A+ A-

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில டிப்ஸ் (Health Tips)

அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பதினை அடைய மக்கட்கு மூல காரணமாக இருப்பது ஆரோகியமேயாகும். நோய் தேகத்திலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலை. நோயற்ற நிலையே ஆரோக்கியம். மனிதனிடையே உள்ளவற்றில் மிகவும் சிறந்தது உயிரே ஆகும். உயிருக்கு அடுத்தப்படியாக ஆரோக்கியத்தை கூறலாம். ஆரோக்கியமில்லாத ஒருவனுடைய வாழ்க்கையால் எந்த ஒரு பயனுமில்லை. இந்த ஆரோக்கியம் ஒருநாள் இரவில் வந்துவிடாது. பெரும்பாலோர் உடல் ஆரோக்கியம் குறைய தொடங்கும் போதுதான் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அது தவறானது நாம்  ஆரோக்கியமாக உள்ளபோதுதான் உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்தித்து தொடர்ந்து பாதுகாக்கும் செயலினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் நமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.
 
இந்த ஆரோக்கியத்தை பெற நம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும் . இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது விலை அதிகமில்லாத சத்தான கீரைகள்தான் மற்றும் பழங்கள் . அவற்றில் உள்ள சத்துக்களின் மகத்துவத்தை பற்றிய சிறிய அலசல் தான் இந்த பதிவு.
 
கீரைகள் 

 
நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும் உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும். 
 
"முருங்கைக்கீரை முட்ட வாயு ; ஆத்திக்கீரை அண்ட வாயு"  என்று கூறி சிலர் கீரைகளை உணவாக சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். என்ன சொல்வது இவர்களின் அறியாமையை. 'வாயு' என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.



நமது நாட்டு அறிய பொக்கிஷமான கீரை -இலைகளில் உள்ள வைட்டமின் கணிசத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்:


 
 
 




வைட்டமின் ' ஏ ' மகிமையை தவிர இன்னும் பிற மகிமைகளும் கீரைகளுக்கு உள்ளன. போலிக் ஆசிட் (FOLIC ACID) என்ற வைட்டமின் ' பி 'யின் ஒரு ரகம் கீரைகளில் - இலைகளில் ஏராளமாய் உண்டு. இந்த வகை ரகத்தால் தான் ரத்தம் சோகைப்படாமல் காப்பாற்றப்படுகிறது.



வைட்டமின் 'பி' & 'சி ' பற்றி சுருக்கமாக பார்க்கலாம் . 



முருங்கைகீரையில் அரிசிக்கு மும்மடங்கும். வெந்தயக்கீரையில் அரிசிக்கு இருமடங்கும், பசலைக்கீரையில் அரிசிக்கு மும்மடங்கும் வைட்டமின் 'பி' இருக்கிறது.ஆரஞ்சில் வைட்டமின் ' சி ' 60 யூனிட் என்று அளவுகோல்  வைத்துக்கொண்டால் கீரை- இலைகளில் கணிசத்தைக் காணலாம்.


 
 
 
 
 
 




கீரைகளில் புரதக் கணிசமும் அதிகமாகவே உள்ளது. அன்றாட உணவில் கீரையினை மசியலாகவோ துகையலாகவோ அல்லது பொரியலாகவோ  சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரையினை தினசரி உணவில் சேர்த்தக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கிவிடும்.



பழங்கள்



நமது உடலுக்கு கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள்(Vitamins ) ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.






புரோட்டீன் சத்துள்ள பழங்கள் 



மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம்

(நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.



கால்சியம் சத்துள்ள பழங்கள்



எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.



இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள் 



ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .



பொட்டாசியம் சத்து 



ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.



பாஸ்பரஸ் சத்துள்ளபழங்கள் 



மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும்  அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன . மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன.



மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.



பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும்  மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.



தேன் சிறப்பு 




 





தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள்.



தேனில் 78 பங்கு கரி நீரைகளும் (Carbo  Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும்  இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள  மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.






தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.



மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும்  மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் .



புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது.



திருமணமான  தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.



பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.



குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை  கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள்.



கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.



தேனின் வகைகள் 
 
சுத்தமான தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும். 
 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில டிப்ஸ் (Health Tips)