இல்லை மக்களுக்காகவா QUESTION

இதற்க்கு உங்கள் கருத்து QUESTION

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே..

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் தமிழன்.அவர்கள்   இராஜ இராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

சான்று :


  1. தமிழா-------------மியான்மர் .
  2. சபா சந்தகன்-----மலேசியா
  3. ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
  4. கடாலன்------------ஸ்பெயின்
  5. நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
  6. சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
  7. திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
  8. கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.....


Indian Rupee Symbol
Indian Rupee Symbol


ஆசிய கரன்சிகளில் ரூபாய் சிறந்தது: சர்வதேச வங்கிகள்

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் கரன்சிகளில் இந்திய ரூபாய்தான் சிறப்பாக செயல்படுவதாக சர்வதேச வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டிச் சலுகைகளை குறைத்துக் கொள்ளும் என்ற தகவல் வெளியானபோது, தென்ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் கரன்சி மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க கடன் வட்டியை இருமடங்கு உயர்த்தின.

 எனினும், அவற்றின் கரன்சி 2 சதவீத சரிவை சந்தித்த நிலையில், அதேநாளில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததாகவும் வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கவும், அதை நிலைபெறச் செய்யவும் கடன் வட்டியை ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் உயர்த்தி வருவதாக டாய்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் பரிதோஷ் மாத்தூர் தெரிவித்துள்ளார்.


SPACE STONE
 விண்பாறை

விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் தேதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.


2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

facebook

Facebookஇல் நாம் '#'சுடன்தகவல்தளம்
 பயன்படுத்தியதில் மிகவும் பிரபலமான தலைப்புகள்,செய்தி, பக்கங்கள் ,கதைகளை மற்றும் facebookஇல் நீங்கள் பகிர்ந்து அனைத்தும் உங்கள் முகப்பு வலது பக்கத்தில் இருந்து பார்க்கும் வசதியை தற்போது அறிமுகபடுதியுள்ளது.

facebook trending

இந்த வசதி தற்போது அனைவருக்கும்  அறிமுகபடுத்வில்லை என்று facebook நிறுவனம் தெரிவித்துள்ளது...

இனி Top Trending யாருதுன்னு ஒரு போட்டி தொடங்கிறுவாங்களே ....




ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.

தெனாலிராமன் கதைகள்
தெனாலிராமன் கதைகள்


ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.

” கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்” என்று தண்டனையளித்தார். மன்னரும் ” அப்படியே செய்யுங்கள்” என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.

ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.
ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர்.

மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. “அய்யா!” தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான்.

அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் “பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்.”என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.

“யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?” என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

“அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது” என்றான்.

கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

மக்கள் தங்கள் வரி சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

Income tax

வரிச் சுமையை சட்டப்பூர்வமான வழிகளில் குறைத்த பின், முறையான வரியை செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனால், வரிவிதிப்பு வளையத்திற்குள் உள்ள அனைவருக்கும் வரிக்கான திட்டமிடுதல் இன்றியமையாத ஒன்றாகும். மேலும், வரியைக் குறைப்பதோடல்லாமல், சிறந்த வரவையும் கொடுக்கவல்ல திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானதாகும். அவ்வாறு வரியைக் குறைக்க பயன்படக்கூடிய சிறப்பான வருமான வரிச் சட்டப் பிரிவுகள் சிலவற்றை பின் வருமாறு பார்க்கலாம்.

 வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு: 

இப்பிரிவில் ரூ. 1 லட்சம் உச்சவரம்பாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரே குடையின் கீழ் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் அரசு உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் ஆகியவை, இப்பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கக் கூடியவை ஆகும். இப்பிரிவு, வரியை சேமிக்க உதவும் பல முறைகளில் முதலீட்டாளர்கள் மிக விரும்பும் ஒரு முறையாக விளங்குகிறது. ஒருவர் 30 சதவீத வரிவிதிப்பு வளையத்திற்குள் இருந்து ரூ. 1 லட்சத்தை 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்தால் அவர் எளிதாக ரூ. 30,000 வரியை சேமிக்க முடியும். 

வருமான வரி
வருமான வரி 


இந்த சட்டப் பிரிவு கீழ்கண்ட முறைகளுள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது செயல்படக்கூடியதாகும்.
 • ஆயுள் காப்பீட்டில் முதலீடு
 • பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி)
 • என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்)
 • திருப்பிச் செலுத்தும் கடன் தவணைத் தொகையை அசலில் அனுசரித்தல் 

1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80 டி பிரிவு:

மெடிக்ளைம் திட்டத்தில் ஒருவர், சுமார் 15,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை வரிக்குறைப்பு பெறலாம். இது 80சி பிரிவில் பெறப்பட்ட வரிக்குறைப்பு போக, 80டி பிரிவில் பெறக்கூடிய வரிக்குறைப்பாக தனிப்பட்டு விளங்குகிறது. 1961ம் ஆண்டு வருட வருமான வரிச் சட்டப் பிரிவு 24: வீட்டுக் கடனுக்கான வட்டியான உச்சவரம்பு ரூ. 150000த்தை செலுத்தினால் அதற்கேற்றவாறு உங்கள் வருமானத்திலிருந்து வரி விலக்கு பெறலாம்.

 80சிசிஎஃப் பிரிவு: 

 80 சி-பிரிவின் கீழ் பெறும் வரிக்குறைப்போடு, கூடுதலாக ரூ. 20,000 வரை அவரது வரிவிதிப்பிற்குட்ட வருமானத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களில் ஒருவர்,முதலீடு செய்வாரேயானால்,  வரி குறைப்பு செய்யலாம். எனினும், இத்திட்டங்களில் கட்டாயக் காலவரையறைகள் உண்டு என்பதை முதலீடு செய்யும் முன் நினைவில் கொள்ள வேண்டும். 

80இ பிரிவு: 

இவ்வருமான வரிச் சட்டப்பிரிவின் கீழ் வரிவிதிப்புக்குரியவரின் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளின் உயர் கல்விக்காகப் பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டித் தொகையை அவரின் வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானத்திலிருந்து குறைப்பதற்கு வழிவகை செய்யலாம். 

வருமானப் பகிர்ந்தளிப்பு முறை:

வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களிடையே பகிர்ந்தளிப்பது, புத்திசாலித்தனமானதொரு வரிச்சுமை தவிர்க்கும் முறையாகும். இம்முறை, ஒருவரை குறைந்த வருமான வளையத்திற்குள்ளே இருக்கும்படி செய்யும். வருமானத்தை, ஆண்களுக்கு 16,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 19,000 ரூபாயாகவும், மூத்த குடிமக்களுக்கு 24,000 ரூபாயாகவும் பகிர்ந்தளிப்பதன் மூலம், ஒருவர் மொத்தமாக அவரது வருமானத்தை ரூபாய் 49,000 வரை வரியின்றி அனுசரிக்க முடியும். ஆனால் இம்முறையை செயல்படுத்த வேண்டுமெனில் அனைத்து உறுப்பினர்களின் வருமானத்தையும் வரிவிதிப்பிற்கு உட்படுத்துவது அவசியம.

 அன்பளிப்பு வரிக்கான திட்டமிடல்: 

வருமான வரி சேமிப்பு
வருமான வரி சேமிப்பு


நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்படும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. அதனால் இச்சட்டத்தை பயன்படுத்தி ஒருவர் தன் வரியைக் குறைக்கலாம். இச்சட்டத்தின் நெளிவு சுளிவுகளை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் வருமான வரித்துறையின் நுண்ணாய்வு மற்றும் அபராத விதிப்பைத் தவிர்க்கலாம். முடிவாக: வரி சேமிப்பு மட்டுமே ஒருவரின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. 

முதலில், தன் முழு நிதி நிலைத் திட்டமிடலை நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர், ஒரு பொருத்தமான சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வரி விலக்கு பெறுவதற்காக செய்யப்படும் முதலீடானது சரியான கால அளவிலும், சரியான நிகர லாபத்தை அளிக்கக்கூடிய வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் நீங்கள் சிறப்பான வரி விலக்கை பெற இயலும். 

உங்கள் வரிக்கான திட்டமிடுதலின்போது, ஒரேயொரு சொத்து வகையின் கீழ் அனைத்தையும் வைக்காமல் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வேறு வகையான ஆக்கப்பொருள்களைக் கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டால், முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றில் பொதிந்துள்ள பல்வேறு வகையான அபாயங்களைத் தவிர்க்கலாம்.
நன்றி:goodsreturn

anna university

All the Best Friends...
.
*Nov./Dec.2013 Examination Results are published. Mirror site-coe2.annauniv.edu

*UG / PG Nov. Dec. 2013 Coimbatore Results


*UG / PG Nov. Dec. 2013 Trichy Results

*Affiliated Institutions: - Nov. /Dec. 2013 Examination Results (Higher Semester) Published. Colleges can apply Photocopy of Answer Scripts. Last Date is 28-01-2014. (No More Extension)

anna university

"பரிட்சைக்கு பயந்தவனுக்கு 'தினந்தினம்' சாவு"... 

"பரிட்சைக்கு பயப்படாதவனுக்கு 'ரிசல்ட் அன்னைக்கு' மட்டும் தான் சாவு"...

இன்னிக்கும் தூக்கம் போச்சா ....

ரிசல்ட் எப்பத்தான் அறிவிபன்களோ.....

இன்னிக்காவுது ரிசல்ட் விடுங்க தூங்க முடியல...கெட்ட கெட்ட கனவா வருது.... 

இந்த நேரத்துல எனக்கு வடிவேலு வசனங்கள் தான் ஞாபகம் வருது

ரிசல்ட் வரு ஆன வராது

இந்த  ரிசல்ட்க்காக காத்துட்டு இறுகிற அனிவருக்கும்  வாழ்த்துக்கள்,...பாஸ் பன்னிருங்க  .

anna university


வழக்கம் போல எல்லா web siteயும் 10 நிமிசத்துக்கு ஒரு முறை ரிலோடு பண்ணுவோம்...ரிசல்ட் வந்த share பண்ணுறேன் ...

யாராவது பாத்த comment பண்ணுங்க


கோவன் என்ற மன்னன் (இருளர்) ஆண்ட பகுதி கோவன்புதூர் (கோயமுத்தூர்) என்ற மரபு வழி வரலாற்று செய்தி.

Coimbatore

கோவன் புதூர் > கோவன் புத்தூர் > கோயன் புத்தூர் > கோயம்புத்தூர் (அ) கோயமுத்தூர்


கோவன் பற்றிய வரலாறு குறிப்புகள்

சங்ககால இலக்கியங்களிலோ,அல்லது வரலாற்று ஆதரங்களிலோ இருளர் (உதாரணமாக விழுப்புரம் பகுதி வாழும் இருளர்கள் போல) பற்றிய செய்தி இடம் பெறவில்லை. இருப்பினும் கோவன் என்பவன் சோழனுக்கு நெருக்கமாகவும், பேரூர் கோவிலை நிர்மாணிக்கும் போது ,அந்த பகுதி வேளாளர்களுடன் கூடிப் பாடப்பட்டுள்ளமைக்கு கற் சாசனன்களே சான்று.


கோவன் என்ற ஒரு தலைவன் இவ்வகை யாக இறுதியாக தாம் வாழ்ந்த கோவனூரையும் விட்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் வெளியேறி தெற்கே ஆற்றுப் பாங்கான நொய்யலாற்று மருதக் கழனி வெளியில் புதிய ஊரை அமைத்து வாழத் தொடங்கிய போது அழைக்கப்பட்ட ஊர்தான் கோவன் புத்தூர் ஆகிய இன்றைய கோவை ஆகும்.
முதலாம் கோவனுக்கு பின்பு அடுத்த ஏழெட்டுத்தலைமுறை காலமும் கோவன் என்ற சொல் விருதுப் (பொதுப்) பெயராகி நிலைத்து விட்டதை நாம் அறிதல் வேண்டும்.
கொங்குச் சோழர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பேரூர்த் திருத்தலப் பணிகளில் ஈடுபட்ட போது இவ்வூர்த்தலைமை வேளாளரும் மன்னருடன் கூடிப்பாடுப்பட்டுள்தையே கற்சாசனங்கள் பேசும். இந்த முகமையாளர்கள் தான் கோப்பண்ண மன்றாடியார் என்று பேசப் படும் இன்றைய புரவிபாளையம் பெருநிலக் கிழார் குடும்பம் ஆகும். இவர்கள் சென்ற தலை முறை வரை இக்கோயிலின் முதன்மை அறங் காவலர்களாக இருந்து வந்துள்ளனர்.
எனவே கோவன் என்ற பெயர் ஒரு தொல்குடிப் பெயர் -அக்குடியினர் தலைமகன் ஒருவன் நிர்மாணித்த புத்தூரே ஆதிகாலக் கோவை நகரம் என்றும் புரிந்து மகிழ்வோமாக.


Coimbatore junction
Coimbatore junction(கோயம்புத்தூர் சந்திப்பு )

இன்று  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.

கோயமுத்தூரின் இயற்கை அமைப்பு 

வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம்,
தெற்கே பழநி,
கிழக்கே கொல்லிமலை,
மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.

கோயமுத்தூரின் வரலாறு

கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.

வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்படும் இப்போதைய கேரள கடற்கரையில் வந்திறங்கிய ரோமானிய வியாபாரிகள், கோவை வழியாக முட்டம் மற்றும் கொடுமணல் வந்து ரத்தின கற்களை வாங்கி சென்றுள்ளனர். திருப்பூரில் இருந்து 20 கி.மீ., தூரமுள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கு ரோமானியர்கள் வந்து சென்றதின் அடையாளமாக ஏராளாமான பொருட்கள் கிடைத்துள்ளன.

நதிகள்:

நொய்யல் நதி: கோவை நகரம் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக காட்சியளித்தது. கிடைத்த சில இடங்களில் நெல், கரும்பு, வாழை என பயிரிடப்பட்டது. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் நதியாகும்.

நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பே 23 தடுப்பணைகள் கட்டி, 100 கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

கோவையின் நிலத்தடி நீர்மட்டம் அன்று சீராக இருக்க நொய்யல் ஆறும், இதன் குளங்களுமே முக்கிய காரணங்களாகும். நொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்

லிங்க வடிவத்தில் இங்கு இருந்த சிவபெருமானுக்கு காமதேனு தினமும் பால் வார்த்து வந்தது. இதை அறியாத கன்று, காலால் இந்த இடத்தை இடறவே, இங்கு ரத்தம் வெளிவந்தது. இதை கண்டு காமதேனு வருந்தவே, சிவபெருமான் அங்கு தோன்றி, காமதேனுவுக்கு அருள்பாலித்தார். இந்த இடமே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலானது.

சிவபெருமானின் பக்தரான சுந்தரர் இங்கு வரவேண்டும் என்பதற்காக, இறைவனும் சக்தியும், சாதாரண உழவர் வேடத்தில் விவசாயம் செய்து, சுந்தரரை இங்கு அழைத்து வந்ததாக பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கோயிலுக்கு அப்பர் பெருமானும் வந்து சென்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

பேரூர் கோயிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோயிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. கி.பி. 17 ம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. அற்புதமான நடன அசைவுகளுடன் காணப்படும் இந்த சிலைகள் பேரூர் கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.

18ம் நூற்றாண்டின் பாதிவரை, மைசூர் அரசர்களின் கைகளிலும் பின்னர் ஆங்கிலேயர்கள் கைகளிலும் கோவை வந்தது. 1799ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முழு அளவில் கோவையை கைப்பற்றி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதியாகும். எனவே, இங்கு வெளிநாட்டு பருத்தியை விதைக்க திட்டமிடப்பட்டது. 1819ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வியாபார அதிகாரியாக இருந்த ராபர்ட்ஹீத் என்பவர், போர்போன் என்ற பருத்தியை கோவைக்கு கொண்டுவந்து விவசாயிகளை விதைக்க வைத்தார். அப்போது முதல் பருத்தி உற்பத்தியும் இதை நூலாக மாற்றும் தொழிற்சாலைகளும் கோவையில் உதயமானது. இதுவே காலப்போக்கில் கோவையில் மிகப் பெரிய தொழிற்புரட்சியை உருவாக்கி, தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்ற பெயரை கோவைக்கு உருவாக்கி தந்தது.
coimbatore

வியாபாரம் பெருகுவதற்காக, 1856 ம் ஆண்டு, கோவையில் இருந்து போத்தனூர் வழியாக சென்னைக்கு இருப்பு பாதை போடப்பட்டது. பிறகு மேட்டுப்பாளையத்திற்கும், பின்னர் கோவை- ஈரோட்டிற்கு மற்றொரு இருப்பு பாதைகள் போடப்பட்டது.

அப்போதைய கோவை நகரின் வெளியே, 1862ம் ஆண்டு 190 ஏக்கரில் மிகப் பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இது ஆறு ஆண்டுகள் கட்டப்பட்டு 1868 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. செக்கிழுத்த செம்மல் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அடைக்கப்பட்டது இந்த சிறையில்தான். இவர் இழுத்த செக்கு இன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை நகரை நிர்வகிக்க 1865 ம் ஆண்டு முதல் நகரசபை அமைக்கப்பட்டது. அது இப்போது மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.

நன்றி-தினமலர் 

comedy

சிரிக்கலாம்

1.கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!

2.நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்...

3.நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

4.நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

5.ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்

எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.


ஆங்கில subtitles இருக்ககூடிய அனைத்து வீடியோ க்களிலும் நீங்கள் தமிழ் subtitle பெறலாம் .,



விடியோ வின் கீழ் உள்ள Options க்ளிக் செய்து பிறகு translate செய்து கொள்ளலாம்

நண்பர்கள் பயன் பெற Share செய்யவும்

Anna university-chennai

Dedicated to those who r waiting for Anna University results...

"பரிட்சைக்கு பயந்தவனுக்கு 'தினந்தினம்' சாவு"... 

"பரிட்சைக்கு பயப்படாதவனுக்கு 'ரிசல்ட் அன்னைக்கு' மட்டும் தான் சாவு"...

Result will be Published today



anna university




dislike
டிஸ் லைக்
இன்று பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் லைக் பட்டன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் அதாங்க ஒருத்தரோட ஸ்டேட்டஸ் அல்லது போட்டோ உங்களுக்கு புடிச்சிருந்தா லைக் பண்ணுவிங்களே அதான். இப்போ பேஸ்புக்கில் இருக்குறவங்களுக்கு அடுத்த ஆப்பு சீக்கிரமே வரப்போகுது என்னான்னு தானே நீங்க கேக்கறீங்க. எப்படி ஒரு போட்டோ புடிச்சிருந்தோ லைக் பண்ணறீங்களோ அதே போல இனி ஒரு போட்டோ பிடிக்கலைனா டிஸ் லைக்(Dislike) பண்ணலாம்.

dislike
Dislike
அடுத்த இரண்டு மாதத்துக்குள் வரப்போகுது இந்த பட்டன் இனி பேஸ்புக்ல லைக் வாங்குற மக்களுக்கு இன்னொரு ஆப்பும் வெச்சுட்டாங்க. இன்றைய இளைஞர்கள் இந்த பட்டனை பெரிதும் விரும்புவார்கள் என்று பேஸ்புக் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

வாங்க சிரிக்கலாம்
வாங்க சிரிக்கலாம் 
1.நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
2.டாக்டர்-"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"


3.பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
வாங்க சிரிக்கலாம்


4.வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
5.நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்

புகைத்தலால் ஏற்படும் அபாயங்களில் இருந்து மீட்க, இன, மத, அந்தஸ்துப் பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்போம். புகைத்தலை அறவே விடுவோம். புகைத்தல் அற்ற புதிய தாய்நாட்டை உருவாக்குவோம்.


stop Smoking
stop Smoking


நகைச்சுவை
நகைச்சுவை

1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
2.டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். 
3.என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள். 
வாங்க சிரிக்கலாம்
வாங்க சிரிக்கலாம் 

4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
5.கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்... 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) செல்போன்களில் இருந்து நாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை திருடியிருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்.எஸ்.ஏ. முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென்னின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் நாளிதழ் மற்றும் சேனல் 4 செய்தி தொலைக்காட்சி ஆகியவை இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.








உலகம் முழுவதும் செல்போன்களில் இருந்து அனைத்துவிதமான தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. இந்த தகவல்களை பிரிட்டன் உளவாளிகளுக்கும் என்.எஸ்.ஏ. அளித்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்களை அளிக்காமல் குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


கிரெடிட் கார்டு குறித்து வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட கிரெடிட் கார்டு வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்றங்கள் அவர்களின் எஸ்.எம்.எஸ். தகவல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி பணப் பரிமாற்ற தகவல் களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.


இதற்காக பல்வேறு நிறுவனங்க ளுடன் என்.எஸ்.ஏ. ரகசிய உடன் படிக்கை மேற்கொண்டிருந் ததாகத் தெரிகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஜிசிஎச்கியூ என்ற அமைப்புடன் இணைந்து அந்த நாட்டு செல்போன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.


இதுகுறித்து ஜிசிஎச்கியூ வெளி யிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் சட்டவிதிகளுக்கு உள்பட்டுதான் நாங்கள் செயல்பட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து என்.எஸ்.ஏ. வட்டாரங்கள் கூறியபோது, சட்டப்பூர்வமாகவே எஸ்.எம்.எஸ். தகவல்கள் திரட்டப்பட்டன, நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, இதுதொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக் குப் புறம்பானவை என்று தெரி வித்துள்ளது.


செல்போன்களில் இருந்து திரட்டப்பட்ட எஸ்.எம்.எஸ். தகவல் கள் டிஷ்பயர் என்ற பெயரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


என்.எஸ்.ஏ. அத்துமீறல்கள்


உலகம் முழுவதும் நாள்தோறும் 500 கோடி தொலைபேசி உரை யாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டு கேட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 35 நாடுகளின் தலைவர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் களில் ரகசியமாக சிப் சொருகி தகவல்கள் திருடப்பட்டது குறித்தும் அண்மையில் செய்தி வெளியானது. இந்தியாவில் ஒரு மாத காலத்துக்குள் அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி குறித்த திட்டங்கள் குறித்த 1350 கோடி தகவல்களை என்.எஸ்.ஏ. திருடியதாக ஸ்னோடென் ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.


என்.எஸ்.ஏ.வின் அத்துமீறல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் வேளையில் அதன்மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.


நன்றி:தி ஹிந்து

ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி
தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

Visa Mapper
Visa Mapper

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Visa Map
Visa Map


இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.