A+ A-

இன்று :ஜுன் ௮(8) உலக கடல் தினம் (WORLD OCEANS DAY)

இன்று :ஜுன் ௮(8)  உலக கடல் தினம்


உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 8ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதே நாளில் 1992 ஜுன் மாதத்தில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற புவி மாநாட்டின் போது, சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதன்படி 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் தேதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை 63/iiiம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.

இன்று :ஜுன் ௮(8)  உலக கடல் தினம்

சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றது.

விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன.

 உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை நமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். 

இன்று :ஜுன் ௮(8)  உலக கடல் தினம்


இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. 

முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.

உலகில் பசிபிக் சமுத்திரம், 

அட்லாண்டிக் சமுத்திரம், 

இந்து மகா சமுத்திரம், 

அன்டாட்டிக் சமுத்திரம், 

ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. 

பசிபிக் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு.

இன்று :ஜுன் ௮(8)  உலக கடல் தினம்


சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள், 

வளைகுடாக்கள், 

விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. 

இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.

மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. 

இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது நமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.

இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள், வரைதல் போட்டிகள், திரைப்பட விழாக்கள், கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது.

இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையைக் குறிப்பிடலாம்.

சமுத்திரங்கள்  அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன.

இத்தகைய சிறப்புகளை கொண்ட கடல்கள் மற்றும் சமுத்திரங்களை காப்பது ஒரு தனி மனித மற்றும் சமூக கடமையாகும்

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 



1405 - யோர்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் மன்னர் இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.

1783 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.

1887 - ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1929 - ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.

1941 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

1984 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

1992 - முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.

1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.

2006 - அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.

2007 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.

2007 - இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

2007 - ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1930 - இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (இ. 1999)

1975 - ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகை

இன்று மறைந்த பிரபலங்கள் 


1845 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவர் (பி. 1845)

1947 - எரிக் ஃப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

சமுத்திரங்கள் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன. இத்தகைய சிறப்புகளை கொண்ட கடல்கள் மற்றும் சமுத்திரங்களை காப்பது ஒரு தனி மனித மற்றும் சமூக கடமையாகும்