A+ A-

ஒருவர் கைது செய்ய‍ப்பட்டால், ஜாமீனில் வெளிவருவது எப்ப‍டி?

ஒருவர் கைது செய்ய‍ப்பட்டால், ஜாமீனில் வெளிவருவது எப்ப‍டி?


வழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் ‘வரக்கூடிய வழக்கு’ என்றும் ‘பெயிலில் வர முடியாத வழக்கு’ என்றும் பிரிக்கலாம்.


பெயிலில் வரக்கூடிய வழக்குகள்


இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல்துறை அதி காரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடு விக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்ட வரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விட லாம்

பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்


ஒருவர் கைது செய்ய‍ப்பட்டால், ஜாமீனில் வெளிவருவது எப்ப‍டி?


“பெயிலில் விடுவிக்க முடியாத ” என்பதன் பொருள் காவல் துறைஅதிகாரியால் பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பது தான்.

நீதிபதி குற்றவாளி குறித்த முதற் கட்ட முடிந்த பின் அவரை பெயி லில் விடுவிக்க கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்ப தாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயி லில் செல்ல நீதிபதி அனும திப்பார்.


பெயிலில் விட மறுக்க போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்

1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்

2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களி ல் அவர் குறுக்கிடுவார்

3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்

4. காவல் துறையின் விசாரணை இன் னும் முடியவில்லை

5. திருட்டுபோன பொருட்கள் இன்னு ம் கைப்பற்ற படவில்லை

6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவண ங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை

7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடி னம்


பெயிலில் வர மனு

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப் ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நிய மிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டு ம் (பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாங்குவர் )வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிக்கு மனுசெய்யலாம் (பொ து மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்பதால் தானே வாதிடுவதை பொது வாய் தவிர்ப்பது நல்லது)

பெயில் மனுவில் பொதுவாய் கீழ்க்காணும் காரணங்கள் சொல்லபடுகின்றன

1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலை யை இழக்க நேரிடும்

2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனதுகுடும்பம் பாதிக்கப்படுகிறது

3. காவலில் இருப்பவருக்கு உடல் நலமில் லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்

பெயில் மறுப்பும் மேல் முறையீடும்
பெயிலில்விட நீதிபதி மறுத்தால் அதற்கா ன காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடி யும்.

ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில கா லம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன் றத்தில்அப்பீல் செய்யலாம்

ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail)

ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக் கு தன்மீது போடப்பட்டு சில நாட்களாவது தன் னை சிறை வைக்க முயல கூடும் என எண் ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமு ண்டு

இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லாம். வாரன்ட் இல் லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயா ர் என்றா ல் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசி பேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது .

வழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் ‘வரக்கூடிய வழக்கு’ என்றும் ‘பெயிலில் வர முடியாத வழக்கு’ என்றும் பிரிக்கலாம். பெயிலில் வரக்கூடிய வழக்குகள் இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல்துறை அதி காரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடு விக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்ட வரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விட லாம்