வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது சிறுகதை

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்.

" ஒரு கட்டு கீரை என்ன விலை....?" "

ஓரணாம்மா" "

ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.

அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா". " அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு "மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்

முடியவே முடியாது.

 கட்டுக்கு அரையணாதான் தருவேன் ... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க

"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும் எங்க  உடனே அந்த தாய் :சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க அதற்கு அந்த தாய்,

வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா  என்று கூறினாள்...!!!

வியாபாரத்தில் தர்மம் பார்த்தல் நாம் சிறந்த வியாபாரி  இல்லை..

தர்மத்தில் வியாபாரம் பார்த்தல் அவன் செய்வது தர்மமே இல்லை ...


"நிதானமே பிரதானம்..."-சிறுகதை

ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்ட ஒரு இளைஞன், பசியார்வத்தில் மரத்தின் மேல் சரசரவென்று ஏறிவிட்டான்...

 அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்...

 மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன...

 அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டான்...

 தொங்கியபடி குனிந்து பார்த்தால்...

 தரை வெகு கீழே இருந்தது...

 பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து, கை வழுக்க ஆரம்பித்தது...

 அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். குசும்புடன், அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல்லடி பட்டவுடன் அவனுக்கு ஆத்திரம் வந்தது.

"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு?" என்று கோபத்துடன் கேட்டான்.

 பெரியவர் பதில் பேசாமல், நக்கலாக சிரித்தபடி மேலும் மற்றொரு கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

 இளைஞன் மேலும் கோபமுற்றான்.


பெருமுயற்சி எடுத்து, மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

 பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்...

 இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.

 அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்?

 உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

 பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.

இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்...

உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து, நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்...

 உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

 அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போக... இளைஞன் சிந்திக்க ஆரம்பித்தான்...!

 இளைஞனின் பதட்டமும், பயமும் அவனை முட்டாளாக்கி விட்டது...!

 பெரியவரின் நிதானமும்...

 சமயோசித புத்தியும் தான்...

 இளைஞனின் கோபம் என்கிற விஷத்தையே அவனை காப்பாற்றும் மருந்தாக மாற்றியது...

 ஆகவே, "நிதானமே பிரதானம்..."
 'நிதானமான மனநிலையில் தான் அறிவுத்திறன் நன்றாக இருக்கும்...' என்பதை புரிந்து கொண்டுடால் இந்த நாள் மட்டுமல்ல... எந்த நாளும் இனிய நாள் தான்...

திறமையை மேன்படுத்த உதவும் ' சுயமதிப்பீடு ' - சிறுகதை
ஒருவருக்கு தன்னைப் பற்றிய தெளிவு இருந்தாலே அவர் வெற்றி பெறுவது உறுதி

ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். பிறர் நம்மை எப்போதும் கவனிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது. நம் செயல்கள் நல்லவை, கெட்டவை என்பதைவிட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே நாம் செயல்படுகின்றோம். தனித்துவத்தை நிறுவ முயற்சிக்கிறோம்.

ஆனால் மற்றவரை ஈர்ப்பது மட்டும் தனித்துவமல்ல. நம்மை நாமே கவனிப்பதும் திறமையை மேன்படுத்துவதும் சுயமதிப்பீட்டால்  மட்டுமே முடியும் ..

சுயமதிப்பீடு பற்றிய சிறுகதை உங்களுக்காக இதோ :

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று

ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!
அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த
கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு
கொண்டிருந்தார்..!!
.
பையன்: "மேடம் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும்
வேலையை எனக்கு கொடுக்க முடியுமா.."?
.
பெண்மணி: (எதிர் பக்கத்தில் பேசுபவர்)
"எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து
வருகிறார்.."!!
.
பையன்: "மேடம் அவருக்கு கொடுக்கும்
சம்பளத்தில் பாதி சம்பளம்
கொடுத்தால் போதும். நான் உங்கள்
தோட்டத்தை பராமரித்து தருகிறேன்.."!!
.
பெண்மணி: "இல்லை இப்பொழுது
பராமரிப்பவரின், பராமரிப்பில் தோட்டம்
நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில்
மிகவும் திருப்தி அடைகிறேன்."!!
.
பையன்: (இன்னும் பணிவோடு) மேடம் நான்
உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட
தருவேன்..!!
அதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர
வேண்டாம்.."!!
.
பெண்மணி: "வேண்டாம்..! நன்றி".!!
.
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன்
ரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.!!
.
.அந்த கடை முதலாளி அவனிடம்.,
"எனக்கு உன்னுடைய அணுகுமுறையும்'
தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர்
கொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது..
நான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா.."?
என்றார்.!
.
பையன்: "நன்றி..! எனக்கு வேலை வேண்டாம்"..!!
.
கடை முதலாளி: "இவ்வளவு நேரம் வேலைக்காக
மன்றாடிக் கொண்டிருந்தாயே.."?
.
பையன்: "இல்லை சார் நான் நன்றாக வேலை
செய்கிறேனா என்று தெரிந்து
கொள்ளத்தான் இப்படி
செய்தேன்..!!
எதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும்
தோட்டக்காரன் வேறு யாரும் இல்லை,
அது நான் தான்.!!!
.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!!
.
நான் அப்படி செய்வேன்.. இப்படி
செய்வேன்.. என்று கூறுவது
தற்பெருமை..!!
நம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண்டும்
அதுவே திறமை..!!


What is Google Apps?
Google Apps is a cloud-based productivity suite that helps teams communicate, collaborate and get things done from anywhere and on any device. It's simple to set up, use and manage, so your business can focus on what really matters.

Millions of organisations around the world count on Google Apps for professional email, file storage, video meetings, online calendars, document editing and more.
Watch a video or find out more here.

These are some highlights:

Business email for your domain
Looking professional matters, and that means communicating as you@yourcompany.com. Gmail’s simple, powerful features help you build your brand while getting more done.
Access from any location or device
Check emails, share files, edit documents, hold video meetings and more, whether you’re at work, at home or in transit. You can pick up where you left off from a computer, tablet or phone.
Enterprise-level management tools
Robust admin settings give you total command over users, devices, security and more. Your data always belongs to you, and it goes with you, if you switch solutions.
Start free trial

பேராசை இல்லாது இருந்தால்,  வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக  இருக்கலாம் சிறுகதை..

பாண்டிய நாட்டு அரண்மனையில் அரசரின் பிறந்த நாள் விழாவை கோலாகலாமாகக் கொண்டாடினர். வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்னாது வாரி வழங்கினார் அரசர். அங்கே வந்த மலையன் என்பவன் அரசரை பணிவாக வணங்கினான்.

"அரசர் பெருமானே! நான் வறுமையில் வாடுகிறேன். வளமாக வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும்,'' என்று பணிவாக வேண்டினான்.

"உனக்கு என்ன வேண்டும்? தயங் காமல் கேள்,'' என்றார் அவர்.
பேராசை கொண்ட அவனுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.

"அரசர் பெருமானே! என் உள்ளம் மகிழு மாறு நீங்கள் பொற்காசுகளைத் தாருங்கள்,'' என்றான் அவன்.

இவன் பேராசை கொண்டவனாக இருக் கிறான். அதனால்தான் இப்படிக் கேட்கிறான் என்று நினைத்த அரசர், அவனைக் கருவூலத் திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே குவியல் குவியலாகப் பொற்காசு கள் கொட்டிக் கிடந்தன. அவற்றை வியப் புடன் பார்த்தான் அவன்.

"உனக்கு எவ்வளவு பொற்காசுகள் விருப்பமோ அவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம்,'' என்றார் அவர்.

"நீ இங்கிருந்து ஒரே ஒருமுறை எவ்வளவு பொற்காசுகளை வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம். வெளியே செல்லும் வரை அவற் றைக் கீழே வைக்கக் கூடாது. கீழே வைத்தால் பொற்காசுகள் மீண்டும் கருவூலத்தில் சேர்ந்து விடும்,'' என்றார்.

அவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.

"நான் வலிமையாக இருக்கிறேன். இங்கிருந்து ஏராளமான பொற்காசுகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வந்தன் நான்தான்' என்று மகிழ்ச்சி அடைந்தான் அவன்.

அங்கிருந்த சாக்குப் பை ஒன்றை எடுத்தான். அதற்குள் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொட்டினான்.பையில் பாதி நிரம்பியது. அதைத் தூக்கிப் பார்த்தான். அவனால் தூக்க முடிந்தது. பேராசை கொண்ட அவன், இன்னும் தன்னால் தூக்க முடியும் என்று நினைத்தான்.

மேலும், பொற்காசுகளைப் பைக்குள் போட்டான்.

அப்போதும் அவனுக்கு நிறைவு ஏற்படவில்லை.

கருவூல வாயில் வரை தூக்கிச் செல்ல வேண்டும். சிறிது தொலைவுதானே. எப்படியும் தூக்கிச் செல்லலாம் என்று நினைத்தான்.

பை நிரம்ப பொற்காசுகளைப் போட்டான்.



அந்தப் பையை அசைத்துப் பார்த்தான். மிகவும் கனமாக இருந்தது.

முயற்சி செய்து அந்தப் பையைத் தூக்கி முதுகில் வைத்து அதைச் சுமந்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.


பத்தடி எடுத்து வைத்திருப்பான். அதற்கு மேல் அவனால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை; பையைக் கீழே போடவும் விரும்பவில்லை.

முதுகெலும்பு முறிந்து அங்கேயே விழுந் தான் அவன். பொற்காசுப் பை அவன் மேல் கிடந்தது. அப்படியே இறந்து போனான்.


அங்கே வந்த அரசர் அவன் கீழே விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்தார்.

பேராசை இல்லாது இருந்திருந்தால், இவன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம். பேராசையால், அவனுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினர் அரசர்.
'பேராசை பெருநஷ்டம்' என்று சும்மாவா சொன்னார்கள்!

முருங்கையின் மருத்துவ மகிமை...

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.

தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கையின் மருத்துவ மகிமை...


முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது,
புரதம் – 6.7%,
கொழுப்பு – 1.7%,
தாதுக்கள் – 2.3% மற்றும்
கார்போஹைட்ரேட்கள் – 12.5%.

இது கதையல்ல நிஜம இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ...

ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.
அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார்.

அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான். நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம்நின்று விட்டது போல் உணர்தேன்.


 அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன்,

ஆனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்தஅம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவஇடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி !!

இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டாள் என்று.

நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன் அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது..

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...

உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய ATM Transactionஐ வீணடிக்க வேண்டாம் !!

உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்குகோ அல்லது உங்கள் அருகில் உள்ள ATMக்கோ  செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவகளாக (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய


Advertise on www.tagavalthalam.com
Post Your Ads For Free...

வணக்கம் நண்பர்களே ....

நம்ம தகவல்தளம் இணையதளத்தில் நீங்கள் விளம்பரம் செய்யலாம்..

நம்ம தகவல்தளம் இணையதளத்தில் விளம்பரம் செய்ய tagavalthalam1@gmail.com என்ற மினஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்..

Advertise on www.tagavalthalam.com

Now promote your business here on www.tagavalthalam.com and get traffic on your website & increase your revenue.



என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.


தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோவிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...

அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.

இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';

மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';

ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.

மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,

அத்துப்படியான ஆங்கிலம்,

இதமான காலநிலை,

சுவையான சிறுவாணி,

அதிரடியில்லாத அரசியல்...

இவற்றையெல்லாம் தாண்டி,

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....

அந்த பெருமையுடன் எல்லோரும் இறுமாப்பாய் சொல்வோம்...

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு தற்போது சக்கர நாற்காலியில் அவர்களது வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எமது பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே "உயிரிழை"
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!



இவ் அமைப்பில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளை கொண்ட இவ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற பயனாளிகளின் நலன் கருதி செயற்பாடுகளை முன்னெடுத்து  வருகின்றது. அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து அவ் அமைப்பின் சிறுதுளி எனும் செயற்த்திட்டத்தின்கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று இடுப்பின் கீழாகவும் கழுத்தின் கீழாகவும் இயக்கம் இல்லாமல் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழும் பயனாளிகளுக்கான மாதாந்த உதவி தொககையினை பாதிப்பின் அடிப்படையிலும் பயனாளிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வழங்கி வருகின்றோம். 
பயனாளிகளில் இன்று  வரைக்கும் 41 பயனாளிகளிற்க்கு  மட்டுமே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது 
ஆயினும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் சாதாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் மருத்துவம்  மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதற்கான அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் தேவைப்படுகின்றது. 
எனினும் எமது  பயனாளிகள் எதிர்நோக்கின்ற பிரதானமான பிரச்சினை அழுத்தப்புண் ஆகும் தொடர்ச்சியாக சக்கர நாற்காலியினை பாவிப்பது குடும்ப சூழ் நிலை காரணமாக கவனிக்காமல் இருப்பது கட்டாயம் வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலையில் தொடச்சியான சக்கர நாற்காலி பாவனை போன்ற காரணங்களினால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
எமது பயனாளிகள் சிலர் அழுத்தப்புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறு  பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அழுத்தப்புண்கள் சில
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

எமது பயனாளிகள்  மருத்துவதேவைகளையும் அவர்களின் அன்றாட வாழ்கை செலவுகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள் இவர்களின்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரப்படுகின்றார்கள் இவர்களில் சிலர்  தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாதவர்களாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இதனால், அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களின் தேவைகளை  ஓரளவேனும் பூர்த்தி செய்து கொள்வதற்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை இவர்களுக்கு  உதவலாம்.


இவர்களின் வாழ்க்கையை மாற்ற உங்களாலும் முடியும் .....



இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
வெளிநாடுகளில் வாழும் எமது சொந்தங்கள் எம்முடன் தொடர்புகொண்டு நேரடியாகவும் உங்கள் பக்களிப்பினை வழங்கலாம் அல்லது ஏற்கனவே உயிரிழையோடு இணைந்து பக்களிப்பினை வழங்கிகொண்டிருக்கும்  இங்கிலாந்தில் உள்ள மனிதாபிமான பணிகளுக்கான ஜக்கிய அறக்கட்டளை ( UNITED TRUST FOR HUMANITARIAN AID (UTHA) ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து உங்களுடைய பங்களிப்பினையும் மேற்கொள்ளலாம் 
உயிரிழை அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இணைந்து கொள்ளுங்கள் https://www.facebook.com/Uyirilai இதன் முலம் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் 
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
Uyirilai
ஊதா அமைப்பின் இணையதள முகவரி :- http://www.utha.org.uk/

இத் தகவலினை முழுமையா படித்தமைக்கு மிக்க நன்றி 
நண்பர்களே உங்களால் இவர்களுக்கு உதவ முடியவில்லையாயின் இவர்களுக்கு உதவுவதற்கு எங்களாலும் முடியும் என்று முன்வரக்கூடிய நல்லுள்ளம் படைத்த எங்களுடைய சொந்தங்களுக்கு இத் தகவல் சென்றடைவதற்கு நீங்கள் இத்தகவலை  பகிர்வதன் (share) செய்வதன்மூலம் நீங்களும் ஒரு உதவியாளராக மாறலாம்.

நன்றி 

Neminathan Paramananthan paramananthan22@gmail.com



Please Avoid using  Mobile Phones on driving
Don't use Mobile Phones on driving

இன்று, உலகையே உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிட்டது, மொபைல் போன். இதன் வரவால் பல சாதக அம்சங்கள் உள்ளன; பாதக அம்சமும் இருக்கத்தான் செய்கிறது. வளர்ச்சிக்கும், பணி எளிமைக்கும், விரைவான தகவல் தொடர்புக்கும் உதவும் மொபைல் போன், சில நேரங்களில் சிலரின் வாழ்க்கைக்கு எமனாக மாறி வருகிறது.தினமும் பல இடங்களில், மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டும் பலரை பார்க்க முடிகிறது. இவர்கள், கவனக்குறைவால் விபத்துகளை சந்திக்கின்றனர். இதில் உயிரிழப்போர், உடல் உறுப்புகளை இழப்போர் என பலர், தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கும் அவலம் தொடர்கிறது.அதனால், மொபைல் போனில் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்கவும்.

பெண்கள் மனதை புன்படுத்தாதீர்!!

ஒரு நாட்டு மன்னன்  தன்  அரன்மனையில்  நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான். அப்பெண்னோ  மன்னா நாங்கள் நடனம் ஆடுவது எங்கள் குல தொழில்  வேண்டாம் .

மன்னா நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்றால் .


மன்னவனோ ஆண்டவனும் அரசனும் ஒன்று தான் .

நீ என் இச்சைக்கு இனங்கதான் வேண்டும் .

வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகுறேன் என்றான் .

அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை மன்னன்யிடம் கடைசியில்
ஒப்புக் கொண்டால் .

அப்பெண் சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்க்கு வாங்கள் விருந்து வைக்கிறேன் .

அமுதுண்டு பிறகு சல்லாபிக்களாம் என்றால் .

மன்னனும் சென்றான் ..

அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள் .

மன்னன் எனக்கு சாப்பிட பொருமை இல்லை ..
நீயே ஊட்டி விடு என்று கூறினான் .....


அப்பெண்ணும் ஊட்டி விட்டால் !!மன்னன்  சுவைத்தான் விருத்து முடிந்தது ..

மன்னனிடம் கேட்டாள் மன்னா 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்ஒன்றின் சுவை எப்படி இருந்தது  மன்னா ??.

மன்னன் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான் என்றான்..

பெண் மன்னா நாங்களும் அப்படிதான் பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றால் .....

மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கி தாயே என் அறிவுக்கண் திரந்தவளே என்றான் ......

இது கதை அல்ல உண்மை


நம் வீட்டிலும் பெண்கள் உண்டு!! பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்ளாக நினைத்து சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள் ..

நட்பு வளரும் பிற பெண்கள் மனதை காயப்படுத்தாதீர்கள் ....


"நன்றி நன்றி நன்றி"

நீங்கள் கர்நாடக  வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  கர்நாடக  வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 18004251445  என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Bank customers can give a missed call from their registered mobile number to 18004251445 for “Balance enquiry” and 18004251446 for getting mini statement.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி



உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி  சில தகவல்கள் இதோ !!


சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது.
பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த 36 கி.மீ சுவர் தான் உலகளவில் மிகபெரியதான சீன பெருஞ்சுவருக்கு அடுத்து மிகப்பெரிய சுவராக அமைந்துள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த எல்லை சுவரின் முன் சுவர்களின் அகலம், சுமார் 15 அடிகள் தடிமனாக அமைந்திருக்கும். மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன.

இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 பழமைவாய்ந்த சமண மத கோவில்களும், 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில்களை கட்டியுள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இதுபோல் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைச் சுவர் பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது.

ஆனால் இந்திய பெருஞ்சுவர் என அழைக்கப்படும், உலகின் 2வது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனை பற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளது தான் வியப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த சுவர் கட்டப்பட்டது பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றையும் புராணத்தில் கூறியுள்ளனர்.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??



கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort) வரலாறு :

1443ம் ஆண்டு இந்த கோட்டை சுவரை மன்னர் ராணா கும்பா கட்ட முயற்சித்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் இன்னல்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன.

அப்போது ராணா கும்பாவிடம் ஆன்மிகவாதி ஒருவர், யாராவது உயிர்பலி கொடுக்க தாமாக முன்வந்தால் இந்த சுவரை கட்ட வரும் தடைகள் அனைத்தும் விலகும் என்று யோசனை கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்த்த்து போலவே பலகாலமாக உயிர் பலி கொடுக்க யாரும் தாமாக முன்வராத சூழ்நிலையே நிலவியுள்ளது.

பின்னர் ஒருநாள் யாத்ரீகர் ஒருவர் உயிர்பலி கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து சடங்குகள் சம்பிரதாயத்துடன் அந்த நபரின் உயிர் பலியிடப்பட்டுள்ளது.

இதனை விளக்கும் விதமாகவும் அந்த தியாகத்தை போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான Hanuman Pol அருகே நினைவு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


எந்த தாக்குதல்களாலும் நிலைகுலையாத இந்த கோட்டை, ஒரே ஒரு முறை மட்டுமே போரில் தோல்வியை சந்தித்துள்ளது.

மொகலாய பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றினைந்து இந்த கோட்டையை எதிர்த்து போரிட்ட போது ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை, உலகின் அறியப்படாத மர்மம் நிறைந்த புதையலாகவே விளங்குகிறது.

இந்தக் கோட்டையுன் அமைவிடம்:



இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீரில் அமைந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. இதில் 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள்....

மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தேர்வுகள் இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

* www.tnresults.nic.in 

* www.dge1.tn.nic.in 

* www.dge2.tn.nic.in 

* www.dge3.tn.nic.in

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. இதில் 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள்....

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!



சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

மேலும் படிக்க

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.