health

வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.

எளிதாக Video Editing செய்ய


மிக எளிதாக Video Editing செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் – Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் – Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை – Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது.


மூவி மேக்கிங் – Movie Making என்பது அவ்வளவு சுலபமானதல்ல. மூவி மேக்கிங் மிக எளிமையாக செய்து முடிப்பதற்கு இம்மென்பொருள் எளிமையான வசதிகளைக் கொண்டுள்ளது.


VideoPAD Video Editing Software Features and Specifications


வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி

Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி அத்துடன் வீடியோவின் வேகத்தை சரிசெய்யும் வசதி என அதிக வசதிகளை இம்மென்பொருள் பெற்றிருக்கிறது.

avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி

50 க்கும் மேற்பட்ட visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி.

TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி

Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி

வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி, Youtube போன்ற தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி என பல்வேறுவிதமான வசதிகளை உள்ளடக்கியது இம்மென்பொருள் .


பதிவிறக்கம் செய்ய


கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில்
சோளம், 
கேழ்வரகு, 
பருத்தி, 
தினை, 
கம்பு, 
ஆமணக்கு, 
அவரை, 
பழமரம், 
கிராம்பு, 
மிளகு, 
ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு, 
சாமை, 
தட்டைபயிறு, 
முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம்,
 புகையிலை, 
வாழை, 
பருத்தி, 
நிலக்கடலை நன்றாக வளரும்.

செம்மண் பூமி:

செம்மண்ணில் பருத்தி, 
சோளம், கம்பு,
அவரை, 
துவரை மாதிரியான பயிர்களும், 
பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி, 
சோளம், 
கரும்பு, 
கம்பு, 
நெல், 
மிளகாய், 
கோதுமை, 
ராகி, 
வாழை, 
மஞ்சள், 
பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

கரிசல் பூமி:

கரிசல் மண்ணில் பருத்தி, 
சோளம், 
கடலை, 
கோதுமை, 
தினை, 
கேழ்வரகு, 
கரும்பு, 
கொத்தமல்லி நன்றாக வளரும்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் இணையனதலதிலேயே  பெற

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். 

ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.

இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.


அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.


உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -மேலும் விபரங்களுக்கு


உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - மேலும் விபரங்களுக்கு


உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற 
-மேலும் விபரங்களுக்கு

உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள -மேலும் விபரங்களுக்கு 


இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்
........

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth-மேலும் விபரங்களுக்கு

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death -மேலும் விபரங்களுக்கு


மதுரை ஆட்களுக்கு - மேலும் விபரங்களுக்கு (NO DNS so use the same format)


திருச்சி ஆட்களுக்கு -மேலும் விபரங்களுக்கு


திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் -மேலும் விபரங்களுக்கு


SHARE SHARE SHARE - Save Money and Don't waste your Money and Time for this

பிரதமராகும் நரேந்திர மோடி வரலாறு !!

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சலான முடிவு, நேர்மறை எண்ணம் ஆகியவற்றால் நாட்டின் 15வது பிரதமராக இன்று பதவி ஏற்கிறார்.

இந்தியாவின் மேற்கில் குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில் 1950, செப்.17ம் தேதி, நடுத்தர குடும்பத்தில் மோடி பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி -ஹீரா. பள்ளியில் படிக்கும் போதே "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் அதிகமாக பங்கேற்க தொடங்கினார். இளம் வயதில் சகோதரருடன் இணைந்து "டீ' கடை நடத்தினர்.

 ரயில் நிலையங்களில் டீ விற்றார். குஜராத் பல்கலைக்கழகத்தில் "அரசியல் அறிவியலில்' முதுநிலை பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.

பொறுப்புகளுக்கு அசராதவர்: 1987ல் பா.ஜ., வில் சேர்ந்தார். 1995ல் ஐந்து மாநிலங்களுக்கு பா.ஜ., தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். பின் 1998ல் குஜராத் மற்றும் இமாச்சலில் நடந்த தேர்தலில், பா.ஜ., ,சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார்.

இப்பணியை திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

"ஹாட்ரிக்' வெற்றி : மோடி முதல்வராக பதவியேற்ற போது, பூகம்பத்தின் பாதிப்பால் மாநிலம் பின் தங்கிய நிலையில் இருந்தது. பின் அடுத்தாண்டு நிகழ்ந்த வன்முறை சம்பவமும் மாநில வளர்ச்சியில் தடைக்கல்லாக அமைந்தது. இருப்பினும் தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர், நாட்டிலேயே குஜராத்தை பல துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார்.

2002 , 2007, 2012 என தொடர்ந்து வெற்றி பெற்று, 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே.

காந்திநகர் டூ டில்லி ; 2012 சட்டபை தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்ற தொண்டர்கள், இவரை "அடுத்த பிரதமர்' என்று கோஷமிட்டனர். அவர்களின் நம்பிக்கையின் படி, 2013 செப்., 13ம் தேதி, கோவாவில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தனது பணியை தொடங்கினார்.

இடைவிடாத பிரசாரம் மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்தார். சாதாரணமாக இருந்த 2014 அரசியல் களம், மோடி அலையாக மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை "நமோ' கோஷம் ஒலித்தது. மே 16ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் மோடி இன்று(26-05-2014) பிரதமராகிறார்.

நரேந்திர மோடியின் வரலாற்றை விரிவாக படிக்க ...


முடிந்தவரை பிறருடன் பகிரவும்...

முடிந்தவரை பிறருடன் பகிரவும்...

ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

பதில் வருமா வராதான்னு தெரியாது,

எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது

அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

முடிந்தவரை பிறருடன் பகிரவும்...


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247,


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அவற்றைத் தெரிந்து கொள்வோம், இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்


அ __எட்டு


ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

 இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன . அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்..

 வாழ்க தமிழ்!! அனைவர்க்கும் பகிருங்கள் ...


கபில்சிபல்
கபில்சிபல்

கபில்சிபல்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இதனால் ஆ.ராசாவுக்குப் பதில் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற கபில் சிபல் மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மறுத்தார்.
ஆனால் அதன்பிறகு தான் சி.பி.ஐ. விசாரணையில் பல ஆதாரங்கள் சிக்கி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த கபில் சிபல் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவர் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை எவ்வளவோ அதே அளவு வாக்குகளை கபில் சிபல் பெற்றுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டது. கபில் சிபல் தேர்தலில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று சொன்னவருக்கு அதே எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கபில் சிபலுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பி.சிதம்பரம், மணீஷ் திவாரி ஆகியோரும் ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் கபில் சிபலை டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் ஹர்ஷ்வர்த்தன் தோற்கடித்தார். 
ஆம்ஆத்மி வேட்பாளர் அததோஷ் 2–வது இடம் பெற்றார். 

கபில் சிபல் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் இன்று மே 23-05-2014 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  தேதி காலை 10 மணியளவில் வெளிவர இருக்கிறது..!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை

என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.

அனைத்து சகோதர சகோதரிகளின் குழந்தைகள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்...!

அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகள்

நன்றி



நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!

அவசர உதவி அனைத்திற்கும்
911


வங்கித் திருட்டு உதவிக்கு
9840814100


மனிதஉரிமைகள் ஆணையம்
044-22410377


மாநகரபேருந்தில அத்துமீறல்
09383337639

போலீஸ் SMS 
9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS 
9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS 
98400 00103

போலீஸ்
100

தீயணைப்புத்துறை
101

போக்குவரத்துவிதிமீறல
103

விபத்து
100, 103

ஆம்புலன்ஸ்
102, 108

பெண்களுக்கானஅவசர உதவி
1091

குழந்தைகளுக்கான அவசர உதவி
1098
அவசர காலம் மற்றும் விபத்து
1099

முதியோர்களுக்கான அவசர உதவி
1253

தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி
1033

கடலோர பகுதி அவசர உதவி
1093

ரத்த வங்கி அவசர உதவி
1910

கண் வங்கி அவசர உதவி
1919

விலங்குகள் பாதுகாப்பு 
044 -22354959/22300666

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்....


இந்த தகவலை அனைவர்க்கும் பகிருங்கள் ...!!

வீட்டில் எறும்பு தொல்லை தாங்கலையா?இத ட்ரை பண்ணுங்க...

வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா?


மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா?

இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.

ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம்.

மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை.

அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்
எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.

புதினா
எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

பேக்கிங் சோடா


எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்


டால்கம் பவுடர்

இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள்.
அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.

கிராம்பு
எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.

பூண்டு
எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு


எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

போராக்ஸ் பவுடர்

போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .   கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.  ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.   மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.


மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .


சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?


நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .


சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

cow

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.


தமிழர் பெருமையை பரப்ப இதை share செய்யுங்கள்..


சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்

மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.

நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.

கொய்யாபழம் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்...!!!!

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

கொய்யாபழம் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்...!!!!

6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும்கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

                                comedy

MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது....

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

காமெடி



பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்...

MBA : நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது..

அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்...
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..!

அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!


Pulpit Rock

அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள்.

அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.

ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

Pulpit Rock


ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே
இந்த ஆபத்தான இடத்தை நோக்கி போகலாம்.

தற்செயலாக கால் இடறி விழுந்தால் 1,982 அடி அதலபாதாளத்தில்
விழ வேண்டும்.

Pulpit Rock


நார்வேயில் அமைந்துள்ள Pulpit Rock என்று அழைக்கப்படும் இந்த பிரதேசம் வருடம்தோறும் ஆயிரக்கணக்கான த்ரில்லான சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றது.

Pulpit Rock


அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை அங்கு வரும் த்ரில்லான சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.
விளிம்பில் தலை வைத்துப் படுத்து எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று உதார் விடுபவர்களும் அங்கு வருகிறார்களாம்…

எங்கே நீங்களும் அந்த காட்சியைப் பார்க்கப் போகின்றீர்களா?
கவனம், தலையைப் பிடித்துக் கொண்டு பாருங்கள்.

அமெரிக்காவுக்கு எப்பவுமே தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கு இயற்கையும் கூட விதிவிலக்கு இல்லை.

மிஸோரி மிஸி- ஸிபி

உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதிதான்.

இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள்.

அமெரிக்காவால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸி- ஸிபி நதிதான் என்று அடம்பிடித்தது.

இதன் நீளம் 4 ஆயிரத்து 945 மைல்கள் என்று கூறியது.

அதன் கூற்று உண்மையாக இருந்தாலும் புவியியல் வல்லுனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

நைல் என்பது ஒரே நதி.

ஆனால் அமெரிக்காவில் ஓடும் மிஸோரி, மிஸிஸிபி நதிகள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றுபவை.

மிஸோரி நதி 2 ஆயிரத்து 475 மைல் நீளமும், மிஸிஸிபி நதி 2 ஆயிரத்து 470 மைல் நீளமும் கொண்டவையாக இருந்தன.

இதனால் தான் புவியியல் வல்லுனர்கள் இந்தக் கூற்றை ஏற்கவில்லை.


இதேபோல்தான் நயாகரா விஷயத்திலும் நடந்தது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள ருவைரா நீர்வீழ்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. இங்கு ஒரு வினாடிக்கு 2 ஆயிரத்து 900 காலன் நீர் விழுகிறது.

ஆனால் நயாகராவில் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 300 காலன் நீர் தான் விழுகிறது.

உயரத்தை கணக்கெடுத்தாலும் நயாகரா கிடையாது.


வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் மிக அதிக உயரமாக 2 ஆயிரத்து 648 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.


அகலமான நீர்வீழ்ச்சி என்று பார்த்தால் அதுவும் இல்லை.

லாவோஸ் நாட்டில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி தான் அகலமான நீர் வீழ்ச்சி.

இப்படி உயரத்தில், நீளத்தில், அகலத்தில், கொள்ளளவில் என்று எந்த ஒரு அளவீடிலும் நயாகராவுக்கு முதலிடம் இல்லை தான்.


ஆனாலும் நீர்வீழ்ச்சி என்ற உடன் அனைவரின் மனக் கண்முன் தோன்றி மகிழ்விப்பது நயாகரா நீர்வீழ்ச்சி தான்.

அதிலும் அதன் இருப்பிடத்திலும் அது பிற நீர்வீழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

எப்படியோ இந்த விஷயத்தில் அமெரிக்கா நினைத்தது போல் நயாகரா முதன்மையான நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.