A+ A-

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகின்றது.
இந்நிலையில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தண்ணீர் 50 முதல் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.