A+ A-

ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள் இந்த கதையை.

ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்
 இந்த கதையை.


நான்கு 🕯🕯🕯🕯மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
 இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு
 இருந்தது..!!

காற்றை கண்டதும்...

 'அமைதி‘ என்ற முதல் 🕯மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
 விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த 🕯மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.

 'அறிவு‘ என்ற மூன்றாவது 🕯மெழுகுவர்த்தியும்
 காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது 🕯மெழுகுவர்த்தி மட்டும் காற்று
 வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று 🕯🕯🕯மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது 🕯மெழுகுவர்த்தி
 சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற 🕯🕯🕯மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.

சிறுவன் உடனே..

நான்காவது 🕯மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..

 'நம்பிக்கை' என்றது அந்த 🕯மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
 இழக்கக் கூடாது...!!