A+ A-

செல்போன் யூனிட்டை மைக்ரோ சாஃப்டிற்கு விற்ற நோக்கியா....



பின்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா தனது செல்போன் தயாரிப்பு யூனிட்டை 7.17 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

நெட்வொர்க் உள்கட்டமைப்பு, மற்றும் சேவைத் துறைகளை தன் வசம் வைத்துள்ள நோக்கியா தனது செல்போன் தயாரிப்புகளுக்கான அனைத்துக் காப்புரிமைகளையும் 10 ஆண்டுகளுக்கு மைக்ரோசாப்டி நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

செல்போன் தயாரிப்பில் பல மைல்கல்களை எட்டியுள்ள நோக்கியா சமீபமாக சாம்சங், மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் சந்தையில் போட்டியை சந்திக்க முடியவில்லை.

இதனால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திடம் விற்பதே சிறந்த வணிக மாதிரி என்று அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நோக்கியாவில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 32,000 ஊழியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please share to your friends.....

மேலும் இது போன்ற கம்ப்யூட்டர் தகவல்களுக்கு....

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா தனது செல்போன் தயாரிப்பு யூனிட்டை 7.17 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.