A+ A-

போலியான கணக்குகளை நீக்குவதில் பேஸ்புக் தீவிரம்


குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூவலைத்தளமான பேஸ்புக், போலியான பெயர்களில் தொடங்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கணக்குகளை நீக்குவதில் தீவிரமாக உள்ளது.
இப்போலியான கணக்குகளை பயன்படுத்தி சமூசச் சீரழிவு, அரசியல்வாதிகளை பழிவாங்குதல், தனிப்பட்ட நபர்களை பழிவாங்குதல் போன்ற செயல்கள் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.
அத்துடன் குறைந்தளவான Like இனை கொண்டிருக்கும் பேஸ்புக் பக்கங்களும் நீக்கப்படவுள்ளது.
எனினும் பேஸ்புக் தளத்தில் கணக்கு ஒன்றினை உருவாக்கிக் கொள்ள முடிவதனால், நீக்கப்பட்ட கணக்குகளின் பெயரில் புதிய கணக்குகள் உருவாக்கப்படலாம்.