ஆழ்ந்து சுவாசித்தல் டென்சன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்சனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.
அமைதியாக இருக்கவும் அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலானோர் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அமைதியை இழந்து, ஒருவித பதற்றத்துடன் வேலையை செய்வார்கள். ஆனால் அப்படி தான் இருக்கக்கூடாது. எவ்வளவு தான் வேலை அதிகமாக இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறிது நேரம் தனியாகவோ அல்லது உடன் பணிபுரிவோருடனோ வாக்கிங் சென்று வாருங்கள்.
பாட்டு அல்லது பிடித்த வீடியோக்களை பாருங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு முதலில் நன்கு சிரிக்க வேண்டும். ஏனெனில் சிரிப்பு ஒன்று தான் உடலுக்கும், மனதுக்கும் ஒரு நல்ல மருந்து. எனவே நல்ல குத்துப் பாட்டு கேட்பது அல்லது பிடித்த வீடியோக்களைப் பார்ப்பது, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
காபியை தவிருங்கள் அனைவரும் காபி குடித்தால், டென்சன் குறையும் என்று நினைத்து, அவ்வப்போது காபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காபி குடித்தால், டென்சன் தான் அதிகரிக்கும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைனானது, மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனை குறைக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.
தியானம் மனமானது அமைதியிழந்து இருக்கும் போது, தியானம் செய்தால், மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் தியானம் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மனமானது அமைதியடையும்.
நல்ல உணவுகளை உட்கொள்ளவும் மனதை அமைதிப்படுத்துவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை டென்சனாக இருக்கும் போது சாப்பிட்டால், அவை மனதை அமைதிப்படுத்து. அதிலும் பாதாம், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும்.
வைட்டமின் சி அவசியம் சேர்க்கவும் மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான ஆரஞ்சு, கேரட் மற்றும் இதர சிட்ரஸ் பழங்களை வேலை செய்யும் போது சாப்பிடுங்கள்.
தண்ணீர் குடிக்கவும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.
கருத்துரையிடுக