A+ A-

முதலாளி நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல ? வாங்க சிரிக்கலாம்..!

 

முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.

'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி ...

'' ஷேவ் பண்றதுக்கு... என் முகம் தெரியுற மாதிரி கண்ணாடி  ஒன்னு வாங்கி வா...'' என்று அனுப்பி வைத்தார்.

வேலைக்காரன் திரும்பி வரவே இல்லை... நீண்ட நேரத்திற்கு பின் வெறுங்கையோடு  வேலைக்காரன் வந்தான்.

 கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி...

'' பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி... ஆனாலும் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல அதுதான் வாங்கல';

'' ஏன்... பெருசாவா இருந்தது..?

'' இல்ல, சின்னதாதான் இருந்தது...''

'' பிறகு ஏன் வாங்கல ...?

'' எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சிது. அதான் வாங்கல...''