A+ A-

இந்திய அணுவியல் துறை தந்தை

 ஹோமி ஜஹாங்கீர் பாபா

ஹோமி ஜஹாங்கீர் பாபா
  • ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 
  • 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
  • இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது(1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967 முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(டீhயடிhய யுவழஅiஉ சுநளநயசஉh ஊநவெசந) எனப் பெயரிடப்பட்டது.
  • அமெரிக்காவில், 1942ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாடாவுக்கு கடிதம் எழுதினார். அதன்பின் அங்கு ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு, அதன் இயக்குநராக ஹோமி பாபா பொறுப்பேற்றார்.
  • அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
  •  ஜஹாங்கீர் ஹோமி பாபா தனது 56வது வயதில் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மறைந்தார்

பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர்