A+ A-

கூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பிரேசில் நீதிமன்ற கூகுளின் பிரேசில் தலைவரான பாபியோ ஜோஸ் சில்வா கொயல்கோவை கைது செய்ய பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதாவது கூகுளின் யுடியூப்பில் வரும் வீடியோக்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அதுபோல் ஒவ்வொரு நாளும் இந்த யுடியூப்பில் புதுப்புது வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன.



இந்த நிலையில் பிரேசிலில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அல்சிடஸ் பெர்னல் என்பவரைப் பற்றிய இரு வீடியோக்கள் யுடியூப்பில் வந்திருக்கின்றன. மேலும் அவரைப் பற்றி தாக்கும் வகையில் அந்த வீடியோக்கள் வந்திருக்கிறன. எனவே இந்த வீடியோக்கள் பிரேசிலில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதி அந்த வீடியோக்களை யுடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூகுளுக்கு ஏற்கனவே பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதை கூகுள் செய்யவில்லை. அதனால் அல்சிடஸை கைது செய்ய மட்டோ க்ராசோ டு சோல் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி பால்வியோ பெரன் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் 24 மணி நேரத்திற்கு அந்த மாநிலத்தில் யுடியூப் வீடியோக்கள் தடை செய்யப்படவும் உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால் கூகுளின் தலைவரை கைது செய்ய எந்தவித அதிகாரப்பூர்வ கட்டளையும் வரவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரேசிலில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அல்சிடஸ் பெர்னல் என்பவரைப் பற்றிய இரு வீடியோக்கள் யுடியூப்பில் வந்திருக்கின்றன. மேலும் அவரைப் பற்றி தாக்கும் வகையில் அந்த வீடியோக்கள் வந்திருக்கிறன. எனவே இந்த வீடியோக்கள் பிரேசிலில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதி அந்த வீடியோக்களை யுடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூகுளுக்கு ஏற்கனவே பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.