A+ A-

ஈராக் கார் குண்டு தாக்குதலில் 33 பேர் பலி

ஈராக்கில் சன்னி ஷியா பிரிவினர் இடையேயான மோதல் வலுத்துவருகிறது. இன்று தலைநகர் பாக்தாத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் 9 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. சந்தைகள், கடை வீதிகள் என குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈராக் கார் குண்டு தாக்குதலில் 33 பேர் பலி

இந்த தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருந்தும் ஷியா பிரிவு பிரதமர் நூரி மாலிக்கின் ஆட்சிக்கு எதிராக சன்னி போராளிகள் நடத்திய தாக்குதல்கள் தான் இது என்று அரசு கூறியுள்ளது. 

அல்கொய்தா தீவிரவாதிகள் இதுபோன்று தாக்குதல் நடத்தி தங்களின் இருப்பு குறித்த செய்தியை அறிவித்து வருகிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. இந்த மாதம் நடந்த பிரிவினைவாத தாக்குதலில் இதுவரை 123 பேர் கொல்லப்பட்டுள்ளது 

ஈராக் கார் குண்டு தாக்குதலில் 33 பேர் பலி