A+ A-

சுவிஸ் வங்கிகள் திவாலாகும் வாய்ப்பு

சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் திவாலாகும் நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.

மிகவும் வலுவான பொருளாதாரம், வளம் செழிக்கும் மலைகளை கொண்ட கோடை வாழிடங்கள் என ஒரு தரப்பில் புகழப்படும் சுவிஸ், மற்றொரு பக்கம் அந்நாட்டு வங்கிகளுக்கு திவாலாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அந்நாட்டு மக்களே காரணம் என கூறப்படுகின்றது.

சிறுவயதில் திருமணம், வேலையின்மை, விரைவில் விவாகரத்து பெறுதல் போன்றவற்றால் அந்நாட்டு மக்கள் வங்கிகளில் கடன், இன்சூரன்ஸ் வழியாக பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் இந்த பணத்தை குறிப்பிட்ட தவணைகளில் அவர்கள் செலுத்த மறுக்கிறார்கள். இதன் காரணமாக சுவிஸ் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து The credit Reform association என்ற அமைப்பின் இயக்குனர் Claude Federer கூறியதாவது, சுவிஸில் இதுபோன்ற திவால் நிலைமை 2002ம் ஆண்டு ஏற்பட்டது. தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முடிவில் 4,351 என்ற எண்ணிக்கை மதிப்பில் வங்கிகள் திவால் நிலையை எட்டியது.

இது இந்த வருடத்தின் முடிவில் 6, 527 ஆக மாறும். மேலும் கடந்த 2011ம் ஆண்டை விட தற்போது 13 சதவீதம் அளவிற்கு வங்கிகள் திவாலாகும் வாய்ப்பில் உள்ளது என தெரிவித்தார்.


நன்றி:coolswiss

சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் திவாலாகும் நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது. மிகவும் வலுவான பொருளாதாரம், வளம் செழிக்கும் மலைகளை கொண்ட கோடை வாழிடங்கள் என ஒரு தரப்பில் புகழப்படும் சுவிஸ், மற்றொரு பக்கம் அந்நாட்டு வங்கிகளுக்கு திவாலாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.