A+ A-

இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு தற்போது சக்கர நாற்காலியில் அவர்களது வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எமது பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே "உயிரிழை"
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!



இவ் அமைப்பில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளை கொண்ட இவ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற பயனாளிகளின் நலன் கருதி செயற்பாடுகளை முன்னெடுத்து  வருகின்றது. அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து அவ் அமைப்பின் சிறுதுளி எனும் செயற்த்திட்டத்தின்கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று இடுப்பின் கீழாகவும் கழுத்தின் கீழாகவும் இயக்கம் இல்லாமல் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழும் பயனாளிகளுக்கான மாதாந்த உதவி தொககையினை பாதிப்பின் அடிப்படையிலும் பயனாளிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வழங்கி வருகின்றோம். 
பயனாளிகளில் இன்று  வரைக்கும் 41 பயனாளிகளிற்க்கு  மட்டுமே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது 
ஆயினும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் சாதாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் மருத்துவம்  மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதற்கான அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் தேவைப்படுகின்றது. 
எனினும் எமது  பயனாளிகள் எதிர்நோக்கின்ற பிரதானமான பிரச்சினை அழுத்தப்புண் ஆகும் தொடர்ச்சியாக சக்கர நாற்காலியினை பாவிப்பது குடும்ப சூழ் நிலை காரணமாக கவனிக்காமல் இருப்பது கட்டாயம் வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலையில் தொடச்சியான சக்கர நாற்காலி பாவனை போன்ற காரணங்களினால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
எமது பயனாளிகள் சிலர் அழுத்தப்புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறு  பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அழுத்தப்புண்கள் சில
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

எமது பயனாளிகள்  மருத்துவதேவைகளையும் அவர்களின் அன்றாட வாழ்கை செலவுகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள் இவர்களின்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரப்படுகின்றார்கள் இவர்களில் சிலர்  தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாதவர்களாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இதனால், அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களின் தேவைகளை  ஓரளவேனும் பூர்த்தி செய்து கொள்வதற்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை இவர்களுக்கு  உதவலாம்.


இவர்களின் வாழ்க்கையை மாற்ற உங்களாலும் முடியும் .....



இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
வெளிநாடுகளில் வாழும் எமது சொந்தங்கள் எம்முடன் தொடர்புகொண்டு நேரடியாகவும் உங்கள் பக்களிப்பினை வழங்கலாம் அல்லது ஏற்கனவே உயிரிழையோடு இணைந்து பக்களிப்பினை வழங்கிகொண்டிருக்கும்  இங்கிலாந்தில் உள்ள மனிதாபிமான பணிகளுக்கான ஜக்கிய அறக்கட்டளை ( UNITED TRUST FOR HUMANITARIAN AID (UTHA) ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து உங்களுடைய பங்களிப்பினையும் மேற்கொள்ளலாம் 
உயிரிழை அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இணைந்து கொள்ளுங்கள் https://www.facebook.com/Uyirilai இதன் முலம் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் 
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
Uyirilai
ஊதா அமைப்பின் இணையதள முகவரி :- http://www.utha.org.uk/

இத் தகவலினை முழுமையா படித்தமைக்கு மிக்க நன்றி 
நண்பர்களே உங்களால் இவர்களுக்கு உதவ முடியவில்லையாயின் இவர்களுக்கு உதவுவதற்கு எங்களாலும் முடியும் என்று முன்வரக்கூடிய நல்லுள்ளம் படைத்த எங்களுடைய சொந்தங்களுக்கு இத் தகவல் சென்றடைவதற்கு நீங்கள் இத்தகவலை  பகிர்வதன் (share) செய்வதன்மூலம் நீங்களும் ஒரு உதவியாளராக மாறலாம்.

நன்றி 

Neminathan Paramananthan paramananthan22@gmail.com


இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு தற்போது சக்கர நாற்காலியில் அவர்களது வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எமது பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே "உயிரிழை"