A+ A-

நோகியவை தொடர்ந்து ப்ளாக் பெரி நிறுவனமும் விற்பனைக்கு வந்துள்ளது...



நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பிளாக்பெர்ரி நிறுவனம் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது.



நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்திருக்கும் ஃபேர்பேக்ஸ் (Fairfax) என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. இதற்கு பிளாக்பெர்ரி நிறுவனம் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களால், பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை சரிந்ததையடுத்து, கடந்த நிதியாண்டில், அந்த நிறுவனத்துக்கு 6,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, நிறுவனத்தை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.


நன்றி:புதிய தலைமுறை

நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பிளாக்பெர்ரி நிறுவனம் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது.