A+ A-

பேராசை இல்லாது இருந்தால், வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருக்கலாம் சிறுகதை..

பேராசை இல்லாது இருந்தால்,  வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக  இருக்கலாம் சிறுகதை..

பாண்டிய நாட்டு அரண்மனையில் அரசரின் பிறந்த நாள் விழாவை கோலாகலாமாகக் கொண்டாடினர். வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்னாது வாரி வழங்கினார் அரசர். அங்கே வந்த மலையன் என்பவன் அரசரை பணிவாக வணங்கினான்.

"அரசர் பெருமானே! நான் வறுமையில் வாடுகிறேன். வளமாக வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும்,'' என்று பணிவாக வேண்டினான்.

"உனக்கு என்ன வேண்டும்? தயங் காமல் கேள்,'' என்றார் அவர்.
பேராசை கொண்ட அவனுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.

"அரசர் பெருமானே! என் உள்ளம் மகிழு மாறு நீங்கள் பொற்காசுகளைத் தாருங்கள்,'' என்றான் அவன்.

இவன் பேராசை கொண்டவனாக இருக் கிறான். அதனால்தான் இப்படிக் கேட்கிறான் என்று நினைத்த அரசர், அவனைக் கருவூலத் திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே குவியல் குவியலாகப் பொற்காசு கள் கொட்டிக் கிடந்தன. அவற்றை வியப் புடன் பார்த்தான் அவன்.

"உனக்கு எவ்வளவு பொற்காசுகள் விருப்பமோ அவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம்,'' என்றார் அவர்.

"நீ இங்கிருந்து ஒரே ஒருமுறை எவ்வளவு பொற்காசுகளை வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம். வெளியே செல்லும் வரை அவற் றைக் கீழே வைக்கக் கூடாது. கீழே வைத்தால் பொற்காசுகள் மீண்டும் கருவூலத்தில் சேர்ந்து விடும்,'' என்றார்.

அவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.

"நான் வலிமையாக இருக்கிறேன். இங்கிருந்து ஏராளமான பொற்காசுகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வந்தன் நான்தான்' என்று மகிழ்ச்சி அடைந்தான் அவன்.

அங்கிருந்த சாக்குப் பை ஒன்றை எடுத்தான். அதற்குள் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொட்டினான்.பையில் பாதி நிரம்பியது. அதைத் தூக்கிப் பார்த்தான். அவனால் தூக்க முடிந்தது. பேராசை கொண்ட அவன், இன்னும் தன்னால் தூக்க முடியும் என்று நினைத்தான்.

மேலும், பொற்காசுகளைப் பைக்குள் போட்டான்.

அப்போதும் அவனுக்கு நிறைவு ஏற்படவில்லை.

கருவூல வாயில் வரை தூக்கிச் செல்ல வேண்டும். சிறிது தொலைவுதானே. எப்படியும் தூக்கிச் செல்லலாம் என்று நினைத்தான்.

பை நிரம்ப பொற்காசுகளைப் போட்டான்.



அந்தப் பையை அசைத்துப் பார்த்தான். மிகவும் கனமாக இருந்தது.

முயற்சி செய்து அந்தப் பையைத் தூக்கி முதுகில் வைத்து அதைச் சுமந்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.


பத்தடி எடுத்து வைத்திருப்பான். அதற்கு மேல் அவனால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை; பையைக் கீழே போடவும் விரும்பவில்லை.

முதுகெலும்பு முறிந்து அங்கேயே விழுந் தான் அவன். பொற்காசுப் பை அவன் மேல் கிடந்தது. அப்படியே இறந்து போனான்.


அங்கே வந்த அரசர் அவன் கீழே விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்தார்.

பேராசை இல்லாது இருந்திருந்தால், இவன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம். பேராசையால், அவனுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினர் அரசர்.
'பேராசை பெருநஷ்டம்' என்று சும்மாவா சொன்னார்கள்!

வந்த அரசர் அவன் கீழே விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்தார். பேராசை இல்லாது இருந்திருந்தால், இவன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம். பேராசையால், அவனுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினர் அரசர். 'பேராசை பெருநஷ்டம்' என்று சும்மாவா சொன்னார்கள்!