A+ A-

ஜுன் ௯(9) ரமன் மக்சேசே விருது பெற்ற கிரண் பேடி பிறந்த தினம் இன்று

கிரண் பேடி (Kiran Bedi)

கிரண் பேடி (Kiran Bedi) (9 சூன், 1945) இந்தியாவின் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி யாவார்.

2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர்.
தமது 22ஆம் வயதில் (1971) ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவருமாவார்.

1993-1995 ஆண்டுகளில் தில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறையில் அவராற்றிய சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி
\
1994ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ரமன் மக்சேசே விருது பெற ஏதுவாய் இருந்தது.

அவர் இரு அரசுசாரா அமைப்புகள்: நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும் சிறை சீர்திருத்தங்கள்,போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பௌண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 




68 - ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.

1873 - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன்
அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.

1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.

1923 - பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

1928 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.

1934 - வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.

1935 - வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.

1946 - பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.

1962 - தங்கனீக்கா குடியரசாகியது.


இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1781 - ஜார்ஜ் ஸ்டீபென்சன் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை - இ (1848))

1975 - ஆன்ட்ரூ சைமன்ஸ், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்

1977 - பேஜா ஸ்டொயாகொவிக், செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இன்று மறைந்த பிரபலங்கள் 


68 - நீரோ, ரோமப் பேரரசன் (பி. 37)

1870 - சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1812)

1946 - ஆனந்தா மஹிடோல், (எட்டாவது ராமா), தாய்லாந்து மன்னர் (பி. 1925)

1974 - மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890)

1989 - ஜோர்ஜ் பீடில்ல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)

1994 - ஜான் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903);

1834 - வில்லியம் கேரி, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. 1761)

கிரண் பேடி (Kiran Bedi) (9 சூன், 1945) இந்தியாவின் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி யாவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர். தமது 22ஆம் வயதில் (1971) ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவருமாவார். 1993-1995 ஆண்டுகளில் தில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறையில் அவராற்றிய சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ரமன் மக்சேசே விருது பெற ஏதுவாய் இருந்தது.