Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
Nokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.

தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.


உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!

உங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\Program Files\NSS\Backup\pm) அங்கு சென்று

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!

Notepad இனை Open செய்து கொள்ளுங்கள். (Start > Run >  Type Notepad)

பிறகு, PM File இனை Notepad இல் Drag and Drop செய்து விடுங்கள்

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!
.
Notepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள். 

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!

அங்கு இருக்கும் 20 இலக்கங்களில்  , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)


5=31323334350000000000

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!

அதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இருக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.

5=31323334350000000000
5=123450000000000


என்னுடைய Phone  இன் Security Code 1234ஆகும்.





Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..!!

NSS என்ற மென்பொருள் (Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்கிய மற்றும் Security Code இனை Reset செய்த Software ) Nokia வின் BB5 model இற்கு மாத்திரமே வேலை செய்யும்.ஆகவே உங்களுடைய Phone , இந்த BB5 model list இல் இருக்கிறதா என்று பாருங்கள்

Nokia 3109 Classic
Nokia 3110 Classic
Nokia 3250 
Nokia 3500 Classic
Nokia 5200
Nokia 5300 XpressMusic 
Nokia 5500 Sport
Nokia 5700 XpressMusic
Nokia 6110 Navigator
Nokia 6120 Classic
Nokia 6121 Classic
Nokia 6125 
Nokia 6126
Nokia 6131 
Nokia 6131 NFC
Nokia 6133
Nokia 6133
Nokia 6151 
Nokia 6233 
Nokia 6234 
Nokia 6270
Nokia 6280
Nokia 6288 
Nokia 6290 
Nokia 6300
Nokia 6500 Slide
Nokia 6555 
Nokia 6630 
Nokia 6631 (NM850iG)
Nokia 6680 
Nokia 6681 
Nokia 6682 
Nokia 7370 
Nokia 7373
Nokia 7390
Nokia 7500 Prism 
Nokia 7900 Prism
Nokia 8600 Luna
Nokia E50 
Nokia E51
Nokia E60
Nokia E61 
Nokia E61i
Nokia E62 
Nokia E65 
Nokia E70
Nokia E90 Communicator
Nokia N70
Nokia N71 
Nokia N72
Nokia N73 
Nokia N75 
Nokia N76 
Nokia N77 
Nokia N80 
Nokia N81 
Nokia N82
Nokia N90 
Nokia N91 
Nokia N92 
Nokia N93 
Nokia N93i 
Nokia N95 
Nokia N95 8GB
Nokia N95 NAM 
Nokia N95
Nokia NM705i

2
ரூபாய் நோட்டும் நோட்டில் உள்ள இந்திய வரலாறும் ..

அடுத்ததலைமுறைக்கு காண்பிக்க காகிதத்தில் மட்டுமே இருக்கும் இந்திய வரலாறுகள்

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்த இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).


ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)


ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)


ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)


ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.


காக்க தவறிவிட்ட இந்திய வரலாறு !!காத்திருக்கிறது அடுத்த தலைமுறைக்கு
இதே காகித நோட்டில்----உண்மைதானே தோழர்களே

யார் புத்திசாலி...சிறுகதை

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.
அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.

எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.

உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.

இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.

இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.

எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...

வாய் துர்நாற்றத்தை போக்கும் பொருட்கள்

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

வாய் துர்நாற்றத்தை போக்கும் பொருட்கள்

* ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

* கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

* கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

* புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

* கொய்யாப்பழம்: பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

* மாதுளை: அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.
பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டு

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென் னேஸ்வரமடம் கிராமம். இங்குள்ள பென்னேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் கல்வெட்டில் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரண தண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரம் இருக்கும் கோயில்பென்னேஸ்வர மடம் கோயிலாகும். இது பிற்காலச் சோழர் காலக் கோயிலாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயி லில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. சோழர்கள், போசாளர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியில் இக்கோயிலுக்கு பலவிதமான கொடைகள், தானங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தானமாகப் பெறப் பட்ட நிலங்கள், ஊர்கள் மற்றும் பொது சொத்துகளை சிலர் ஏய்த்துஅனுபவித்துள்ளனர். இதனை அறிந்த பேரரசன் வீர ராமநாதன் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார். அந்த ஆணை தொடர்பான கல்வெட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போசாள மன்னன் வீர ராமநாதன் கல்வெட்டு

"ஸ்ரீ வீரராமந்நாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்தி லும் பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய் குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையைஅறுத்துவிடவும் அப்படி செய்திலர் களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படிறெயப்புத்த பண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு ஆங்கு வந்து நலிந்தவர் களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக் கொள்ளவும் சீகாரியமாகத்தாங்க . . . த. . . போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மானிய மாகக் குடுத்தோம். அனைத் தாயமு விட்டுக்கு . . .கூசர் உள்ளிட் டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம்.

இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்" என எழுதப்பட்டுள்ளது.

இதன் விளக்கம், லஞ்சம் வாங்கினால், கொடுத்தால் சிரச்சேதம் செய்ய அதாவது தலையை வெட்டும் படியும் அவ்வாறு நிகழாமல் தடுக்கத் தவறினால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையை வெட்டும்படியும் ஆணை வெளியிட்டுள்ளார். இக்கல்வெட்டு கோயிலின் தெற்கு சுவர் பகுதியில் இருக்கிறது. இக்கல்வெட்டு கிரந்தம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சமாக உணவு அல்லது சோறு கேட்டால் கூட குற்றம் என்றும் அரசர் சொல்லியிருக்கிறார். மேற் கண்ட பேரரசர் வீரராமநாதனின் கல்வெட்டைக் கொண்டும், தலைபலிக் கற்களின் சிற்ப அமைப்பைக் கொண்டும் இவ்வாறு தண்டிக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது தெரிகிறது. இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.

இந்தக் கல்வெட்டை போசாளப் பேரரசன் வீரராமநாதனின் நாற்பத்தி ஒன்றாவது ஆட்சியாண்டில் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு கி.பி.1295 என குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, பொதுமக்களின் நலனுக்காக அல்லது அரசனின் நலனுக்காக பக்தியில் கொற்றவை என்னும் காளிக்குப் படையலாகவும் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இதில் நவகண்டம் என்பது, உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கடைசியாக தன் தலையை அறுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது ஒரே வெட்டில் சிரத்தை அறுத்து சமர்ப்பிப்பது. இது தொடர்பான கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அதுவும் போசாளர்களின் தலை நகரான ஹளேகுந்தாணியிலும், பையூர் நிலையுடையான் மதுராந்த கன் வீரநுளம்பன் ஆட்சி செய்த பென்னேஸ்வர மடத்திலும்தான் இருக்கின்றன.

தலைபலிக் கற்களை நவகண்டம் அல்லது அரிகண்டம் என்றுதான்நினைத்திருந்தனர்.

இந்த தலைபலி கற்களையும் கோயில் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன், லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரியின் உயிர்பலி கல்வெட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.

நன்றி:தமிழ் ஹிந்து

உழவும் பசுவை ஆங்கிலேயர்கள் ஒழிந்த கதை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.
அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன.

அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.
இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.

கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.
இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.
இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

  பசுவதை தடுப்போம்
     தேசம்  காப்போம்

2
elephant

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான்.
ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான்
காத்துக்கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள்
கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில்
உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

உலகின் வல்லரசாக அமெரிக்கா  இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?

உலகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி பேசுகிறார். அதைக்கேட்கும் எல்லோருக்கும் தேசிய உணர்ச்சி பொங்கத்தானே செய்யும்?

அப்படி உணர்ச்சிபூர்வமாக இருக்கிற ஒருவரிடம் “இப்போது உலகின் வல்லரசாக அமெரிக்கா  இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?” என்று கேளுங்களேன்.
“இங்கிலாந்து இருந்ததோ…? ” என்று இழுப்பார்.

 அதுக்கும் முன்னால? என்று கேட்டுப்பாருங்கள்.

மாட்டிக்கொள்வார். இரண்டு, மூன்று நாடுகளின் பெயர்களைச் சொல்லி ஒத்தையா, ரெட்டையா பார்ப்பார்.

இனிமேல் அப்படி குத்துமதிப்பாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதனை ஆழமானமுறையில் ஆராய்ச்சி செய்துள்ளார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கஸ் மேடிஸன் எனும் பொருளாதார வரலாற்று அறிஞர். (http://www.ggdc.net/maddison/maddison-project/home.htm) அவர் உலகின் பல நாடுகளில் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றவர். பல நாடுகளின் பண்டையப் பொருளாதார வரலாறுகளை அவர் தொகுத்தார்.

அந்த அனுபவத்தில் “உலகப் பொருளாதாரம் - ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு” “வரலாற்றுரீதியான புள்ளிவிபரங்கள்’ (The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2) எனும் நூல்களை 2006-ல் எழுதியுள்ளார்.

அவரது ஆய்வின்படி கி.பி. 1 ஆம் ஆண்டில் உலகின் மொத்த வருமானத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்கு 52.9 சதவீதம். கி.பி.1000 ஆம் ஆண்டில் உலகின் வருமானத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம். ஆனால் அது கி.பி.1500 ஆம் ஆண்டில் 24.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதனால் தன்னைவிட அரைச் சதவீதம் கூடுதல் வருமானம் உருவாக்கிய சீனாவிடம் இந்தியா முதலிடத்தை இழந்துள்ளது.

மீட்ட அவுரங்கசீப்

1600களில் மொகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்தச் செல்வத்தைவிட இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த காலகட்டத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பா இருந்துள்ளது.

கி.பி.1700-ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலம். அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தவர். அதனால், அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டும் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது. (24.4 சதவீதம்). அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு 1750-ல் சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.

இங்கிலாந்தின் எழுச்சி

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி ஏற்பட்டது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துவிட்டது. 1700 களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சம் இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தைச் சாகடித்துள்ளது. அடுத்தடுத்து பல பஞ்சங்கள் இந்தியாவைத் தாக்கி மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுள்ளன.

1850களில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவைத் தள்ளிவிட்டு இங்கிலாந்து ஏறிக்கொண்டது. மூன்றாம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. 1875-ல் அமெரிக்கா இங்கிலாந்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. இந்தியா நான்காம் இடத்துக்குப் போனது.

அமெரிக்க சகாப்தம்

1900 வரையான காலகட்டத்தில் அமெரிக்கா சீனத்தைத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறியது. சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா என இந்தியா ஐந்தாவது இடத்தில் உட்கார்ந்தது. 1925-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, என வரிசையின் இடையில் பிரான்ஸ் நுழைந்து இந்தியாவை ஆறாவது இடத்துக்கு தள்ளியது. அப்போதுதான் பிறந்த சோவியத்யூனியன் இந்தியாவுக்குப் பின்னால் நின்றது.

25 வருட காலகட்டத்துக்குள் சோவியத்யூனியன், இங்கிலாந்தின் இடத்தைக் கைப்பற்றி 1950-ல் இரண்டா வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா என ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டோம்.

சீன மறுஎழுச்சி

1975-ல் ஜப்பான் இந்த வரிசையின் நடுவில் ஊடுருவி மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியும் சீனாவும் அதற்குப் பின்னால் நின்றன. ஐ நா சபையின் 2013 தகவல்கள்படி தற்போது சீனா இரண்டாம் இடத்தில் நிற்கிறது. ஜப்பான் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி, ரஷ்யாவுக்கு பிறகு 10வது இடத்தில் தற்போது இந்தியா உள்ளது.

இந்தியாவின் பழங்காலப் பொருளாதார வளர்ச்சியில் கி.மு.2800 முதல் 1800 வரையில் சிந்து சமவெளி நாகரிகம் செழித்து ஓங்கியிருந்தது எனக்கூறும் அறிஞர்கள் அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய அளவுக்கு நகரமயமான நாகரிகமாக அது இருந்ததையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீளுமா இந்தியா?

மவுரிய பேரரசு,மொகலாய பேரரசுகள் மூலமாக உயர்ந்து ஓங்கி ஆயிரம் காலத்துப்பயிராக இந்தியப் பொருளாதாரம் உலகில் முதல் இடத்தில் நிலைத்து நின்றுள்ளது. இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியா அடிமையான காலத்துக்குப் பிறகு இந்தியா தடுமாறி, தடம் மாறி, தள்ளாடி வருகிறது. இடையில் அவுரங்கசீப்பால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் முதல் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து அதற்குப்பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது.

மீண்டும் முதலிடத்தை அடைய, உலகின் மாறிய சூழலுக்கு ஏற்ப தன்னை இந்தியா தகவமைத்துக் கொள்ளவேண்டும். முதல் நடவடிக்கையாக தனது மனித வளத்தை திறன்மிக்கதாக அது மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய சமூகம் கல்வியில் சிறந்ததாய் மாறுவதுதான் அதற்கான அடிப்படையானத் தேவை. அந்தக்கல்வியை அடித்தளமாக கொண்டுதான் நாட்டின் வளங்களை விஞ்ஞானரீதியாக பயன்படுத்துகிற திறமைக்கு மக்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் எழுதப்படிக்க தெரியாதவர்கள் உலகிலேயே அதிகம் வாழும் நாடாக இன்னமும் இந்தியா நீடிக்கிறது. உலக வல்லரசாக இந்தியா மீண்டும் எழுவதை அது தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.