பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையும் , கட்டு கதையும் !!!


நீங்கள் ஒரு வரைபடத்தில் இதைக் காண முடியாது என்றாலும், பெர்முடா முக்கோணம் உண்மையாகவே உள்ளது. கடந்த காலத்தில் நிறைய கப்பல்கள், விமானங்கள் மற்றும் மக்கள் பலரும் காணமால் போய் உள்ளனர். பல சம்பவங்களுக்கு நம்பும்படியான விளக்கம் இருந்தாலும் , அங்கு நடந்த பல சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இன்று வரை எந்த அறிவியல்ரீதியான விளக்கமும் இல்லை !

பெர்முடா முக்கோணம் மியாமி, போர்டோ ரிகோ மற்றும் பெர்முடாஸ் இடையே புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 500 000 சதுர மைல்களை உள்ளடக்கியது. பெர்முடா முக்கோணத்தை, சாத்தானின் முக்கோணம் என்று கூட அழைப்பர் , ஏனெனில் பெர்முடாவை முற்காலத்தில் சாத்தானின் தீவு என்று அழைத்தனர் !

பெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையும் , கட்டு கதையும் !!!

தீவை சுற்றிலும் பவளபாறைகள் அமைந்துள்ளதால் , பல நூற்றாண்டு காலமாக அந்த கடல் வழியை மிகவும் ஆபத்தானதாக கருதினர் கப்பலோட்டிகளும், மாலுமிகளும். பெர்முடா முக்கோணம் பற்றிய அசாதாரண நிகழ்வுகள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் காலத்தில் இருந்து உள்ளது . அவர் சில நேரங்களில் திசைகாட்டி தாறுமாறாக சுற்றியது என்று தனது அறிக்கையில் கூறி உள்ளார். பல பத்திரிகையாளர்கள் இந்த பகுதியில் நடந்த விபத்துக்கள் அனைத்தும் அசாதாரண விஷயங்கள் என்று நிரூபிக்க முயற்சி செய்து தோற்றனர் . சில சம்வத்தில் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் கூட போனது !

நன்கறியப்பட்ட சம்பவங்களில் ஒன்று அமெரிக்க கடற்படை பயிற்சி விமானம் பிளைட் 19 காணாமல் போனது !. டிசம்பர், 1945 , ஐந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வழக்கமான பயணத்தை ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் இருந்து தொடங்கியது. பல வானொலி செய்திகளை அனுப்பிய பின்னர் , அந்த விமானத்தில் இருந்த 14 குழு உறுப்பினர்களும் விமானத்தோடு காணாமல் போயினர். அந்த விமானத்தை தேடி சென்ற இன்னொரு மீட்பு விமானமும் காணமல் போனது !

என்ன தவறு நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை.திசைகாட்டிகள் தவறான திசைகளை காட்டியது மற்றும் தெரிவுநிலை மோசமாக இருந்தது, அதனால் விமான ஓட்டி கீழே தெரியும் அடையாளங்களை வைத்து விமானத்தை செலுத்த முயற்சி செய்தார் என்பது மட்டுமே தெரியும் !

பின்னர் ஒரு திடீர் புயயலினால் வானொலி தொடர்பு இல்லாமல் போனது . கப்பல்கள் இந்த பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போயுள்ளன. மேரி செலஸ்டி, ஒரு அமெரிக்க வணிக கப்பல், 1872 ஆம் ஆண்டில் காணாமல் போனது . அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஜெனோவாவை நோக்கி சென்று கொண்டிருத்த போது அது மாயமானது . ஆனால் பின்னர் அந்த கப்பல் , எந்த குழு உறுப்பினர்களும் இல்லாமல் ஆப்ரிக்கா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது . மேரி செலஸ்டி கப்பல் பெர்முடா முக்கோணத்தில் பயணித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் , அந்த கப்பலின் பணிக்குழு என்ன ஆனது என்பது இன்று வரை புரியாத புதிரே !

ஏன் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போகின்றன என்பதற்கு பல கோட்பாடுகள் மற்றும் காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் கூறுகின்ற காரணமானது , மிகவும் பலம் வாய்ந்த மின்காந்த புலன் [Magnetic Field] . அழிந்து போன அட்லாண்டிஸ் என்னும் தீவு தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று பலர் வாதிடுகின்றனர் !. பெர்முடா முக்கோண கடலில் பலவகையான ரசாயனம் உள்ளது என்றும் , அதனால்தான் இவ்வளவு பிரச்னை என்று சில சாரார் வாதிடுகின்றனர் !

கரீபிய கடல் மிகவும் ஆபத்தானது என்றும் , அங்கு சீதோசன நிலை ஒரே மாதிரி இருப்பது கிடையாது என்றும் , கடல் மட்டம் ஒரே மாதிரி இருபது இல்லை என்றும் , திடீர் என்று பல பகுதிகளில் தாழ்வான தரைமட்டம் வரும் என்றும் . இது போன்ற பல காரணங்களை முன் வைக்கின்றனர் !!!

இந்த 20ஆம் நூற்றாண்டில் மட்டும் சுமார் 1000 பேருக்கு மேல் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போகினர் !

பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் , சம்பவங்களுக்கும் , அறிவியில்ரீதியான விளக்கம் கண்டிப்பாக இருக்கும் என்று அனைத்து விஞ்ஞானிகளும் கூறி கொண்டிருந்தாலும் , இன்று வரை அது ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!

SPACE STONE
 விண்பாறை

விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் தேதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.


2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

plans-are-on-to-build-space-elevators-using-carbon-nano-tube-technology-to-travel-to-space

"பல ஆயிரம் மடங்கு செலவு குறையும்" ஏணியில் ஏறி வானத்துக்குப் போக முடியுமா? இந்தக் கேள்வி இப்போது வியப்பாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் நீண்ட காலத்துக்கு இந்தக் கேள்வி வியப்பை ஏற்படுத்தப் போவதில்லை. காரணம், உண்மையிலேயே வானத்துக்கு ஏணி அமைப்பது சாத்தியம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தர்க்க ரீதியில் நிரூபித்திருக்கிறார்கள்.இப்போதைய அறிவியல் உலகில், விண்ணுக்கு ஒரு செயற்கைக் கோளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அதைத் தாங்கிச் செல்வதற்கு ஒரு வாகனம் அவசியம். அதுதான் ராக்கெட். மனிதர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கும் இந்த ராக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு ஆகும் செலவுதான் பல நாடுகளுக்குப் பிரச்னையாக இருக்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முன்வைக்கப்பட்ட யோசனைதான், ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR). அதாவது விண்தூக்கி. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky)-யின் மூளையில் உதித்த யோசனை இது. பாரிஸ் நகரத்து ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்ட கான்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky), இதே கோபுரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் வானத்துக்கு ஏணி அமைத்துவிட முடியும் என்று நம்பினார். அவர் முயற்சி செய்த உயரம் 35 ஆயிரத்து 786 கிலோமீட்டர். அதாவது பூமியின் தரைப் பகுதியில் இருந்து புவிநிலைச் சுற்றுப்பாதை அமைந்திருக்கும் உயரம். இந்த உயரத்தில் செயற்கைக் கோள்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அவரது திட்டம்.
இந்தத் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று வந்திருக்கிறது. ஆனாலும், விண்தூக்கியை அமைப்பதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட காலமாகச் சிக்கல் இருந்து வந்தது. 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கோபுர வடிவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் சோர்ந்திருந்த நேரத்தில்தான், கார்பன் நேனோ ட்யூப் என்று கூறப்படும் அதிசயப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உதவியுடன் எவ்வளவு நீளத்துக்கும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.
தற்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இண்டர்நேஷனல் ஸ்பேஸ் எலவேட்டர் கன்சார்ட்டியம் (International Space Elevator Consortium) என்ற சர்வதேச விண்தூக்கி அமைப்பு செயல்பட்டு வருகிறது. கார்பன் நானோ ட்யூப் மூலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR) அமைக்க முடியும் என்று இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதனால், நிலவுக்கும், செவ்வாய்க்கும் கூட லிஃப்ட் அமைப்பது சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. குறைந்த செலவில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு, செலவில்லாத செல்போன் சேவை போன்றவையும் ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR)-ன் பயன்கள். விண்வெளிக்கு சாமான்யர்கள் செல்வதும் சாத்தியமாகும்.

தற்போதைய நிலையில் விண்ணுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் 8 சதவீதம் தோல்வியடைகின்றன. ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR) அமைக்கப்பட்டால், இந்தத் தோல்வியே இருக்காது.


நன்றி:புதியதளைமுறை




செவ்வாய் கிரகத்தில் பழமையான சூப்பர் வால்கேனோ (Super Vocano) எனப்படும் பெரிய எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Super Vocano
Super Vocano
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செயலில் இருந்த எரிமலைகள் அங்கு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும், தற்போது அறியப்பட்டுள்ள சூப்பர் வால்கேனோ (Super Vocano) -க்கள் இதற்கு முன்னதாக செயலில் இருந்ததற்கான அடையாளங்கள் தெரியவில்லை.

செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் இவை அமைந்திருக்கின்றன. அந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து இந்த தகவலை லண்டனின் இயற்கை, வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் நாசா (NASA) ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டறிந்துள்ளனர்.

பிற எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பிழம்பு மற்றும் சாம்பல் உள்ளிட்டவைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முன்னொரு காலத்தில் செயலில் இருந்த எரிமலைகளினால் கிரகத்தின் வெப்பநிலை மாற்றம் பெற்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


Supervolcanoes

Supervolcanoes

Supervolcanoes

Supervolcanoes


நன்றி:புதிய தளைமுறை

பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாமாம்!

பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.

அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாமாம்!


இந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி ஆன்ட்ரூ ரஷ்பி கூறுகையில், நமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.

இதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.

எங்களது ஆய்வின் மூலம், பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி, கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.

கிரகத்திற்கும் அதன் நட்சத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

விண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.

கிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது, மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட, பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.

சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1,000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.

நாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம்.

எங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று ஆன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை நாசா அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் நாசா அறிவியலாளர்கள் தகவல் !!!

பூமிக்கு வெளியே இருக்கும் கோள்களில் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை அறியும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள வானியல் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சந்திரனுக்கு சந்திராயன் என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ அனுப்பியிருந்தது, அதனுடன் நாசாவின் கனிமவியல் வரைவுக் கருவியையும் கொண்டு சென்றிருந்தது.
அந்த கருவி எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து வரும் நாசா விஞ்ஞானிகள், நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அங்குள்ள பாறைகளில் படிந்துள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை அடங்கிய ஹைட்ராக்சில் இருப்பதைக் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ள விஞ்ஞானிகள், அந்த பாறைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும், பாறைக் குழம்புகளைக் கொண்டு நிலவின் தோற்றம் அங்குள்ள கனிம வளங்கள் என்ன என்பதை அறியும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் தோன்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள்  தகவல் ...

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் செவ்வாயில் நிலவியதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உயிர் வாழ தேவையான மூலக்கூறு ஒன்று சேர செவ்வாயில் வாய்ப்புகள் சிறப்பாக இருந்தன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்தலியின் ஃப்லோரன்ஸ் (Florence) பகுதியை சேர்ந்த ஆய்வு பேராசிரியர் பென்னர் (Benner), இந்த தகவலை அறிவியல் கருத்தரங்கில் முன்வைத்தார்.
ஆர்.என்.ஏ (RNA), டி.என்.ஏ (DNA) மற்றும் ப்ரோட்டின் (Protein)-கள் அடங்கிய மூலக்கூறு எவ்வாறு ஒன்றிணைந்தது என்பது நீண்ட நாள்களாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துவந்த ஒன்று. 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான ஆதிகால மரபணு பொருட்களை காட்டிலும், செவ்வாயில் உருவானது கடினமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆர்.என்.ஏ (RNA) அமைப்பிற்கான கனிமங்கள் ஆரம்பகால பூமியின் பெருங்கடல்களில் கலந்திருக்கலாம் என்றும், இது பூமியை காட்டிலும், செவ்வாயில் அதிகம் இருக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் பேராசிரியர் பென்னர் (Benner)-ன் ஆய்வில் அவர் தெரிவிக்கிறார். இதனால் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் எரிகற்கள் மூலமாக பூமிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 நாம் வாழும் பூமியை பற்றிய சில உண்மைகளை இதோ உங்களுக்காக

தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு என்பார்கள். நமக்கு இந்த உலகை பற்றி எவ்வளவு தெரியும்?

* விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.

* சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

* எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

* புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது. கனடா-வின் ஹட்சன் பே (Hudson Bay)-யில் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. இதற்கு இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரவில்லை.

* 97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.

* சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.

* பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாய் கிரகத்தில் 1 ஆண்டு காலமாக இருக்கிறது.

* லிபியாவின் எல் அசிஸியா (El Azizia)-வில் 136 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலையை அடைவதால், பூமியில் அதிக வெப்பம் கொண்ட இடமாக இது கருதப்படுகிறது. -129 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலை அண்டார்டிகா (Antartica)-வின் வோஸ்டாக் (Vostok) என்ற இடத்தில் பதிவானதே பூமியில் மிகுந்த குளிர்ச்சியான பகுதியாக அறியப்பட்டுள்ளது.

* கொலம்பியாவின் ல்லோரோ (Lloro)-வில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 40 அங்குலத்திற்கு மேலாக மழை பதிவானது. சிலி (Chile)-யின் அரிகா (Arica)-வில் ஒரு ஆண்டுக்கு 1 அங்குலத்திற்கும் குறைவாகவே மழை பதிவாகிறது.

* 200,000 அல்லது 300,000 வருடங்களுக்கு ஒரு முறை மாக்னெடிக் போலாரிடி (Magnetic polarity) எனப்படும் புவியின் காந்த முனைவுத்தன்மை மாற்றம் அடைவதாக கூறப்படுகிறது. அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வட துருவமாக இருந்தது தற்போது தென் துருவமாக மாற்றம் பெற்றுள்ளது என விஞ்ஞான குறிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த மாற்றத்தை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் எதிர்ப்பார்க்கலாம் என கூறும் விஞ்ஞானிகள், அது நேர்ந்தால் வாழும் உயிர்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

* ஆண்டிற்கு சுமார் 30,000 விண்வெளி துகள்களும், தூசுகளும் பூமியினுள் நுழைகின்றன. அதில் பெரும்பாலானவை பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போதே எரிந்துவிடுகின்றன.

* 25 மில்லியன் ஆண்டுகளில் ஒரு பிரம்மாண்ட கண்டம் உருவாகும் என்றும், தொடர்ந்து நகர்ந்து வரும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் இது சாத்தியமாகும் என அறிவியல் தகவல்கள் கூறுகின்றன. பெசிஃபிக் தட்டுகள் ஆண்டுக்கு 4 செ.மீ வேகத்திலும், அட்லாண்டிக் தட்டுகள் ஆண்டுக்கு 1 செ.மீ என்ற வேகத்திலும் நகர்ந்துக்கொண்டிருக்கின்றன.

பூமியில் உள்ள சாதாரணங்களையும், அசாதாரணங்களையும் அத்தனை எளிதில் புரிந்துக்கொள்ளவோ, கூறிவிடவோ இயலுவதில்லை. மிகப்பெரிய ஆச்சர்யங்களும், அதிசயங்களும் கொண்ட ஒரு ஆபூர்வ பெட்டகமாகவே பூமி திகழ்கிறது.


அவினாசி அத்திக்கடவு திட்டம்



 அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்  

ஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...

கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும். இத்திட்டம் பாசன திட்டம் இல்லாமல் நிலத்தின் வழியாக ஏற்கனவே இயற்கையாக வந்து கொண்டிருந்த கால்வாய்கள் மூலம் வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து எங்கள் பகுதின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருக்கிறது. காரமடை, மேட்டுபாளையம், அன்னூர்,  திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 35 லட்சம் மக்களுக்கு பயன்படும் திட்டமாகும். 

                          1800 அடிக்குக் கீழே சென்றுவிட்ட நிலத்தடி நீர் மட்டம் இத்திட்டத்தினால் வெறும் 50 அடிக்கு வந்துவிடும். மின்செலவு, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் செலவு, மின் மோட்டார், ஒயர், பைப், ஆட்கள் கூலி என இவை  அணைத்து  செலவுகளும்  விவசாயிக்கும்,  அரசுக்கும்  மீதமாகும்.
1.25 TMC தண்ணீர் மட்டுமே இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது. பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து பல ஆயிரம்  TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதில், குறிப்பாக 17 முறை குறைந்தபட்சம் 22 TMC முதல்  அதிகபட்சம் 109.23 TMC வரை தண்ணீர் வெளியேறியுள்ளது. இவ்வாறு அணைகள் நிரம்பி உபரி ஆகும் நீரைத்தான் இத்திட்டதிருக்கு கேட்கிறோம்.

    
அவினாசி அத்திக்கடவு திட்டம்


           கடந்த 1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த (லேட்) திரு.K.மாரப்பகவுண்டர் அவர்கள், அன்றைய  முதல்வர் மரியாதைக்குரிய திரு.கே.காமராஜர் அவர்களிடம் அவினாசி திட்டத்தை மட்டுமே கோரி வந்தார். இந்த 1963 ஆண்டு பிளான்-யை (காமராஜர்திட்டம்) காமராஜர் டில்லி காங்கிரசுக்கு தலைவராகப் போன காரணத்தால் திரு.பக்தவச்சலம் 1967 வரை காலதாமதப்படுத்தி விட்டார். பின்னர் வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியும் 5 முறை முதல்வராக இருந்த போதும் இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை. காரணம் தி.மு.க, தேர்தலில் நின்ற காலத்தில் இருந்து 1996-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கு முன்பு காங்கிராசும் 1980க்கு பிறகு அ.தி.மு.க வும் இத்தொகுதியை கைபற்றி உள்ளது(அவர்களும் நிறைவேற்றவில்லை). 2001 யில்  பஸ் சின்னத்தில் நின்ற இத்திட்டத்தின் வேட்பாளர் 38,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த வேட்பாளர் தோல்வியை தழுவினாலும் அரசியல் சரித்திரத்தில் ஒரு வேட்பாளரால்........ ஒரு திட்டதால்..... புதிய எழுச்சியால் - ஆண்ட கட்சி டெபொசிட் இழந்தது.தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களும் திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறியுள்ளார்.

                        தென்னை, பனை என எல்லா வகை தாவரங்களும் வறண்டு, நிலத்தடி நீரும் வற்றி கால்நடைகளையும் வளர்க்க வழியில்லாமல் வாழ்வாதாரம் தேடி விவசாயிகள் நாடோடி ஆகின்றனர். வாழ்க்கை முழுவதும் கடன்காரனாக ஆகிவிட்டதால், வாழ்க்கை முடித்து கொள்வதற்கும் தற்கொலைகளுக்கு முயற்சிப்பதை தடுத்தாக வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

                                    அவிநாசிக்கு வடக்கே உள்ள புளியம்பட்டி, நம்பியூருக்கு தெற்கேயும்,அவிநாசிக்கு தெற்கில் உள்ள நொய்யலும், கிழக்கில் உள்ள பெருந்துறை அருகிலும் பாசன வசதியுள்ள பகுதிகளாகும். ஆனால்,, அவினாசி வட்டாரத்தில் 60 ஆண்டுகளாக கடும் வறட்சி, மழையின்மை, பாசன வசதியின்மை என்று இருந்தபோதிலும் 1,300 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைத்து, தற்போதைய கடுமையான மின்வெட்டு நேரத்திலும், மஞ்சள், பருத்தி, வாழை, கரும்பு என எல்லா பயிர்களையும் சாகுபடி செய்து கடும் உழைப்பால் நிலத்தை நல்லபடி வைத்துள்ளனர். ஆனால், விவசாயி கடன்காரன் ஆனான்.

                     முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட கொங்கு மண்டலத்துக்கு வரும் அரசியல் தலைவர்கள் யாரும் இத்திட்டத்தை பற்றி பேசாதவர்களில்லை. குந்தா கழிவு நீர் திட்டம், மேல் பவானித் திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பொழுதெல்லாம் திட்டத்தின் பெயர்கள் மட்டுமே மாறுகிறது. யாரும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.

                                 தற்போது ரூ.1,863 கோடியே திட்ட செலவாகும் என அரசு கூறுகிறது. காவிரி நதி நீர் பங்கீடு விசியத்தை, உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்திய அரசுதழில் வெளியிட நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டிய முதல்வர் ஜெயலலிதா நிவாரணம் செய்தது போல, கெயில் நிறுவனம் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டபோது நெடுஞ்சாலைகளில் குலை பதிக்க ஆணையிட்டது போல மிகவும் உறுதியாக, அத்திக்கடவு அவினாசி திட்டத்தையும் முதல்வர் அறிவிக்க வேண்டும். எனவே, இத்திட்டத்தை அரசு இதழில் வெளியிட்டு, நிதி ஒதுக்கி அலுவலர்களை நியமித்து மிக வேகமாக, போர்கால அடிப்படையில் பணிகளை துவக்க வேண்டும். இனி கொங்கு மண்டல விவசயிகள் அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள். இத்திட்டம் வெறும் அறிக்கை அறிவிப்பாக இல்லாமல் ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுக்கவில்லை என்றால், அதிமுக வின் எக்கு கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலம் உருகி, கண்டிப்பாக ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

              திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி - ஆகிய சட்டமன்ற தொகுதிகள், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதல் மூன்று இடங்களை பிடித்ததை யாரும் மறக்க மாட்டார்கள். அதே சமயம் இத்திட்டத்தை காலதாமதபடுத்தினால், அந்த சரித்தரம் காணமல் போய்விடும்.

அத்திக்கடவு -அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், அதன் பயனும்

 1. திட்டத்தின் நோக்கம் பாசன திட்டமாக இல்லாமல் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

 2. பவானி ஆற்றில் ஆண்டுக்கு 53 T.M.C தண்ணீர் உபரி நீராக கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை அவினாசி உட்பட 2000க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மொத்தம் 85 பெரிய குளங்களும் 225-க்கு மேற்பட்டகுட்டைகளும் நிரப்ப முடியும். இதற்கு தேவையான நீரின் அளவு 1.2 T.M.C மட்டுமே.

3. இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களை சார்ந்த 1.30 லட்சம் ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

4. ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்படும் தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது. 25 லட்சதிருக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தன்நிறைவு பெரும்.

5. தற்போதுள்ள மின் பற்றாகுறைக் காலத்தில் இது ஒரு மின் சேமிப்பு திட்டமாக உள்ளது. சுமார் 35 லட்சதிருக்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நீர் எடுப்பதற்கு பயன்படும் மின் மோட்டார்களின் பயன்பாடு குறையும்.

6. விவசாய விளை நிலங்கள் விலை நிலங்களாக(வீட்டு மனைகளாக) மற்றப்பாடுவது முற்றிலும் தடுக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும், ஆழ்துளை கிணறுகள் தொண்டபடுவது தடுக்கபடும், இதனால் ஏற்படும் பூகம்பம் போன்ற பேரிடர் தடுக்கப்படும்.

இதுவரை திட்டம் கடந்து வந்த பாதை........ 

1. 1993-ம் வருடம் மக்கள் சக்தி இயக்க நிறுவனர், காலஞ்சென்ற முனவைர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்கள் தலைமையில் 9 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ளபட்டது.

2. 1996-ல் ஈரோடு மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) குன்னதூரில் திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்.

3. ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் அனைவரும் இணைந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் மனு கொடுத்தனர்.

4. அவினாசி தொகுதியில் அவினாசி அத்திக்கடவு வேட்பாளராக திரு. மோகன்குமரை அவர்களை நிறுத்தி திட்டதிருக்கு அதரவாக 38,000 வாக்குகளை பெற்று அரசின் கவனத்தை திருப்பினர்.

 5. 2003 - யில் கொங்கு பேரவை சார்வாக குமார. இரவிக்குமார் தலைமையில் உண்ணாவிரதம்.

திரு. மரப்பகவுண்டர்,  திரு.அம்பளவான செட்டியார், திரு.ராஜ்குமார் மன்றாடியர், திரு.போன்னுகுட்டி, நடிகர். திரு.சரத்குமார், கிசான். வேலுசாமி, திரு.ராஜாசேனாதிபதி, கொமுகா நாகராஜ், அசநல்லிபாளையம் சுப்பிரமணி மேலும் அன்னூர் மற்றும் குன்னத்தூர் பகுதிகளை சேர்ந்த பலரது பெயர் எனக்கு தெரியவில்லை  இவ்வாறு பெயர்களை சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு பேர் இந்த திட்டத்தை மக்களிடமும், அரசிடமும் கொண்டு சென்றனர்.

        இவ்வாறு கட்சி வேறுபாடு இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள், தொழிலார்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒரு அணியில் நின்று கடையடைப்பு, ஆர்பாட்டம், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அதனால் கைதாகி பொள்ளாச்சி மற்றும் கோவை சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம், சைக்கிள் பேரணி, 1,500 பேர் மொட்டையடித்து போராட்டம், வாகன பேரணி, நடைபயணம், தேர்தலில் போட்டி என அரசின் கவனத்தை ஈர்த்து வெளி மாநிலகளில் உள்ள நீர் ஆதரத்தை நம்பி இல்லாமல், நம்மிடம் உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் முலம், மக்கள் வாழ்வில் வசந்தம் வீச அனைவரும் ஓன்று திரண்டு, அரசின் கவனத்தை ஈர்த்து போராடி வருகிறோம்.

இங்ஙனம்
வருங்கால சந்ததிக்கு தண்ணீரையும், வாழ்வாதாரத்தை கேட்கும்.....
தூர்ப்பாக்கியமான நிலையிலுள்ள 
அவினாசி, அன்னூர், குன்னத்தூர், பொதுமக்கள் 




   
அவினாசி அத்திக்கடவு திட்டம் :-

இந்த உயிர் திட்டதிக்கு  நாங்கள் போராடிய போரட்டங்கள் ஏத்தனை ஏத்தனை .... நீங்களே பாருங்கள் கீழே உள்ள படங்களை:  இந்த பல முகங்கள் கொண்ட அரசியல் வாதிகளை என்ன செய்யலாம்.

அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்





அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்

அவினாசி அத்திக்கடவு திட்டம்
அத்திக்கடவு  திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வாகன பேரணி(ஏப். 28- 2013)
அவினாசி அத்திக்கடவு திட்டம்
 உண்ணாவிரத போரட்டம் அவினாசியில் (24/5/13)


அவினாசி அத்திக்கடவு திட்டம்
விழிப்புணர்வுபொதுக்கூட்டம்(26.5.13)

அவினாசி அத்திக்கடவு திட்டம்

(7/7/2013)

அவினாசி அத்திக்கடவு திட்டம்

கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம்
(4-8-2013 -11-8-2013)

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.