A+ A-

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பேஸ்புக்கில் ஊடுருவல்

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரின் ஃபேஸ்புக்கில் மர்ம நபர் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:


எனது ஃபேஸ்புக் கணக்கில் ஊடுருவல் நடந்துள்ளது. பேஸ்புக் கணக்கின் ரகசிய குறியீட்டை மாற்றி அதை மர்ம நபர் பயன்படுத்தி உள்ளார். ஊடுருவல் தற்போது சரி செய்யப்பட்டு விட்டது என்றார்.
அமைச்சரின் ஃபேஸ்புக் பக்கத்தில் யூதர்கள் படுகொலையை ஈரான் மறுக்கவில்லை என்பது போன்ற கருத்துக்களை அவர் கூறியது போல் பார்சி மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரின் ஃபேஸ்புக்கில் மர்ம நபர் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.