A+ A-

300 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த திருபாய் அம்பானி..!

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

 பிறப்பு:

திருபாய் அம்பானி அவர்கள் குஜராத்திலுள்ள மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடா என்னுமிடத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி, 1932 ல் பிறந்தார்.

சிறப்புகள்:

  • திருபாய் அம்பானி  அவர்கள் முதலில் 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
  • இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர்.
  •  தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து “மஜின்” என்ற நிறுவனத்தை துவக்கினார்.
  • மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது.
  • துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார்.
  • 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது.“வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது.
  • இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது.
  • 1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது.
  • காலப் போக்கில், திருபாய் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். முதன்மையான சிறப்புக்கவனம் பெட்ரோலிய வேதிகள் துறையில் இருக்க, தொலைத்தொடர்பு, தகவல்தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தப்பட்டது.
  • அவர் மீது முறையற்ற செயல்களில் ஈடுபட்டார், அரசாங்க கொள்கைகளை தனது சொந்த தேவைகளுக்கு ஏற்ற வகையில் சாதகமாக்கிக் கொண்டார்.
  • ஊடகங்கள் வணிக-அரசியல் தொடர்பு குறித்து பேச முற்படுகின்றன என்றாலும், நாடெங்கிலும் புயல் கிளப்பும் ஊடகப் புயல்களில் இருந்து எப்போதும் அம்பானியின் வணிகக்குடும்பம் கூடுதல் பாதுகாப்பையும் ஆதரவையும் பெற்று வந்திருக்கிறது.

விருதுகள்:

நவம்பர் 2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கெம்டெக் பவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வேர்ல்டு அமைப்புகள் அவருக்கு ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ விருதினை வழங்கின.

2000, 1998 மற்றும் 1996 – ஆசியாவீக் இதழ் வெளியிட்ட ‘பவர் 50 -ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.

ஆகஸ்டு 2001 – வாழ்நாள் சாதனை க்காக தி எகனாமிக் டைம்ஸ் பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டுக்கான விருது வழங்கியது.

இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு (FICCI), திருபாய் அம்பானியை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக த் தேர்வு செய்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா 2000-ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று அவரை “நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக” தேர்வு செய்தது.

இறப்பு:

திருபாய் அம்பானி அவர்கள் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

திருபாய் அம்பானி அவர்கள் குஜராத்திலுள்ள மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடா என்னுமிடத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி, 1932 ல் பிறந்தார். சிறப்புகள்: