சட்டம்(law) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''



தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)


நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்: அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005) 
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)







தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)




தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)




RTI

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

2
 மோட்டர் வாகனச் சட்டங்கள் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்...

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக:

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine

6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court

8. மன நிலை,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9.போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine....


மேலும் இந்த சட்டங்கள் விரைவில் திருத்தும் கொண்டுவர இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் ...

நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.....!


நாம் நினைத்தாள் லஞ்ச உலழல்களை நம் நாட்டைவிட்டு துரத்தலாம் மேலும் ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்று தரலாம்

நாம் நினைத்தாள் லஞ்ச உலழல்களை நம் நாட்டைவிட்டு துரத்தலாம் மேலும் ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்று தரலாம் 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை (விஜிலென்ஸ் & கரெப்சன்) தொடர்புகொள்ள..

தொலை தொடர்பு எண்கள் :-

Director/ADGP S.K.Dogra, IPS 044 - 24612561

ADGP Addl.Director 044-24617154

IGP SIC- JD A.M.S. Gunaseelan,IPS 044 - 24616900

IGP SIC- JD G. Venkataraman, IPS 044 - 24616900

DIG R. Samuthirapandi, IPS 044 - 24616900

SIC-I 044 - 24610550

SP CNI/Central A.T. Duraikumar 044 - 24954171

SP MDU/Southern Maheswari, IPS 044 - 24959597

SP CBE/Western 0422-2238646

CONTROL 044 - 24615989/49/24954142

FAX 044 - 24617510

ஊழல் வாதிகளை நாட்டை விட்டு விரட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  பயன்படுத்துவோம் 

ஒரு கையால் தட்டினால் ஓசை வராது அதே போல் ஒரு சிலர் மட்டும் இவற்றை செய்தால்நாம்  ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தர முடியாது ..


ஒன்று கூடுவோம் நாட்டை காக்க ...


நம் நாட்டை காப்பாற்ற நாமே களமிறங்குவோம் ..

ஜெய் ஹிந்த்!! வாழ்க பாரதம்!! ஒழிக்க ஊழல் லஞ்சம்  

நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?


பிறந்த குழந்தை முதல்,  முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பதும் , அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

ஒவ்வொரு நாடும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

நுகர்வோர் பிரச்சினைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக, அதிக செலவில்லாமல் தீர்வும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

சரியான வரையறையின்படி, நுகர்வோர் என்பவர் யார்? அதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  


நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அதற்குரிய முழுத்தொகையைக் கொடுத்துப் பெறுபவர், அதற்குரிய விலையில் ஒரு பகுதியை செலுத்தி, மற்றொரு பகுதியை பின்னர் தருவதாகக் கூறிப் பெறுபவர், பணம் தருவதாகச் சொல்லியோ அல்லது தவணை முறையில் செலுத்தியோ பெறுபவர் எவரும் நுகர்வோர் ஆவார். மேலும் பொருளையோ அல்லது சேவையையோ தான் பணம் கொடுத்து வாங்காமல், அதை மேற்கூறிய முறையில் வாங்கியவரின் முறையான அனுமதியோடு பயன்படுத்தும் நபரும் நுகர்வோர் ஆவார்.

சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும்.

 உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நோக்கத்துடன் கொள் முதல் செய்யும் வியாபாரிகள், சேவை அளிப்போர் நுகர்வோர் ஆகமாட்டார்கள். ஆனால் சுயவேலைவாய்ப்புக்காக, தமது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக பொருட்களை வாங்கும் நபர்கள் நுகர்வோர் ஆவார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண் தனது சுயதொழிலுக்காக தையல் எந்திரம் வாங்குவது.

சரி, நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

* உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரநிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

* பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

* நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

* நுகர்வோருக்கான விழிப்புணர்வைப் பெறும் உரிமை.

* நுகர்வோர், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


RTI

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

மக்கள் தங்கள் வரி சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

Income tax

வரிச் சுமையை சட்டப்பூர்வமான வழிகளில் குறைத்த பின், முறையான வரியை செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனால், வரிவிதிப்பு வளையத்திற்குள் உள்ள அனைவருக்கும் வரிக்கான திட்டமிடுதல் இன்றியமையாத ஒன்றாகும். மேலும், வரியைக் குறைப்பதோடல்லாமல், சிறந்த வரவையும் கொடுக்கவல்ல திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானதாகும். அவ்வாறு வரியைக் குறைக்க பயன்படக்கூடிய சிறப்பான வருமான வரிச் சட்டப் பிரிவுகள் சிலவற்றை பின் வருமாறு பார்க்கலாம்.

 வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு: 

இப்பிரிவில் ரூ. 1 லட்சம் உச்சவரம்பாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரே குடையின் கீழ் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் அரசு உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் ஆகியவை, இப்பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கக் கூடியவை ஆகும். இப்பிரிவு, வரியை சேமிக்க உதவும் பல முறைகளில் முதலீட்டாளர்கள் மிக விரும்பும் ஒரு முறையாக விளங்குகிறது. ஒருவர் 30 சதவீத வரிவிதிப்பு வளையத்திற்குள் இருந்து ரூ. 1 லட்சத்தை 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்தால் அவர் எளிதாக ரூ. 30,000 வரியை சேமிக்க முடியும். 

வருமான வரி
வருமான வரி 


இந்த சட்டப் பிரிவு கீழ்கண்ட முறைகளுள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது செயல்படக்கூடியதாகும்.
 • ஆயுள் காப்பீட்டில் முதலீடு
 • பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி)
 • என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்)
 • திருப்பிச் செலுத்தும் கடன் தவணைத் தொகையை அசலில் அனுசரித்தல் 

1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80 டி பிரிவு:

மெடிக்ளைம் திட்டத்தில் ஒருவர், சுமார் 15,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை வரிக்குறைப்பு பெறலாம். இது 80சி பிரிவில் பெறப்பட்ட வரிக்குறைப்பு போக, 80டி பிரிவில் பெறக்கூடிய வரிக்குறைப்பாக தனிப்பட்டு விளங்குகிறது. 1961ம் ஆண்டு வருட வருமான வரிச் சட்டப் பிரிவு 24: வீட்டுக் கடனுக்கான வட்டியான உச்சவரம்பு ரூ. 150000த்தை செலுத்தினால் அதற்கேற்றவாறு உங்கள் வருமானத்திலிருந்து வரி விலக்கு பெறலாம்.

 80சிசிஎஃப் பிரிவு: 

 80 சி-பிரிவின் கீழ் பெறும் வரிக்குறைப்போடு, கூடுதலாக ரூ. 20,000 வரை அவரது வரிவிதிப்பிற்குட்ட வருமானத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களில் ஒருவர்,முதலீடு செய்வாரேயானால்,  வரி குறைப்பு செய்யலாம். எனினும், இத்திட்டங்களில் கட்டாயக் காலவரையறைகள் உண்டு என்பதை முதலீடு செய்யும் முன் நினைவில் கொள்ள வேண்டும். 

80இ பிரிவு: 

இவ்வருமான வரிச் சட்டப்பிரிவின் கீழ் வரிவிதிப்புக்குரியவரின் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளின் உயர் கல்விக்காகப் பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டித் தொகையை அவரின் வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானத்திலிருந்து குறைப்பதற்கு வழிவகை செய்யலாம். 

வருமானப் பகிர்ந்தளிப்பு முறை:

வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களிடையே பகிர்ந்தளிப்பது, புத்திசாலித்தனமானதொரு வரிச்சுமை தவிர்க்கும் முறையாகும். இம்முறை, ஒருவரை குறைந்த வருமான வளையத்திற்குள்ளே இருக்கும்படி செய்யும். வருமானத்தை, ஆண்களுக்கு 16,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 19,000 ரூபாயாகவும், மூத்த குடிமக்களுக்கு 24,000 ரூபாயாகவும் பகிர்ந்தளிப்பதன் மூலம், ஒருவர் மொத்தமாக அவரது வருமானத்தை ரூபாய் 49,000 வரை வரியின்றி அனுசரிக்க முடியும். ஆனால் இம்முறையை செயல்படுத்த வேண்டுமெனில் அனைத்து உறுப்பினர்களின் வருமானத்தையும் வரிவிதிப்பிற்கு உட்படுத்துவது அவசியம.

 அன்பளிப்பு வரிக்கான திட்டமிடல்: 

வருமான வரி சேமிப்பு
வருமான வரி சேமிப்பு


நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்படும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. அதனால் இச்சட்டத்தை பயன்படுத்தி ஒருவர் தன் வரியைக் குறைக்கலாம். இச்சட்டத்தின் நெளிவு சுளிவுகளை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் வருமான வரித்துறையின் நுண்ணாய்வு மற்றும் அபராத விதிப்பைத் தவிர்க்கலாம். முடிவாக: வரி சேமிப்பு மட்டுமே ஒருவரின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. 

முதலில், தன் முழு நிதி நிலைத் திட்டமிடலை நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர், ஒரு பொருத்தமான சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வரி விலக்கு பெறுவதற்காக செய்யப்படும் முதலீடானது சரியான கால அளவிலும், சரியான நிகர லாபத்தை அளிக்கக்கூடிய வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் நீங்கள் சிறப்பான வரி விலக்கை பெற இயலும். 

உங்கள் வரிக்கான திட்டமிடுதலின்போது, ஒரேயொரு சொத்து வகையின் கீழ் அனைத்தையும் வைக்காமல் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வேறு வகையான ஆக்கப்பொருள்களைக் கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டால், முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றில் பொதிந்துள்ள பல்வேறு வகையான அபாயங்களைத் தவிர்க்கலாம்.
நன்றி:goodsreturn

Visa Mapper
Visa Mapper

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Visa Map
Visa Map


இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு

3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா..?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது


கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.



2


இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)

இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர் பக்கத்தினை  துவக்கியிருக்கிறார்கள்..

இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.

இணைய தள முகவரி – தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர்


இணையத்தில் இருந்ததை தகவளுடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள்...

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.


இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய தனித்தன்மையை வலியுறுத்துவதால்

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..இச்சிக்கல் நிறைந்த சட்டமாக அமைந்துள் ளது.

பல மாநிலங்களில் திருமணங்கள் பதிவுசெய் வது மற்றும் மண முறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை . அதனால் ஒவ்வொரு சமயத்தினரும் தனித் தனியான சட்டங்கள் வகு க்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்:

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்

குற்றவியல் சட்டம்

ஓப்பந்தச்சட்டம்

தொழிலாளர் சட்டம்

பொல்லாங்கு குற்றவியல் சட்டம்

குடும்பச் சட்டம்

இந்துச் சட்டம்

இசுலாமியச் சட்டம்

கிருத்துவச் சட்டம்

பொதுச்சட்டம்

தேசியச்சட்டம்

அமலாக்கச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்


குற்றங்களின் வகைப்பாடு

இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்

இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்க ங்கள்

இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்

இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை

இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி

இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்

இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்


இ.பி.கோ. 299 முதல் 377 வரை


1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை

( பிரிவு 299 முதல் 311 ) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்கள்


( பிரிவு 312 முதல் 318 )

3.காயப்படுத்துதல்( பிரிவு 319 முதல் 338 )


4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை

( பிரிவு 339 முதல் 348 )

5.குற்றவியல் தாக்குதல்
( பிரிவு 349 முதல் 358 )

6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல்
( பிரிவு 359 முதல் 374 )

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்
( பிரிவு 375 முதல் 376 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:

1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு

(பிரிவு 299 முதல் 311)

2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு

(பிரிவு 312 முதல் 318)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

3. ஒருவரை காயப்படுத்துதல்
(பிரிவு 319 முதல் 338)

4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
(பிரிவு 339 348 போன்ற)

5. குற்றவியல் தாக்குதல்
(பிரிவு 349 முதல் 358)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்

(பிரிவு 359 முதல் 374)

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்

(பிரிவு 375 முதல் 376)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

8. செயற்கை குற்றங்களுக்கு

(பிரிவு 377)

இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:

1. திருட்டு

( பிரிவு 378 முதல் 382 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

2. பலாத்காரம்

( பிரிவு 383 முதல் 389 )

3. திருட்டு மற்றும் கொள்ளை

( பிரிவு 390 முதல் 402)

4. சொத்து குற்றவியல் மோசடி

( பிரிவு 403 முதல் 404 )

5. குற்றவியல் நம்பிக்கை துரோகம்

( பிரிவு 405 முதல் 409 )


சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


6.திருடிய சொத்து பெறுவது

( பிரிவு 410 முதல் 414 )

7. ஏமாற்றுதல்
( பிரிவு 415 முதல் 420 )

8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்

( பிரிவு 421 முதல் 424 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

9. குறும்புகள்


( பிரிவு 425 முதல் 440 )

10. குற்ற மீறல் பற்றிய செயல்கள்

( பிரிவு 441 முதல் 464 )

ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள்

பிரிவு 463 முதல் 489 வரை

சொத்து

( பிரிவு 478 முதல் 489 )

நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

( பிரிவு 489எ வேண்டும் 489இ)


இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:


கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல்


சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம்)

பிரிவு 499 முதல்502 வரை

மான நஷ்ட வழக்குகள்
பிரிவு 503 முதல் 510 வரை

சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு
பிரிவு 511

குற்றம் செய்ய முயல்வது.

சட்ட சீர்திருத்தங்கள் 

1ஃ பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான 

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..
உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய
தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தணடிக்க பயன்படுத்த முடியாது என்றது.


2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து

.சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


3 பிரிவு 497ன் கீழ்

மறறொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

(பல்வேறு இணையங்களில் இருந்து தொகுக்க‍ப்பட்ட‍து)

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.