பூண்டு பாலில் இருக்கும் நன்மைகள்



  • இந்தப் பாலை முகத்தில் தடவி உலரவிட்டு கழுவினால் முகம் மாசு மருவின்றி பிரகாசமாக இருக்கும்.
  • மலேரியா, காசநோய், யானைக்கால், பிளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
  • உடலில் வாய்வு பிடிப்பு, கை கால் வலி, முதியவர்களுக்கு மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு உடல் வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவி செய்கிறது.
  • பூண்டுப் பாலை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழிந்து போகிறது. மேலும் நுரையீரல் அழற்சியை விரைவாக சரிசெய்து விடுகிறது.

 நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம் 

நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் இவரது முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் நாடகங்களில் நடித்து வந்தார். 1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

2009-ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி தம் 75 வயதில் இறந்தார்.

1000 படங்களில் நடித்த பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்த தினம் இன்று.

கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்கள் 

பொதுவாகவே கத்தரிக்காயை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்புவதில்லை. ஆனால் அதன் நன்மைகளோ ஏராளம்.

கத்தரிக்காய் குறித்த ஆய்வு ஒன்றின் படி, அதில் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இல்லை. 

அப்படியிருந்தும் ஏன் இது நன்மை தரும் உணவு என்று கூறுகிறோம் என்று தெரிந்து கொள்வோம்.

  •  இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும்.
  • உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது.
  • கத்தரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் காய்கறியாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை சிறந்து சக்தி தரும் பொருட்களாக அமைகின்றது.
  • நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கையான முறையில் நிறுத்த விரும்பினால் இதோ ஒரு கத்தரிக்காய். இயற்கை முறையில் நிக்கோட்டின் உள்ள காய் கத்தரிக்காயாகும். இது நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படுகிறது.


 தினம்  2 கடி ஜோக்ஸ்

தினம்  2 கடி ஜோக்ஸ்


1.தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்?

தை மாசம் நாம சூரியனுக்கு பொங்கல் வைப்போம்!

சித்திரை மாசம் சூரியன் நம்மளை பொங்க வைக்கும்!!!


2.மதுவுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

 மது குடிச்சா நாம ஆடுவோம் .!!

 விஷம் குடிச்சா நம்ம முன்னாடி மத்தவங்க ஆடுவாங்க.!!

 இந்திய செய்தித்தாள் தினம்



  •  இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  •  இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.
  •  இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


 ஜியோவிற்கு 5-வது இடம்

ஜியோவிற்கு 5-வது இடம்

பில்லியனர் முகேஷ் அம்பானியின் "நான்கு வயதே நிரம்பிய" தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவானது உலகளவில் ஐந்தாவது வலுவான பிராண்டாக உருமாறியுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த பட்டியலில் ஃபெராரி மற்றும் கொக்கோ கோலா போன்ற நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ளதும் .

முதல் இடத்தை பெற்ற நிறுவனம்

உலகளாவிய பிராண்டுகள் குறித்த பிராண்ட் ஃபைனான்ஸின் ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவில் வலுவான 500 பிராண்டுகளின் தரவரிசையில், விசாட் முதலிடத்தில் உள்ளது. .

 புத்திசாலி சீடன் "சுத்தமான உப்பு" வாங்கிவந்த கதை

புத்திசாலி சீடன் "சுத்தமான உப்பு" வாங்கிவந்த கதை

ஒரு கிராமத்தில் சிறுஆசிரமம் அமைத்து முட்டாளான பரமார்த்தர் அடிமுட்டாள்களான தனது 5 சிஷ்யர்களுடன் இருந்தபோது, அவர்கள் திருத்தல யாத்திரை செல்ல ஆவல்கொண்டு, வழியில் சாப்பிட கட்டுசாதம் செய்து எடுத்துக்கொள்ள எண்ணி, பரமார்த்தகுரு ஒருசீடனை அழைத்து, சமையலுக்கு சுத்தமான உப்பை வாங்கிவா என அனுப்ப, கடையில் உப்பை வாங்கிய சீடன் " உப்பு சுத்தமானதுதானே"? எனக்கேட்க, அவனோ உப்பில் எல்லாம் ஒன்றுதான் எனக்கூறினான்.

 சீடன் " என்ன இப்படிக் கூறிவிட்டாய்? என் குருநாதர் சுத்தமான உப்பை மட்டுமே வாங்கிவரச் சொல்லியிருக்கிறார் " எனச்சத்தமிட்டான். கடைக்காரர் இவர்களின் இலட்சணத்தை உணர்ந்துகொண்டு " ஐயா, மன்னித்துவிடுங்கள், உங்கள் குரு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், நீங்கள் உப்பை சமைக்குமுன் நன்றாக தண்ணீர்விட்டு அலசி சுத்தப்படுத்தி பயன்படுத்துங்கள்" எனக்கூறி அனுப்பிவிட்டார். 

"அப்படி வா வழிக்கு, யாரை எமாற்றப்பார்த்தாய்" என்று கிளம்பி வரும்வழியில், ஒரு ஆற்றைக் கடந்தபோது, உப்பை இந்த ஆற்றில் அலசிச் சென்றால், குருநாதரும் சுத்தமான உப்பா என்று நம்மைக் கேட்டால்.. நன்கு ஆற்றில் அலசி சுத்தப்படுத்தி தான் கொண்டுவந்தேன் என்றால் குரு நம்மைப்பாராட்டுவார் என எண்ணி, உப்பைப் பையுடன் நீரில் நன்கு அமிழ்த்திப்பின் பையைத் தோளில் போட்டுக்கொண்டு, நனைந்த உப்பு கரைவதை உணராமல், ஆசிரமம் சென்றான். 

எங்கே உப்பு என்று குருநாதர் கேட்க, சுத்தமான உப்பு வாங்க லேட்டாகிவிட்டது என்றுகூறி பையை அவரிடம் கொடுத்தான். " என்ன வெறும்பை.. உப்பு எங்கே?" இவனும் கடைக்காரன் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம் என்றதால் வழியில் ஆற்றில் சுத்தம் செய்ததாகக்கூற, முட்டாள் குரு, "சரியாகத்தான் செய்திருக்கிறான் சீடன்.

 ஆனால் உப்பு எங்கேபோனது? என்று சமையலை மறந்து, முட்டாள் சீடன் நீரில் கரைத்த உப்பு நீரோடு சென்றதை அறியாமல் சுத்தமான உப்பு எங்கே போனது? என யோசனையில் ஆழ்ந்தனர். மற்ற சீடர்களும் யோசிக்க ஆரம்பித்தனர், இப்போது தெரிகிறதா, இவர்களின் முட்டாள்தனம்.


கீரைகளின் பயன்கள்
கீரைகளின் பயன்கள்

  • கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன.
  • இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.
  • கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்.
  • கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.
  • கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
  • இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
  • கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது.
  • கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

 தினம்  2 கடி ஜோக்ஸ்

தினம்  2 கடி ஜோக்ஸ்


1.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

 மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது. 
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னாகால் பண்ண முடியாது.

2.பொங்கலுக்கும் இட்லி, தோசைக்கும் என்ன வித்தியாசம்?

பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு இருக்கும்
 ஆனா இட்லி, தோசைக்கு லீவு இருக்காது.



















 

         லாலா லஜபதி ராய்

லாலா லஜபதி ராய்


  •  இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.
  • இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.
  • இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
  • இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் தன்னுடைய 63வது வயதில் (1928) மறைந்தார்.


பாலைவனத்தில் ஒரு  கை..!

பாலைவனத்தில் ஒரு  கை


  •  பாலைவனத்தில் ஒரு தனித்துவமான கலை பொருள் உள்ளது, ஒரு பெரிய கை சிற்பம் மணல் ஒரு நபர் உதவியின்மை மற்றும் தனிமை ஒரு அடையாளமாகும்.
  • இது அன்டோபகாஸ்டா நகருக்கு தெற்கே 46 மைல் தொலைவில் உள்ளது.
  • இது பத்தொன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு நபர் இருப்பதை நினைவூட்டுகிறது.

 தினம்  2 கடி ஜோக்ஸ்..!

தினம்  2 கடி ஜோக்ஸ்
1.ரவி-சோமு

ரவி: குரைக்கிற நாய் கடிக்காது

சோமு:ஏன்?

ரவி: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய
முடியாது, அதனால தான்.

2ரவி-சோமு

சோமு :டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு" எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா

 ரவி :அது கூட பரவாயில்லை மாப்பிலே நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா

பசுவோடு சண்டை

பசுவோடு சண்டை


 ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.  சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது.

 மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை.  வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். 

பசு அசையவில்லை  அப்போது  விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர்.  

போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார்.  

மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.  அந்த வழியாக ஒரு  வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான்.  பசு புல்லை சாப்பிட எழுந்தது.

 சிறுவன் புல்லை  காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 

 அன்பால் எதையும் சாதிக்கலாம்

 தக்காளி பழத்தின் நன்மைகள்

தக்காளி பழத்தின் நன்மைகள்

தக்காளியை ஒரு பொருளாக, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.

உங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும்.


 தினம்  2 கடி ஜோக்ஸ் (திருடன்)


தினம்  2 கடி ஜோக்ஸ் (திருடன்)

1.காவலர் -திருடன்


காவலர்: எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடினே?
திருடன்: இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு.
காவலர்: அதுக்கு??
திருடன்: அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு…
காவலர்: 😮😮😮 ...?

2.வீட்டுக்காரர் - திருடன்

வீட்டுக்காரர்: உனக்கு எவ்வளவு வயசிருக்கும்?

திருடன்: ஏன் கேட்கிறே?

வீட்டுக்காரர்: நான் வயசுக்கு மரியாதை தருபவன். நீங்க போன பிறகு திருடன்-னு கத்தறதா, திருடர்-ன்னு கத்தறதான்னு சந்தேகம்.

தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினம்


  •  இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


 ஹோமி ஜஹாங்கீர் பாபா

ஹோமி ஜஹாங்கீர் பாபா
  • ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 
  • 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
  • இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது(1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967 முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(டீhயடிhய யுவழஅiஉ சுநளநயசஉh ஊநவெசந) எனப் பெயரிடப்பட்டது.
  • அமெரிக்காவில், 1942ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாடாவுக்கு கடிதம் எழுதினார். அதன்பின் அங்கு ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு, அதன் இயக்குநராக ஹோமி பாபா பொறுப்பேற்றார்.
  • அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
  •  ஜஹாங்கீர் ஹோமி பாபா தனது 56வது வயதில் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மறைந்தார்

 உடல்நல ரகசிய( ஜோக்)

உடல்நல ரகசிய( ஜோக்)

எல்லோரும் 100 வயதான ஒரு மனிதரிடம் அவரது உடல்நல ரகசியங்களை கேட்டார்கள்:

 கிழவன் சொன்னான்:

 நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.

 எனக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன.

 நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது என் மனைவிக்கு வாக்குறுதி அளித்தேன்

 இரண்டு பேர் சண்டையிடும்போது,

 தோல்வியுற்றவர் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

 75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வருகிறேன்!

 எல்லோரும் மீண்டும் கேட்டார்கள்:

 ஆனால் உங்கள் மனைவியும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

 கிழவன் பதிலளித்தார்:

 இன்னொரு ரகசியத்தைச் சொல்கிறேன்.

 அவள் என்னைப் பின்தொடர்ந்தாள்

 நான் 5 கிலோமீட்டர்களை முடிக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த!

 🤣🤣🤣🤣🤣

பொது வெளியில் தோன்றிய  அலிபாபா நிறுவனர் ஜாக் மா 

பொது வெளியில் தோன்றிய  அலிபாபா நிறுவனர் ஜாக் மா ..!

அலிபாபா நிறுவனர் ஜாக் மா பல மாதங்களாக ‘காணாமல்’ போன பிறகு முதல் பொது வெளியில் தோன்றினார்..

  •  சீனாவைத் தளமாகக் கொண்ட முன்னணி இணைய வழி வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி செல்வந்தருமான ஜாக் மா கடந்த 3 மாதங்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று புதன்கிழமை முதல் முதலாக பொது வெளியில் தோன்றினார்.
  • சீனாவில் கிராமப்புறங்களைச் சோ்ந்த 100 ஆசிரியர்களுடன் இன்று இணையவழி நேரலை கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.
  • ஜாக் மா பொதுவெளியில் தோன்றியதை அடுத்து அவரது நிறுவனமான அலிபாபா பங்குகள் ஹொங்கொங் பங்குச் சந்தையில் இன்று 5 வீதம் உயர்ந்தன.
  • சீன அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த ஜாக் மா கடந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்வேறு சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பொது வெளியில் தோன்றியுள்ளார்.
  • சீனாவில் இணையதளம் வர்த்தகம் மூலம் பெரு வெற்றிபெற்று அந்நாட்டில் முன்னணி செல்வந்தராக உருவான ஜாக் மா, தற்போது உலகம் முழுவதும் அலிபாபா நிறுவனத்தின் கிளைகளை பரப்பி வருகிறார்.
  • இந்த வளர்ச்சியின் பின்னணியில் சீன அரசுக்கும் ஜாக் மாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில தடைகளை சீனா விதிப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜாக் மா கடந்த ஒக்டோபர் மாதம் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
  • இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து சீன அரசின் பல்வேறு தொல்லைகளுக்கு அலிபாபா நிறுவனமும், ஜாக் மாவும் ஆளானதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களாக ஜாக் மா பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
  • ஜாக் மா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஜாக் மா இருப்பிடம் குறித்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது.
  • அவர் பொது வெளியில் வராத விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் 3 மாதங்களின் பின்னர் அவா் இன்று பொது வெளியில் தலைகாட்டி தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.

தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையில் முடியும்.

தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையில் முடியும்.தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையில் முடியும்.

ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது. 

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

 

 தினம்  2 கடி ஜோக்ஸ் (கணவன் - மனைவி) 

தினம் 2 கடி ஜோக்ஸ்..!


1.கணவன் - மனைவி

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி. 

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் :😮😮😮 ?

2.மனைவி-கணவன்

மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க.

கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...😕 

மனைவி : 😅😅😅 !

        நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் - பஸ் ஆல்ட்ரின்

நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் - பஸ் ஆல்ட்ரின்


  •  அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும். 
  •  இவர் பஸ் (Buzz) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே, இவர் தனது பெயரை ,பஸ் ஆல்ட்ரின், என அதிகாரபூர்வமாக 1988ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். 
  • 1963ஆம் ஆண்டு நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  •  முதன்முதலாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் நிலாவை நோக்கி பயணம் செய்த இவர், சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமைக்குரியவர்.


.

தவளை தன் வாயால் கெடும்..!

தவளைக்கு வந்த சோதனை


 சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.

ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது.  தவளை  எலியிடம் உனக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்டது. எலியும்  தெரியாது என்றது.தவளை, "உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம்... தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.

இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.


 தினம்  2 கடி ஜோக்ஸ் (மருத்துவர்)

தினம் 2 கடி ஜோக்ஸ்..!

1.நோயாளி- டாக்டர்

நோயாளி : டாக்டர் என் கிட்ட நிறைய சொத்து இருக்கு, பணமும் இருக்கு. கூடவே கிட்னியில் நிறைய கல்லும் இருக்கு!
 
டாக்டர்      :  கவலைப்படாதீங்க.. ரெண்டையும் சுத்தமா கரைச்சிருவோம்!

நோயாளி:😅😅😅.

2.நர்ஸ் - டாக்டர்

நர்ஸ் : டாக்டர் அந்த டாக்டர் நமக்கு கடுமையான போட்டியா இருப்பார் போல.

டாக்டர் : எப்படிச் சொல்ற ..?

நர்ஸ் : நீங்க எட்டாவதுதான் பாஸ்.. ஆனா அவர் பத்தாவது பாஸ் .

நோயாளி :😲😲😲😲.



தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் - ஜேம்ஸ் வாட்


  •  பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
  •  இவருக்கு சிறு வயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
  •  இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார்.
  •  இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.
  •  இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது. மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவர் இவரே.
  •  இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 83 வயதில் (1819) மறைந்தார்.

 

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை அதுவும் 1957லில்

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை அதுவும் 1957ல்



கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......???? 
ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. 1957 உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.
1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது
 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது.
 ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!

ஆல்பர்ட் டிராவல் இதற்காக எடுத்த பாதை
இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா.

மருத்துவத்தொழில்

மருத்துவத்தொழில்

“விஜய்ப்பூர்” என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் உதவி வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் செய்தால் இக்குணம் மாறும் எனக்கருதி, சிறந்த அறிவாற்றல் மிக்க “ரமா” என்கிற பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். 

திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் அவன் இதற்கு முன்பு உதவி செய்த அனைவருக்கும் அதனால் பயன் கிட்டியதா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். 

இதை கேட்டு அவர்கள் அனைவரிடமும் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள். அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று ரகு கூறிய போது “சந்திரநகர்” என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை யாரும் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ரகுவை அவரிடம் சென்று மருத்துவம் பயிலக்கூறினாள் ரமா.

 ரகுவும் வைத்தியநாதனிடம் ஒரு வருடம் மாணவனாக இருந்து வைத்தியமுறைகளை கற்று தேர்ந்தான். அப்போது வைத்தியநாதன் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக உறுதியளித்தார்.

பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்கத்தொடங்கினான். அப்படி ஒரு முறை ஏழை ஒருவருக்கு ரகு வைத்தியம் பார்க்கும் போது செல்வந்தர் ஒருவர் குறுக்கிட்டு தனக்கு உடனடியாக வைத்தியம் பார்க்குமாறும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக கூறினான். 

ஆனால் ரகு மறுத்துவிட்டான். மற்றொருநாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான். 

 இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசிர்வதித்தார். அதோடு சந்திராநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறிவந்தார். ரகுவும் ஒவ்வொருமுறையும் அங்கு செல்ல காலம் தாழ்த்தி வந்தான். 

ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குரு வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள்.

 பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா?


 கற்பூரவள்ளியின் நன்மைகள்

கற்பூரவள்ளியின் நன்மைகள்

கற்பூரவள்ளி அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ்.
இந்த கற்பூரவள்ளிக்கு "ஓமவல்லி" என்ற ஓரு பெயரும் உண்டு.இந்த கற்பூரவள்ளி இலையை லேசாக கசக்கினால் ஓமத்தின் வாசம் வரும்.
  • சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.
  •  பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது.
  •  ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.
  •  வயிற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது.
  •  உணவுகளின் சுவையில் பயன்படுத்தப்படுகிறது.
  •  வெப்பமண்டல நாடுகளில் ஏடிஸ் கொசுக்களை விரட்ட கற்பூரவள்ளி நடப்படுகிறது

                           தினம்  2 கடி ஜோக்ஸ். (அரசியல்)

                                   தினம் 2 கடி ஜோக்ஸ்..!

1.அரசியல்வாதி - தொழிலதிபர்

அரசியல்வாதி:- (போனில்) ஹலோ மேடம்! நான் ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர் பேசறேன்!

தொழிலதிபர்:- வணக்கம்! சொல்லுங்க என்ன விஷயம்?

அரசியல்வாதி:- நம்ம தொகுதி "அமைச்சரை" தீவிரவாதிங்க கடத்தி வெச்சுக்கிட்டு, நூறு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டறாங்க. கொடுக்கலேன்னா பெட்ரோல் ஊத்தி, உயிரோடு கொளுத்திடுவாங்களாம்!

தொழிலதிபர்:- சரிங்க! இதுல நான் என்ன பண்ணணும்?

அரசியல்வாதி:- 'கொரோனா' காலமுங்கறதனால, அரசு பெரிய நிதிப் பற்றாக்குறைல சிக்கி தவிக்குது. அதான் உங்கக்கிட்ட...

தொழிலதிபர்:- சொல்லுங்க! நான் எத்தனை லிட்டர் "பெட்ரோல்" அனுப்பணும்!

2.அமைச்சர் - மன்னன்

அமைச்சர் : மன்னா, நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது?

மன்னன் : ரிப்பனை கட்டிக் கொண்டு ஒலுங்க ஆடச்சொல்லும் அமைச்சரே?

அமைச்சர் : 🤭🤭🤭


குதிரையின் விலை 1 பவுன்

தெனாலிராமன் கதைகள்

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே... இது என்ன நியாயம்" என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார். 

2 கடி ஜோக்ஸ்..!

தினம் 2 கடி ஜோக்ஸ்..!

1.பானு - கமலா
பானு:- இரண்டு நாளுக்கு முன்னாடி உங்க பிறந்தநாளுன்னு சொன்னீங்க, உங்க கணவர் உங்களுக்கு என்ன வாங்கி கொடுத்தார்?

கமலா:- எங்கிட்ட உனக்கு என்ன வேணுமுன்னு கேட்டார். எனக்கு இந்த "கல்" வெச்ச நகைகள் ரொம்ப பிடிக்குமுங்கறதனால, பெருசா கல் வெச்ச ஏதாச்சும் வாங்கிக் கொடுங்கன்னு சொன்னேன்!

பானு:- அப்பரம் அட்டிகை வாங்கிக் கொடுத்தாரா, தோடு வாங்கிக் கொடுத்தாரா?

கமலா:-  "கிரைண்டர்" வாங்கிக் கொடுத்தார்!

பானு:-😂😂😂


2.கணவன்-மனைவி

கணவன்:- குட்டிம்மா! இந்த 'ஆன்ட்ராய்டு' போன் வந்த பிறகுதான் நிறைய பேருடைய வாழ்க்கையே நாசமா போச்சு!

மனைவி:- சரியா சொன்னீங்க .ஆனா, நம்ம கல்யாணத்திற்குப் பிறகு நீங்க ஆன்ட்ராய்டு போன் உபயோகித்து, நான் பார்த்ததே இல்லையே, அப்புறம் எதை வெச்சு சொல்றீங்க ..?

கணவன்:- உன்னை பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு, உன்னை நிமிர்ந்து ஒரு முறைக் கூட பார்க்காம, குனிஞ்சு போனையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அதை வெச்சுத்தான் சொல்றேன்!

மனைவி:-😡😡😡

கணவன்:-😂😂😂😂

 பெஞ்சமின் பிராங்கிளின் 

பெஞ்சமின் பிராங்கிளின்

  •  ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.
  •  இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளார்.
  •  இவர் Poor Richards Almanack என்ற புகழ்பெற்ற இதழை இவ்வுலகுக்குத் தந்தவர்.
  •  மின்சாரம், பற்றியும் இடி மின்னல் பற்றியும், புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் (bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.
  •  அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிராங்கிளின் 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.


 எலன் மஸ்க்

எலன் மஸ்க்


சிலிக்கான் வேலியில் 1 பில்லியன் மதிப்புள்ள மூன்று நிறுவனங்களை நிர்வகித்த இரண்டாவது நபர் என்ற மாபெரும் சாதனைக்கு உரியவர் Elon Musk (எலன் மஸ்க்). முதல் நபர் James H. Clark. எலன் மஸ்க் உருவாக்கிய மிகப்பெரிய கம்பெனிகள் பேபால் (PayPal), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), and டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors). எலன் மஸ்க் தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவரெல்லாம் இல்லை. ஆனாலும் எப்படி எலன் மஸ்க் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை அமைத்தார்.

சாதிக்க அவர் சிறு வயதில் செய்த விசயங்கள் என்ன? எலன் மஸ்க் பில்லியனர் ஆனது எப்போது? கனவுகளை நோக்கி அவர் எவ்வாறு பறந்தார்? என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் மந்திரக்கோலாக எலன் மஸ்க் அவர்களின் வாழ்க்கை பயணம் அமையும் என நம்புகிறேன்.

12 வயதில் முதல் கேம் விற்பனை

எலன் மஸ்க் ஜூன் 28, 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா பகுதியில் பிறந்தார். ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் பிறந்த எலன் மஸ்க் க்கிற்கு 9 வது வயதிலேயே அவருடைய பெற்றோர்கள் கணினியை வாங்கி கொடுத்தார்கள் [Commodore VIC-20] . எப்படி இளமை காலத்தில் பில்கேட்ஸ் சாதனைக்கு பள்ளியில் கணினி அறிமுகம் கிடைத்தது மிகப்பெரிய காரணமாக அமைந்ததோ அதைப்போலவே எலன் மஸ்க் க்கிற்கும் அமைந்தது.

கணினியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட எலன் மஸ்க் தன்னுடைய 12 ஆம் வயதில் தானே உருவாக்கிய Blastar எனும் சூட்டிங் கேமை $500 க்கு விற்றார்.

அமெரிக்காவிற்கு செல்ல ஆசைப்பட்ட எலன் மஸ்க்

தென் ஆப்ரிக்காவில் பிறந்த எலன் மஸ்க் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர ஆசைப்பட்டார். தனது கனவுகளை நினைவாக்கிக்கொள்ள பெற்றோரை விட்டு தனித்தே அமெரிக்கா செல்ல அவர் தீர்மானித்து இருந்தார். ஆனால் அப்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மனம் தளராத எலன் மஸ்க் கனடாவில் இருக்கின்ற தன் அம்மாவின் உறவினர் வீட்டில் தங்கினார். அங்கு கிடைக்கின்ற சின்ன சின்ன வேளைகளில் ஈடுபடுத்திக்கொண்டு அப்போதைய வறுமையான பொழுதுகளை கழித்ததாக நினைவு கூறுகிறார். பின்னர் கனடாவின் குடியுரிமையை பெற்ற பிறகு, 19 ஆம் வயதில் ஓண்டாரியாவில் இருக்க கூடிய Queens University in Kingston எனும் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவே அமெரிக்கா பயணிக்கிறார்.

அங்கு இரண்டு ஆண்டுகள் படிப்பினை முடித்த பிறகு 1992 இல் அமெரிக்காவிற்கு நிரந்தரமாக இடம்பெயருவதற்கான வாய்ப்பு கிட்டியது. அதற்க்கு முக்கிய காரணம் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் படிப்பதற்கான இடம் கிடைத்ததே. அந்த கல்லூரியில் தான் இயற்பியல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் இளங்கலை பட்டம் பெற்றார்.

உலகை மாற்றும் கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பிய எலன் மஸ்க்

எலன் மஸ்க் தன்னுடைய கல்லூரி காலங்களில், உலகை மாற்றக்கூடிய கண்டுபிடிப்புகளில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்பினார். வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானது “ஒரு சரியான கேள்வியை உருவாக்குவது தான்” அதனை செய்துவிட்டால் பின்னர் அதனை நோக்கி பயணிப்பது மிக எளிமையானது என்கிறார் எலன் மஸ்க்.

அப்படி எலன் மஸ்க் அவர்களுக்கு தோன்றிய கேள்வி தான் “what things would have the great impact on the future of humanity’s destiny?” அதாவது மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் கண்டுபிடுப்பு எது. அந்த கேள்விக்கு பதிலாக அவர் நினைத்தது இணையம் (Internet), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் (renewable energy sources), விண்வெளி குடியேற்றம் (space colonization).

Zip 2 & PayPal உருவாக்கம்

தன்னை எதில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்ட எலன் மஸ்க் க்கிற்கு தான் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய விசயங்கள் அதிக பணம் தேவைப்படுகிற விசயங்கள் என்பதும் தெரிந்தே இருந்தது. அதற்க்கான பணியில் ஈடுபட ஆரம்பித்தார் எலன் மஸ்க்.

Physics and materials science இல் படிப்பதற்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது. சேர்ந்த இரண்டு நாட்களில் கல்லூரியில் இருந்து வெளியேறி தன்னுடைய சகோதரர் கிம்பல் மஸ்க் உடன் இணைந்து Zip2 எனும் ஐடி நிறுவனத்தை துவங்குகிறார். அதிகாலையில் வேலையை துவங்கினால் மாலை வரை கடுமையாக உழைக்கும் பேர்வழி எலன் மஸ்க். வேலை முடிந்த பின்னரும் அங்கேயே தங்கிவிடும் அவர் குளிப்பது உள்ளிட்டவைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு அரங்கை பயன்படுத்தி வந்தார். இரண்டு ஆண்டுகள் இந்த கடின சூழலை சமாளித்துக்கொண்டு பணியாற்றினார் எலன் மஸ்க்.

அப்போது தான் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக வளரத்துவங்கியிருந்த காலம், ஆனால் ஒருவரும் அதிலிருந்து கணிசமான லாபத்தை சம்பாதித்திருக்கவில்லை. ஆனால் அதனை செய்வதற்கு தயாரானது எலன் மஸ்க் இன் கம்பெனி. ஆமாம் செய்தி நிறுவனங்களுக்காக தளங்களை உருவாக்கினார்.

1999 இல் புகழ்பெற்ற அல்டாவிஸ்டா (Altavista) எனும் சர்ச் என்ஜின் நிறுவனம், எலன் மஸ்க் இன் Zip 2 கம்பெனியை $307 மில்லியன் பணம் மற்றும் $34 மில்லியன் காப்புத்தொகைக்கு வாங்கியது.

எலன் மஸ்க் - PayPal

Zip 2 கம்பெனியை விற்றபிறகு எலன் மஸ்க், எலெக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையிலான தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். X.com என்ற நிறுவனத்தை துவங்கினார். பின்னர் இந்த நிறுவனம் Confinity எனும் நிறுவனத்துடன் இணைந்தது. அதன் பிறகே, 2001 இல் புதிய நிறுவனத்திற்கு Paypal என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. Paypal நிறுவனத்தின் சேர்மன் ஆக உயர்ந்தார் எலன் மஸ்க்.

2002 இல் Paypal நிறுவனத்தை ebay 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. எலன் மஸ்க் அவர்களின் பங்காக 180 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது. தனது கனவுகளை நோக்கி பயணிக்க தேவையான பணம் ஓரளவிற்கு கிடைத்துவிட்டதாக நம்பினார் எலன் மஸ்க்.

டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors)

Martin Eberhard and Marc Tarpenning எனும் இரண்டு பேரால் 2003 ஆண்டு தொடங்கப்பட்டது தான் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம். பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத, மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய காரினை வடிவமைப்பதில் ஈடுபட்ட முதல் பெருமைக்குரிய நிறுவனம் என்றே சொல்லலாம்.

மாற்று எரிபொருள் பற்றிய தனது விருப்பத்தோடு டெஸ்லா ஒத்துப்போனதால் 70 மில்லியன் டாலரை தனது பங்களிப்பாக கொடுத்து இணைந்துகொண்டார். இதன் மூலமாக இயக்குனராக இணைந்துகொண்டார். அப்படி பெரிய பொறுப்பில் இணைந்திருந்தாலும் அவர் வடிவமைப்பு நிர்வாகத்திலேயே பணியாற்றினார். அதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது.

Tesla Roadster எனும் முதல் எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பில் ஈட்பட்டதற்காக Global Green 2006 product design award ஐ பெற்றார். பின்னர் இந்த காரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியிட முடியாமல் போக, பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க ஆரம்பித்தார் எலன் மஸ்க். அதன் பிறகு டெஸ்லா நிறுவனம் பல அதிரடி மாற்றங்களை சந்திக்க துவங்கியது. இறுதியாக 2008 இல் Tesla Roadster வெளிவந்தது.

மனைவி விவாகரத்து போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும் டெஸ்லா கம்பெனியை திறம்படவே நடத்திக்கொண்டு வந்தார் எலன் மஸ்க். டெஸ்லா பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றதற்கு Sedan Tesla Model S கார் மிக முக்கிய காரணம். $69,900 விலையுள்ள இந்த sedan Tesla Model S கார் பாதுகாப்பிற்க்கான பரிசோதனையில் 100 க்கு 99 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் பேட்டரிகள் 426 கிலோமீட்டர் தூரத்தை கிடக்கின்ற அளவில் உருவாக்கப்பட்டியிருந்தது.

தற்போதைய உலகம் ஆயிலை சார்ந்திருக்கிறது. சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய கேடாக அமைகின்ற ஆயில் கலாச்சாரத்தில் இருந்து உலகம் மின்சாரம் மூலமாக இயங்கக்கூடிய கார்களுக்கு மாறும். எலன் மஸ்க் அவர்களின் நம்பிக்கையான வார்த்தைகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின. விளைவாக 2013 க்குள் 10,500 Model S கார்கள் விற்பனை ஆயின.அதன் பிறகு டெஸ்லா பல முயற்சிகளை மேற்கொண்டு செய்துகொண்டே வருகிறது

யார் இந்த எலன் மஸ்க்? -

செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என அனைவரும் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சூழலில் செவ்வாயில் மனிதர்களை குறைந்த செலவில் குடியேற்றுவது எப்படி என சிந்தித்தார். விளைவு 2002 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவை மையமாக கொண்டு SpaceX நிறுவனம் துவங்கப்பட்டது.

எந்தவொரு நாட்டிலும் விண்வெளி சம்பந்தப்பட்ட விசயங்களை அரசு நிறுவனங்களே செய்யும். இதற்க்கு பாதுகாப்பு, அதிக முதலீடு போன்றவை காரணமாக இருக்கலாம். மார்ச் 2006 ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலரை முதலீடாக SpaceX இல் போட்டார். விண்வெளி ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானது ராக்கெட். ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ரஸ்யாவிடம் இருந்தோ அல்லது அமெரிக்காவிடம் இருந்தோ அதனை வாங்கலாம் என அணுகினார் எலன் மஸ்க்.

பேச்சுவார்த்தை நடத்தியதில் 15 மில்லியன் முதல் 65 மில்லியன் வரை விலை கூறியுள்ளனர். ஆனால் ராக்கெட் தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற பொருள்களின் விலை இதில் வெறும் 2% தான். இதற்க்கு அதிகாரமயமாக்கல், போட்டி நிறுவனங்கள் இல்லாமை போன்றவை தான் காரணம் என புரிந்துகொண்டார். களத்தில் இறங்கினார்.

2006 இல் தனது முதல் பரிசோதனையை நிகழ்த்தியது . முதல் மூன்று முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. நான்காவது முயற்சியில் Falcon 1 வெற்றிகரமாக புவி சுற்றுவட்டபாதையை அடைந்தது. ஒருவேளை இதுவும் தோல்வியை தழுவி இருந்தால் SpaceX மூடப்பட்டிருக்கும் என்கிறார்கள். இந்த வெற்றிக்கு பிறகு $1.6 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை SpaceX போடுகிறது. அதன் பின்னர் அரசின் உதவி இன்றியே வெற்றிகரமாக பல ராக்கெட் என்ஜின்களை வடிமைத்தது SpaceX.

 ஒருமுறை எலன் மஸ்க் கூறிய வார்த்தைகள் இவை. நாம் செவ்வாய் கிரகத்தில் இறக்க விரும்புகிறேன், வெறும் ஆசையோடு இல்லை என தனது கனவின் உறுதியை காட்டுகிறார். அதன் பிறகு விண்வெளிக்கு செல்லும் விமானங்களை வடிமவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது SpaceX. கனவை நோக்கி செல்கிறார் எலன் மஸ்க்.

எலன் மஸ்க் – ஹைப்பர்லூப்

சிலர் ஐடியாக்களை மட்டும் சொல்லுவார்கள்.அதனை செயல்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீடும் செய்து ஐடியாவை நிறைவேற்ற உழைக்கவும் செய்வார். அதுதான் எலன் மஸ்க் என்ன சொன்னாலும் உலகம் உற்று கவனிப்பதற்கு முக்கிய காரணம். அவரின் மற்றுமொரு சிந்தனை தான் ஹைப்பர்லூப்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்பது மிக வேகமாக பயணிப்பதற்கு எலன் மஸ்க் கூறிய புதிய ஐடியா. ஆமாம், ஹைப்பர்லூப் இல் ஒரு குழாய் போன்ற அமைப்பு இருவேறு இடங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு இருக்கும். அதற்குள் மனிதர்கள் பயணிக்க வேண்டிய வாகனம் செல்லும். குழாய் போன்ற பகுதிக்குள் இருக்கும் குறைந்த காற்று அழுத்தம் மற்றும் உராய்வை குறைத்தல் போன்றவற்றின் மூலமாக அதிவேகத்தை அடைந்து பயணிப்பதே ஆகும்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிக்கும் போது விமானத்தில் பயணிப்பதை காட்டிலும் விரைவாக செல்ல முடியும் என்பது எலன் மஸ்க் இன் வாதம்.

எலன் மஸ்க் உண்மைலேயாலுமே 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவே நான் பார்க்கிறேன். அதற்கு மிக முக்கிய காரணம், புதிய சிந்தனைகள் மட்டுமே அல்ல. எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எது பயன்படும் என்பதை அறிந்து தனது சொந்தப்பணத்தையே முதலீடாக போட்டு அரசுக்கு நிகராக தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.


 

 தூதுவளை


தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

தூதுவளை பயன்கள்

  • தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
  • தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
  • வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.
  • தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
  • தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
  • மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.
  • தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.
  • தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.


 உணவு தந்துக் காப்பாற்றியவனுக்கு பரிசு இல்லை

உணவு தந்துக் காப்பாற்றியவனுக்கு பரிசு இல்லை

வசு,ராமு இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அவர்களிடம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசு அவனுக்கு உணவு தந்தான்.

இதைப் பார்த்த ராமு , “”அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசு உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் ராமு .

“”சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் ராமு . மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த ராமு  அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

“”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.

பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. வசுவும், ராமுவும்  அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை ராமுவிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது வசுவிக்கு தெரிந்தது.

கோபத்தால் துடித்த அவன், “”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “”இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை வசு ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.

வசுவை பார்த்து அவர், “”நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்த ராமுவுக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் ராமுகே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.

அமைதிக்கு பங்கம் விளைவித்தல்

அமைதிக்கு பங்கம் விளைவித்தல்


 ஐபிசி பிரிவு 159

அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் சண்டை பிடிப்பதும் வசை பாடுவதும் குற்றமாகும்.

 சச்சரவு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், ஒரு பொது இடத்தில் புரியும் சண்டையால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும்போது, அவர்கள் 'ஒரு சச்சரவைப் புரிந்ததாகக்' கூறப்படுவார்கள்.

 தினம் 2 கடி ஜோக்ஸ்..!

தினம் 2 கடி ஜோக்ஸ்..!



1.பெண் -மேனேஜர்

பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..

மேனேஜர் : அதுக்கு என்னம்மா?

பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தருவேன்னு?


2.அப்பா-மகன்

அப்பா: நம்மைவிடப் பெரியவங்கள யார் திட்டினாலும் நாம அவர்களை எதிர்த்துப் பேசக் கூடாது..

மகன்: அப்படின்னா? அம்மா உங்களை விடப் பெரியவங்களா? அப்பா..

அப்பா: ???????

  ராகேஷ் சர்மா

ராகேஷ் சர்மா

 
  •  விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார்.
  •  இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது.
  • இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  •  இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.